Sunday, 10 July 2016

சாமியம்மா .--.பாகம் ஒன்று ---

சென்ற வருட டிசம்பர் மாதம் கவுசல்யா ஒஸ்லோ வந்திருந்தாள். இங்கிலாந்தில் உள்ள வேல்ஸ் என்ற இடத்தில் கைனக்கோலோயிஸ்ட் என்ற பெண்நோயியல் நிபுணராக இருக்கும் அவள் என்னை சந்திக்க வந்தது பல நாட்களாகப் போட்ட்டு வைச்ச பிளான் என்று சொன்னாள் .அவளின் அம்மா பர்வதம் மாமி சில வருடங்கள் முன் இறந்துபோனது பற்றி நானும் கேள்விப்பட்டதால் அவளை சந்தித்தேன் .

                                            நானே மனிதர்களை அதிகம் சந்திக்க விரும்பாத, சுவாரஸ்யங்களின் சராசரிக்கும் குறைவான பிறவி. கவுசல்யா எனக்கு அப்பப்ப மருத்துவ டிப்ஸ் தரும் அக்கறையுள்ளவள். அதை விட பழையகால மனிதர்களை இந்தக் காலத்தில் சந்திப்பதில் இடங்களில் ஒட்டிக்கொண்டுள்ள நினைவுகளும் ,நினைவுகளில் ஒட்டிக்கொண்டுள்ள இடங்களையும் தவிர  கதைப்பதுக்கு எதுவுமே இருப்பதில்லை என்பது என்னோட கொள்கையாக இருப்பதால்,முதலில் தயங்கினான்,,ஆனாலும் சந்தித்தேன் 

                                     ஒஸ்லோவில் கடற்கரை ஆடம்பரமாக  வீதியுலா போகும் ஆர்கிற்புரிக்கி  என்ற இடத்தில உள்ள ஒரு விலைஅதிகமான ரெஸ்ட்ரோரெண்டில் அந்த சந்திப்பு ஒரு பின் அந்தி மாலை நிகழ்ந்தது. ஒஸ்லோ பியோட் கழிமுகத்தில் உல்லாசப்பிரயாண கப்பல்களில் வந்து இறங்கியவர்கள் கடற்கரை வீதியில்   தலையை வெட்டித்தள்ளும் விலைவாசியில் இருந்த பாதையோர விலைப்பட்டியல்களை ஆச்சரியமாகப் பார்க்க,தாழப்பறந்த  விப்பர் பறவைகள் இரவுக்கு கடலோடு என்னதான்  செய்வது என்று ஏங்கிக்கொண்டு பறந்துகொண்டிருந்தன 

                                                              வெளியே  கிறிஸ்மஸ்  வருகையை உறுதிப்படுத்தும் உறைபனி அள்ளிக்கொட்டிக்கொண்டிருக்க அதை சின்ன  வாகனத்தில் முன்னுக்கு லைட் போட்டு தேடித் தேடி வழித்துக்கொண்டிருந்தார்கள் .துறைமுகத்தின் அந்தப்பக்கம் இருக்கும் இறங்குதுறையில் மஞ்சள் விளக்குகள் கசிய விட்டுக்கொண்டிருந்த ஒளியை மூடு பனி வடிகட்டிக்கொண்டிருந்தது 

                                            உள்ளே   ரெஸ்டோரோரென்ட் கதகதப்பில் இருந்தது. கவுசல்யா  லிவிலிவிலிவி மார்க்   டெனிமும் மேலே ஒரு பிரென்ச் வூல் சுவேடரும் போட்டு , தலை மயிரை கழுத்துவரை வெட்டி பொப் போல பொம்ம விட்டிருந்தாள் . அடக்கமான கச்சித சிகை அலங்கரிப்பு அவளை ஒரு வைத்தியநிபுணர் என்று காட்டவில்லை . எடுத்த எடுப்பில் பார்க்கும் யாருமே அவள் ஒரு விமானப்பணிப்பெண் என்று சொல்லும்படியாக அலங்காரம் அலாரித்துக்கொண்டிருந்தது 

                                                             கவுசல்யா  ஆங்கிலம் கலந்த தமிலாங்கிழ  மொழியில் தமிழில் கதைக்க மிகவும் விரும்புவது போல முயட்சித்து ழகரம்  ளகரம்  லகரத்தில் தடக்கி தடக்கி விழுந்து எழும்பி உயிர்ச் சொற்களில் உயிரையே விடுவது போலவே   கதைத்துக்கொண்டிருந்தாள்  , ஒருகட்டத்தில்   

                                                  "கவுசல்யா உனக்க்கு நினைவு இருக்கா நீ   ஓ லெவல் பைனல்  டெஸ்ட் எடுக்க வேண்டி இருந்த அந்த வருடம் படுத்த படுக்கையாக விழுத்தது,,,உன்னை புண்ணியக்குஞ்சி சாமியம்மா வீட்டுக்கு கொண்டு போனது ...மசுக்குட்டி மாமிக்கும் உன் அம்மாவுக்கும்  சண்டை  வந்தது ...ஒப்பேரேசன்  செல்லத்துரைக்கு  அலவாங்குக்  குத்து  வயித்தில  விழுந்தது ......"

                                     "   ஹ்ம்ம்,,புண்ணிய மூர்த்தி சித்தப்பா,,,அவரா,,ஹ்ம்ம்,,ஹ்ம்ம்,,அது  யார் செல்லத்துரை மாமா  அவரா...கொஞ்சம் கொஞ்சம் இவர்கள்  முகம்  நினைவு  இருக்கு "

                                   "   புண்ணியக்குஞ்சியை  கழுத்துறையில் வைச்சு சிங்கள ஆட்கள் வெட்டிக் கொலை செய்து  போட்டாங்கள் "

                                 "  ஓ  மை  காட்,,வாட்  ஹப்பின்ட் "

                                  "  அதெல்லாம் விபரமா எனக்கு தெரியாது,,கேள்விப்பட்டேன் அவளவுதான் தெரியும் "

                                "   சோ  சாட்,,,அதென்ன  சாமியம்மா வீட்டுக்கு  என்னைக் கொண்டுபோய் ,,என்னமோ நடந்ததா,,வாட் இஸ்  தட்..டெல் மீ..ப்ளீஸ் "

                               " அங்கேயும்,,அதுக்குப்  பிறகும்  நிறையக்  கூத்து நடந்ததே ,,உனக்கு  சிலநேரம் அதுகள் தெரியாமல் இருப்பதே நல்லது  "

                                   "ஓ ரியலி,,ஐ டோன்ட் ரிமெம்பர்  வாட்  ஹப்பின்ட்  அப்படியா ,,இப் ஐ சே த த்ருத் .......எனக்கு  இது  ஒன்றுமே நினைவு  இல்லையே ,,டூ  யூ  நோ ,,லெட்ஸ்  டெல் மி "

                                             "உண்மையாவா  சொல்லுறாய்,,நான் சொல்லும் பெயர்கள் தன்னும்  நினைவு இல்லையா "

                                        "  நோ,,,,,,நோ.....நோ....ஹானஸ்ட்லி ,,ஐ டோன்ட் நோ "

                                        "  சரி  விடு,,,,அதில  ஒண்டும்  இல்லை."

                                                     "  ஓகே,,லெட்ஸ் பினிஷ் தட் வே..இட்ஸ் பைன் போர் மி ,,என்ன நான் சொல்லுறது ஓகே தானே "

                                         " ஓகே,,கவுசல்யா ,,வேற என்னவும்  சொல்லு,,எப்படி  உன்னோடு வேலை,,என்ன கார் வைச்சு இருக்கிறாய்,,இந்த வருடம் உன் ஹோச்பிடலில் உனக்கு ஹெட் ஒப் த டிபாட்மென்ட்  டீன் வேலை கிடைக்கப்போறதா சொன்னியே எண்ணச்சு அது    "                       
                                               
                                                செய்வினை சூனியம் ஏவல்  என்பது எல்லாம் உண்மையா பொய்யா என்பது போன்ற அனுமானங்களுக்கு அப்பால்  அதை செப்பவர்களும் ,அதையே எடுத்துவிடுபவர்களும் இருந்த ஊரில் அந்த நேரம் தேர்த் திருவிழாவில் சிதறு தேங்காய் அடிச்ச மாதிரி பொம்பர் அடி,செல் அடி ,அந்தச் சமர் ,இந்தச் சமர் என்று யுத்தம் வீட்டுக்கு வீடு வாசல்படியில் செத்த வீடுபோல ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தது 

                                       எவ்வளவுதான் நிஜ வாழ்க்கை ஒரு அந்நிய சூழலில் சலங்கை கட்டிக்கொண்டு சதிர் ஆடினாலும் ஒரு காலத்தில் நடந்து கடந்த பாதையில் சந்தித்த மனிதர்கள் பதிவுசெய்த சம்பவங்கள் அப்பப்ப வந்து வந்து  இருப்பு இங்கே இல்லை வேற எங்கோ பாதிவழிப் பயணத்தில் பறிக்கப்பட்டது போலிருக்கு என்று சொல்லுவது போலிருக்கும் . கொஞ்சம்  உண்மையாகவே சொன்னால் ஏவிவிட்டமாதிரிதான் இருந்தது.

                                          அதையெல்லாம் சொல்லாதவரையில் தொண்டைக்குழியில் என்னமோ வந்து அமுக்குவான் பிசாசு அமுக்கின மாதிரி இருக்கும் .இந்த மாதிரியான பேய்,பிசாசு,பில்லி சூனியம் போன்றவற்றில் எங்கள் ஊரில் அதிகம் கதைக்கப்பட்டுக்கொண்டிருந்த சாமியம்மா வீட்டில் கவுசல்யா வைத்தியம் பார்க்கவேண்டும் என்று விதி எழுதிவைத்ததுதான் நடந்தது.

                                          நேராகவே விசியத்துக்குள்ள வாரேன் , கவசல்யா படிப்பிலே பயங்கரப் புலி. அவள் வயதுக்கு வந்த சில மாதங்களில் என்னவென்று அறிய முடியாத ஒரு நோயால் மாதக்கணக்கில் படுக்கையில் கிடந்தாள். பர்வதம் மாமிக்கு ரெண்டு கையிலும் நாடி விழுந்திட்டுது அந்த சம்பவம் எதிர்பாராமல் நிகழ்ந்தபோது. எப்படியாவது அவளை எழுப்பி அந்த வருடம் மறுபடியும் படிக்க வைக்க பாடாய்ப் பாடுபட்டுக்கொண்டிருந்த போது எங்கள் ஊரில் சண்டை அகோரமாக நடந்துகொண்டிருந்தது 

                                                 பர்வதம் மாமி கவுசல்யாவை பெரியாஸ்பத்திரிக்கு பலமுறை கொண்டுபோய் வாட்டில வைச்சுப் பார்த்தா, அங்கே டாக்குத்தர்மார்  எல்லாவிதமான டெஸ்ட் எடுத்தும் மண்டையைக் குடைந்தும் அது என்ன விதமான நோய்க்குறி என்று ஒரு முடிவுக்கு வரவில்லை.  பெரிய டாக்குத்தர் அய்யா வந்து உயிருக்கு ஆபத்து இல்லை என்று சொன்ன   முடிவோடு ஒரு வாரத்தில துண்டுவெட்டி வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள் , நவீன மருத்துவம் அதுவும் அந்த நேரம் சரிவரவில்லை ,

                                           பிறகு காரணம்தப்பி மரணம் என்று வாசலில் நின்ற பலரை இஞ்சி முரைப்பா கொடுத்து எழுப்பிவிட்ட சிவசொம்புப் பரியாரியிடம் கொண்டுபோனா, அவரும் பித்தம்,கணம் ,வாதம் நாடியெல்லாம் பிடிச்சுப்பார்த்தும் ஒரு துப்பும் பிடிபடவில்லை . சிவசொம்புப் பரியாரி பழைய செய்யுளில் எழுதின செகராசசேகரம் ,பரராசசேகரம் என்ற ரெண்டு  புத்தகத்திலும் சில பக்கங்களை  பிரட்டி பிரட்டி பார்த்தார். அவளவுதான் அதுக்குமேல ஒன்றும் சொல்லவில்லை. பரியாரி ஒருவிதமான கடுக்காய் கலரில் இருந்த கசப்புக் கஷாயம் நாலு வேளை தவறாமல் சிரடடையில் அரைச்சுக் குடிக்கக் கொடுத்தார் .

                                                   கவுசல்யா விழுந்து படுத்த ஒரு கிழமையில் ரெண்டு கையும் சரணவாதம் வந்தமாதிரிக் குறண்டத்தொடங்க ,கண் ரெண்டும் மஞ்சள் காமாலை வந்தமாதிரி மஞ்சளா வெளிறி  மோட்டுவளையில் என்னவோ பார்த்து மிரளுவது போல  நிலைகுத்தி ஏறக்குறைய அவளால் இனி இயல்பாக எல்லா  இளம் குமர்ப் பிள்ளைகள் போல இயங்கமுடியமா என்ற கேள்வி அந்த வருத்தம் போலவே  ஒவ்வொருநாளும்  வலுத்துக்கொண்டிருந்தது .

                                            பர்வதம் மாமியும் கவுசல்யாவும் தான் அந்த வீட்டில இருந்தார்கள்.மாமிக்கு ஒரு மகன் இருந்தான். அவன் ஒரு இயக்கத்திலே இணைந்து இந்தியாவுக்கு ட்ரைனிங் எடுக்கப்போனான்.போனவன் போனதுதான் வரவே இல்லை. மாமி விசாரிக்க களத்தில நிக்குறான்,பின் தளத்தில நிக்குறான் என்று அந்த இயக்கம் சொன்னது.கருத்து முரண்பாட்டில் உள்வீட்டு வேலையாக  நித்திரைப்பாயில் வைச்சுப் போட்டுத் தள்ளிப்போட்டு சவுக்கம் தோப்பில் தாட்டுப்போட்டாங்கள் என்றும் ஒரு கதை அடிபட்டது .

                                                            அரசாங்க புடவைக்கு கைத்தொழில் திணைக்களம் நடத்திய நெசவு பாடசாலையில் வீவிங் டீசர் ஆக அரசாங்க வேலை செய்ததால் மாத முடிவில் சம்பளம் என்று  பர்வதம் மாமி வாழ்க்கையை ஓரளவு நகர்த்திக்கொண்டிருக்க முடிந்தது . அவாவின் புருஷன் கொக்கட்டிச் சோலை இறால் பண்ணையில் டெக்னீசியன் ஆக இருந்தார். இனக்கலவர சண்டைகள் தொடங்கிய நேரமே அவரை அந்த றால் பண்ணையில் ஒருநாள் அவரையும் அதில வேலை செய்த பலரும் படுகொலை செய்யப்பட்டார்கள் .

                                                      வாழ்க்கைத் துணை இழந்து விதவையாகி வெள்ளைச் சேலையில் அமங்கலமா இருந்தாலும்   அதுக்குப் பிறகு பர்வதம் மாமியின் ஒரே ஒரு கனவு கவசல்யா .அவளையாவது உருப்படியா படிப்பித்து ஒரு நிலைக்கு கொண்டுவரவேண்டும் என்றுதான் நினைத்துக்கொண்டு இருந்தா. ஆனாலும் வாழ்க்கைப் பாதைகள் வழிக்குறிப்புக்கள் இல்லாத ஒற்றையடியில் தான்  எதிர்காலத்தை வரைந்து வைக்கும் என்று அவாவுக்கு தெரியவில்லை 

                                               புண்ணியக்குஞ்சி ஒரு விதத்தில் பார்வதம் மாமிக்கு உறவு முறை.  ஊருக்குள்ள நல்ல அட்வைஸ் சொல்லும்படியான ஒரு மனிதர் அவர்.இல்லாத பிள்ளைக்கு பேர் வைக்கிறது போகாத ஊருக்கு வழி சொல்லுறது போன்ற  பல குழப்பங்கள் அவரைச் சுற்றி இருந்தாலும் அனுபவம் என்பது அவரோடு எப்பவுமே சமாந்தரமாகப் பயணிக்கும் ஒன்று. அவரும் வந்து ஒருநாள் கவுசல்யாவை படுத்த படுக்கையாய்ப்  பாத்துப்போட்டு , கோடாப் போட்ட பாதி சுருட்டை கொடுப்பில  பத்த வைச்சு இழுத்து விட்டுப்போட்டு  

                                                     " எடி ஆத்தை,  என்னடி பிள்ளை இப்படி அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு விழுந்து கிடக்கிறாள் , நீ ஏமாலாந்திக்கொண்டு நிக்கிறாய் "

                                            "  நானும் குஞ்சி முடிஞ்சவரை  எல்லா வைத்தியமும் பாத்திடேன் ,,ஒண்டும் சரி வருகுது இல்லையே  குஞ்சி "

                                                 "அடியே,,பிள்ளை அடிச்சு வளத்தின மாதிரி பாட்டிலே கிடக்குறாள் ஆவெண்டு  வெள்ளி பார்த்தது காணும்,,இப்ப இதுக்கு என்னவும் செய்ய வேணுமே "

                                         "ஓம் குஞ்சி எனக்கு ஒண்டுமே பிடிபடுகுது இல்லை,  கடவுள் என்னத்துக்கு  இந்தப் பிள்ளையப்போட்டு இந்தப் பாடுபடுத்துறார்  எண்டுதானே  எனக்கும் விளங்கவில்லை  குஞ்சி "

                                " எடி ஆத்தை ,,ஊருக்குள்ள செய்வினை சூனியம் காதும் காதும் வைச்ச மாதிரி  நடக்குதுடி ..இதுக்கு மலையாளத்தான் மருந்துதான் சரி வரும் போல இருக்கு, "

                                             " என்ன குஞ்சி  இப்பிடி சொல்லுறியள்,,மெய்யாதானா சொல்லுறியள் குஞ்சி "


                                 " ஓமடியாத்தை , பிள்ளைக்கு ஆரோ சூனியம் வைச்சுப் போட்டிடங்கள் போல கிடக்கு இவள் மல்லாந்தி மல்லாந்தி முழிக்கிறதை பார்க்க , "

                                       " என்ன குஞ்சி சொல்லுறியால் ,,கேட்கவே பயமா இருக்கே ,,எங்களுக்கு ஊருக்குள்ள எதிரிகள் யாரும் இல்லையே குஞ்சி "

                                  "  எடி  ஆத்தை,,உனக்கு  ஒரு நாசம் அறுப்பும் விளங்காது,,இங்க எரிச்சல் பொறாமை பிடிச்சதுகள் தானே ஊருக்குள்ள அசுமாத்தம் இல்லாமல் அலுவலைக் கொடுக்குதுகள் "

                                  " மெய்யாதானா சொல்லுறீங்கோ  குஞ்சி "

                                   "   உனக்கு ஒப்பரேஷன் செல்லத்துரை வயல் வரப்பு சண்டை என்னெண்டு முடிஞ்சது தெரியுமே,,சும்மா உலகம் தெரியாமல் விசர் கதை கதைக்காதை,,எடி ஆத்தை  ,,நான் சொல்லுரத்தைக் கேள்,,இதுக்குள்ள என்னவோ பிரகண்டம் இருக்கு "

                                "எனக்குதான் அப்பிடி ஒரு சொத்து பகையோ,,வேற பகையோ  பிக்கல் பிடுங்கல் ஒண்டும் இல்லையே ,, சரி,,குஞ்சி,,இதுக்கு இப்ப என்ன பரிகாரம் செய்யிறது எண்டு சொல்லுங்கோவன் "


                                    "  ஓம்டி  ஆத்தை , சிங்கள நாட்டில இதுக்கு சொல்லப்பட்ட மருந்து கமே வெதமாத்தாய மத்துரு  செய்வான் ,,அல்லது பண்சாலையில் ஹாமத்துறு  செய்வான் ,,சொல்லி ஒருகிழமையில் நிமித்தி எடுத்துப்போடுவாங்கள் இங்க வெச்சு ஒன்றும் செய்ய முடியாது போல இருக்கு "

                                   "  சிங்கள நாட்டுக்கு கொண்டுபோக எனக்கு என்ன வசதி இருக்கு,,சொல்லுங்கோ பார்ப்பம் குஞ்சி "

                                       "   ஹ்ம்ம்,,,எதுக்கும் ஒருக்கா சாமியம்மா பார்வை பார்த்தால் நல்லம் எண்டு நினைக்கிறன்,,மனுஷி வேப்பிலை அடிச்சு உருவேற கலைவந்து ஏவல் என்னவும் இருக்கு என்றா சொல்லும்,,,நான் அதுதான் முதலில் செய்யவேணும்  எண்டு சொல்லுவன் "  என்று சொன்னார் ,, 

                                                    
                                   சாமியம்மா வீட்டில் சாமியம்மா ஒரு சாதாரண பெண் போல இருக்கவில்லை. கொஞ்சம் தெய்வத்தன்மை மனித வடிவில் வந்திறங்கி ,நம்பிக்கைகள் பொய்த்துப்போன மனிதர்களின் நம்பிக்கையில் பல மாற்றங்களை ஏட்படுத்தியது .அதுக்கும் கடவுள் அனுக்கிரகம் போன்ற விபரங்கள் பின்னணியாகத் தேவை இல்லாமலே இருந்தது .சாமியாடுற பொம்புளை என்று அவாவை ஊரில சொன்னாலும் மனுசி பலருக்கு தெய்வம்போலத்தான் இருந்தா .

                                         ஒருகாலத்தில் வட்டிக்கடை நடத்தின பேரம்பலம் என்பவரின் மனைவிதான் சாமியம்மா. அவர்கள் வட்டிக்கடை அவர்கள் வீட்டிலேயே இருந்தது. முன்னுக்கு  ஜன்னல் கம்பிகளில் கிராதி போட்டு அதுக்கு உள்ளே ஒரு கிராதி போட்டு அதுக்கும் உள்ளே இரும்புக்கு கிராதி போட்டு ஜெயில் போல இருக்கும் அந்த வீட்டுக்கு உள்ளே போறது என்றாலே மூன்று இரும்பு  ஆமைப் பூட்டுக்கள் திறந்த பிறகுதான் போக முடியும். அவ்வளவு அரண்மனைப் பாதுகாப்பு இருந்தது ,   

                                          இயக்க ஆரம்ப நாட்களில் ஒருநாள் ஒரு இயக்கம் அவர்கள் வீட்டுக்கு வந்து துவைக்கைக் காட்டி லாக்கரில் இருந்த எல்லா அடைவு நகையையும் அள்ளிக்கொண்டு போட்டார்கள். அதுக்குப் பிறகு பேரம்பலம் தாடி வளர்த்து அந்த ஜன்னல் கம்பிக் கிராதியை இறுக்கிப்பிடிச்சு வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பார் .கொஞ்ச மாதங்களில் ஒருநாள் அந்த ஜன்னல் கிராதிக் கம்பியை இறுக்கிப் பிடிச்சுக்கொண்டு இருந்த நேரம்  நெஞ்சுக்க என்னமோ செய்யுது என்று நெஞ்சை பிடிச்ச ஒரு நாள் சீவன் போட்டுது. 

                                                           அதுக்கு பிறகு அதுவரை சாதாரண குடும்பப் பெண் ஆக இருந்த சாமியம்மா ஒரு முடிவோடு சாமியம்மா ஆகினதா தான் சொல்லுவார்கள். அல்லது வேற காரணங்கள் இருக்க முடியுமா என்று யாருக்கும் எதுவும் சொல்லும்படியாக காரண காரியங்கள் இல்லை  . மூன்று இரும்பு ஜெயில் கிராதிகளையும் உடைச்சு எறிஞ்சு போட்டு ஓவென்று வாசல்கள் திறந்து விட்ட போதுதான் அது சாதாரணமான ஒரு வீடுபோல வந்தது 

                                      பழங்கிணற்றடி வீராளி அம்மன் கோவிலுக்கும், பெட்டிசம் பாலசிங்கம் வீட்டுக்கும் எல்லையாக இருந்தது சாமியம்மா வீடு. மற்ற இரண்டு பக்கமும் வடக்கால உடையார் வளவும், தென் திசையில் மதியாபரணம் டீச்சர் வீடும் எல்லைகளாக இருந்தது. வாழை,கமுகு,தென்னை,ஆடாதோடை  என்று சோலைபோல இருந்த அந்த வீட்டில் சாமியம்மா தனியா இருந்தா .அந்த வீடு விட்டலாச்சாரியார் படங்களில் வரும் பேய் வீடு போல இருக்கும்.

                                             ஜடா மாலை,முத்துமணி மாலை என்று நிறைய பாசிமணி மாலைகள் அள்ளிப்போட்டு , நெற்றியில் பெரிய அம்மன் குங்குமப் பொட்டு வைச்சு நடுவகிட்டு தொடக்கத்தில் கஸ்தூரி மஞ்சள் போட்டு வைச்சு    சாமியம்மா சீத்தாபழம் போல செழிப்பான பெண்மணி. கருத்தகொழும்பான் போல சதைப்பிடிப்பான தேகம். நாலு மணித்தியாலம் அசையாமல் அனுங்காமல் சப்பானிக்கட்டி இருப்பா. கலையாடும் நேரம் காளி அம்மன் வாலாயம் முகம் முழுதும் வந்து ஏறி இருக்கும் 

                                                  கழுவித் துடைத்து  சுத்த சைவம் ,மாதத்தில் அரைவாசிநாட்கள் அம்மன் விரதம் ,மடி ஆசாரம் பார்த்து மஞ்சள்தண்ணி தெளித்த வீடு , நடுஹாலில் பூசை புனஸ்காரம் என்று கலையாடுறதுக்கு நிறைய அம்மன்,ஆதிகேசவன், வீரப்பத்திரர் சாமிபடங்கள் அடுக்கி வைச்ச உயரம் குறைந்த அகலமான  மரமேசை  , நிறைகுடம் , வேப்பிலை, சந்தனம், குங்குமம்,திருநீறு , சாம்பிராணி ,தேங்காய்சிரடடைகள், பூசுமஞ்சள்  ,கப்பூரம் , கைமணி , அதுக்கு முன்னாலதான் சாமியம்மா சப்பாணியில் நாரி வளையாமல் இருப்பா. சாமியம்மா வெத்திலை போடுறது மேளக்காரர் வெத்திலை போடுறதைவிட சுவாரசியமா இருக்கும் . 

                                                          ஒரு பெரிய வெத்திலையை எடுத்து அதை மூன்று தரம் பிரட்டிப் பிரட்டி தொடை சேலையில் துடைத்து கடவிரலையும் சின்னிவிரலையும் இறுக்கி அதன் காம்பை நறுக் என்று  சுண்டி எறிஞ்சுபோட்டு ,ஐயங்கார்  பொட்டு வைக்கக் கிண்ணத்தில் கிள்ளின  மாதிரி சுட்டுவிரலில் வாச சுண்ணாம்பு தொட்டு  எடுத்து அதை வெத்திலையின் பின் பக்கம் என்னவோ எழுதுவதுபோல விரலால் கீறி ,மிக நேர்த்தியான வட்டமா உள்ள சீவல் நாலே நாலு தேர்ந்து எடுத்து நடுவில வைச்சு கடை வாயில அடைவா 

                                                               கடைவாயில் அடைஞ்ச தாம்பூலம் வலதுபக்கக் கொடுப்பில தள்ளிக்கொண்டு நிக்கும். அதை மெல்லவே மாட்டா . மற்றக் கொடுப்புக்கு மாற்றவும் மாட்டா . கொம்பொறிமூக்கன் பாம்பு தவளையை பிடிச்சு வாயில கவ்விக்கொண்டு மிரட்சியில் பார்ப்பது போல இருக்கும். உண்மையில் அந்தநேரம் சாமியம்மாவைப் பார்க்கவே பயமா இருக்கும். சாமியம்மாவும் மற்றவர்கள் பயப்படும்படியான ஒரு வெறித்தனமான பார்வைதான் அப்போது பார்த்துக்கொண்டிருப்பா .

                                   செவ்வாயும் வெள்ளியும் பயனை நடக்குது என்ற பெயரில் தான் சாமியம்மா வீட்டில் கலையாடி தேசிக்காய் வெட்டு நடக்கும்.பயனை பாடப் பல பெண்கள் போவார்கள். ஆண்கள் அதிகம் போவதில்லை. சில விசேட நாட்களில் கழிப்பு கழிக்க என்று ஒரு சம்பவம் நடக்கும் அதுக்கு குறிப்பிட்ட அந்தக் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கு பற்றுவார்கள் . நிழலாக ரகசியம் பேசுவது போல அது மர்மமாகவே இருக்கும் 

                                             பெட்டிசம் பாலசிங்கம் வீடு பின் வளவில் சாமியம்மா வீட்டு வெளியோடு முடியும். பெட்டிசம் கலையாடுறது சாமியாடுறதுக்கு ஜென்மத்து எதிரி.  

                                "  இந்த அறுதலிதான் வெள்ளடியான் சேவலில் மந்திரிச்சு விட்டு அதைக் கழுத்தைச் சுத்தி கூரைக்கு மேலால எறிஞ்சு எண்ட ராசாத்தியின் உயிரை எடுத்துப்போட்டாள், சூனியக்காரக் கிழவிக்கு இன்னும் சாவு வருக்குதில்லயே "

                                           என்று வெளிப்படையாகவே சொல்லித்திரிவர்    அவரோட பொஞ்சாதி இறந்ததுக்குக் காரணமே சாமியம்மா என்று சொல்லிக்கொண்டு திரிந்தார். ஆனால் அதை எந்த அரசாங்க டிப்பாட்மென்ட் இக்கும் பெட்டிசம் எழுதி வேலை நடக்காது என்று நல்லா தெரியும் அவருக்கு. அதனால சாமியம்மா பற்றி இல்லாததும் பொல்லாததுமா வதந்திகளை எப்பவுமே கிளப்பிவிட்டுக்கொண்டிருப்பார். அவர் பொஞ்சாதி புற்றுநோய்  வந்து இறந்தாத்தான் ஊருக்குள்ள எல்லாருக்கும் தெரியும்.அதுதான் உண்மையும் ,

                                          அந்த வீட்டின் பெரிய  நடு ஹோலில் பயனை நடந்தாலும்,அந்த ஹாலின் ஒருபக்கம் உள்ள ஒரு அரை பலவருடமா பூட்டப்பட்டே  கிடப்பது போல அந்த அறைக்கதவில் சிலந்தி வலை கட்டி இருக்கும் . எப்பவோ ஒரு காலத்தில் அந்தவீடு மங்கலமா இருந்த போது ஒரு பொங்கலுக்கோ,தீவாளிக்கோ கட்டித் தொங்கவிட்டு இருந்த மாவிலை காஞ்சு சருகாகி ஒரு நூலில் அந்த கதவுக்கு மேலே இருக்கும். அந்த அறைக்குள் என்ன இருக்கு என்று யாருக்குமே தெரியாது 

                                           சாமியாவுக்கு ஜால்றா போட ஒரு பயனைக் கோஸ்ட்டி இருந்தது. அதில டோல்கி கோபாலு என்ற எங்கள் உள்ளூர் இசைக்கலைஞர் டோல்கி மேளம் வாசிப்பார். அவர் ஒரு பிரபலம் இல்லாத ஒரு இசைக்குழுவின் மேடைகளிலும் சினிமாப் பாட்டுகளுக்கு டோல்கி வாசிப்பார். சாமியம்மா பயனையில் அவர் டோல்கியை கொஞ்சம் உருவேற்றும் நாதத்துக்கு கிட்டிடவா கொண்டுவர அதை துந்தனா மேளம் போல வாசிப்பார்,,அந்த நாதத்தில் பயனை எகிறி எழும்பி அகோரமா சாமியாடும் 

                                             சாமியம்மாவே டோல்கி கோவாலுக்கு மியூசிக் டைரக்ட்டர் போல ஆவேசமாக நல்ல பாம்பு படம் எடுத்து சீறுற மாதிரி ,,உஸ்ஸ்ஸ்   உஸ்ஸ்ஸ்ஸ்    என்று மூச்சை முன்னுக்கு ஓங்கி வெளிய விட்டு 

                                   " டேய்  கோவாலு ,,,ஏத்தடா  நாலு கட்டைக்கு ,  காளியம்மா  நாதம்  பாடுது,,,டேய்  கோவாலு ,,ஏத்தடா  அஞ்சு  கட்டைக்கு,,டேய்  கோவாலு உறுமி உறுமி வாறாள் டா  அங்காள அம்மன்,,,டேய் கோவாலு,,இப்ப  ,,இப்ப ,,,உஸ்ஸ்ஸ்    உஸ்ஸ்ஸ்ஸ் ..கோவாலு  ஏத்தடா  ஆறு  கட்டைக்கு,,அம்மன்  அகோரமா  ஆடி  வாரா  டா "

                                     டோல்கி கோவாலுக்கு அந்த அளவுப் பிரமாணங்கள் நல்லா விளங்கும்,,அல்லது  சாமியம்மாவின் ஆவேசம்  விளங்குமா என்பதும் தெரியாது.ஆனால் டோல்கியில் வார் அறுந்து தோல் பிஞ்சு போறமாதிரி கோவாலு போட்டு முழக்குவார் .

                                                    பயனை தொடங்குமுன் பயனைக்கும், சாமியாடுறதை விடுப்புப் பார்க்கவும் வந்திருக்கும் எல்லாரோட முகங்களையும் சாமியம்மா நல்லா உற்றுப் பார்ப்பா. முகத்தில் ஓலைச்சுவடி வாசிக்கிறமாதிரி அவாவின் கண்கள் ஓடும் ,சிலரை மட்டும் சிங்கள ஆமிக்காரன் செக் பொயிண்டில்  ஐடண்டிக் கார்டில் தமிழ் பெயரைக் கண்டவுடன தமிழரை மட்டும் பெருவிரலை சொடுக்கி கைகாட்டி  அங்காலே வா என்பானே அதுபோல சைகை செய்து எழுப்புவா 

                                                     அப்படி எழுப்பிக்கொண்டு வாற ஆட்களை வீட்டுக்கு வெளியே முற்றத்தில் நிட்பாட்டி வைச்சு அவர்களைச் சுற்றி கொக்கச்சத்தக்கதால் வட்டமாக கோடு நிலத்தில கீறிப்போட்டு அதுக்குள்ள நிக்கச் சொல்லுவா. பிறகு உள்ளே போய் கொஞ்சநேரம் கழிச்சு தேசிக்காய் மூன்றை எடுத்துக்கொண்டு வந்து வெட்டி மஞ்சள் தட்டிலே போட்டு பிரட்டி எடுத்து அதை அந்த வட்ட த்துக்குள் நிக்கிற எல்லார் உச்சம் தலையையும் தேச்சு வலது இடது பக்கமா துப்பிப்போட்டுத்தான் உள்ளுக்கு எடுப்பா 
                                                         

                                     செய்வாய் வெள்ளியில்   இரவு பன்னிரண்டு மணிவரைக்கும் தான் சாமியம்மா வீடு பயனையில் அதிரும். சரியாகப் பன்னிரண்டு மணிக்கு குறுக்க அரிவாள் போட்ட மாதிரி சத்தம் அடங்கிப்போடும் . பன்னிரண்டு மணிக்கு சாமியம்மா ஒரு முடித்  தேங்காயில் கப்பூரம்  பத்த வைச்சு  அதை உள்ளங் கையால அடிச்சு அணைச்சுப்போட்டு , ஒரு முழுத் தேசிக்காயை வாயில அடைஞ்சு அதை சக்கையாக  நெரிச்சு துப்பிப்போட்டு இந்தக் கடைசி வசனம் சொல்லுவா 

                                         "   இனிக் ,,காடேறி சுடலை மாறன்  வாற நேரம்,,,இதுக்கு மேலே உங்களை நான் காபாந்து செய்ய முடியாது,,அதுக்கு எனக்கு கட்டளையும் இல்லை,,எல்லாரும் பாதுகாப்பாய் வீடு வாசலுக்குப் போய்ச் சேருங்கோ "

                                                 இதோட  அமைதி ஆகிடும் சாமியம்மா வீடு. அமைதி என்றால் சவுக்காலை போல அமைதி. அந்த அமைதி பயப்படுத்தும்படி இருக்கும். ஒரு சின்னக் குண்டூசி விழுற சத்தமும் வராது. இரவெல்லாம் என்னதான் நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. இருட்டுக்கே தெரியாது. அவ்வளவு  அனுமாஸ்ஸா அமைதிக்குப் பின்னால் நிறைய இந்த உலகத்துக்குச் சம்பந்தம் இல்லாத இன்னொரு உலகத்தின் நாடகம் நடக்கும் .

                                                               புண்ணியக்குஞ்சி ஒருநாள் சாமியம்மா வீட்டுக்கு போய் இருக்கிறார்.சாமியம்மா பூசைக்கு ஆயத்தம் போல தியானம் போல இருந்து இருக்கிறா, புண்ணியக்குஞ்சி ஒரு பக்கமா குந்தி இருக்க,கண்ணை முழிச்சுப்பாத்திட்டு 

                                                   "   இதார் பேச்சு மூச்சு இல்லாமல் குத்திக்கொண்டு இருக்கிறது,,பார்க்க சித்தப்பு போல இருக்கே "    


                                                  " ஓம் ஓம் ,,நான் தான்,,ஆனால் பேச்சு மூச்சு இல்லை என்றால் இப்ப ஆள் முடிஞ்சலோ இருக்கும்,,நான் தான் கையைக் காலை உதறிக்கொண்டு இருக்கிறேனே  "                                                                     

                                  " என்ன சித்தப்பு,,இந்தப்பக்கம் தனியா வந்து மண்டிக்கொண்டு இருக்கிறியள் எண்டு கேட்டேன்  "

                                       " அட பேந்துபார்...ஆடு மாடுகள் தான் கூட்டமா  வரும்  தெரியும் தானே,,நான் வேங்கைப்புலி எப்பவும் தனியாத்தானே  உலாவுறது  அது  தெரியாதோ உங்களுக்கு "

                                        "  அப்ப பின்ன இங்க பயனை பாட வாற ஆட்களை   மாடுகள் ஆடுகள் எண்டுறியளோ,,இந்தப் பிலாக்கணக்  கதை  தானே  சித்தப்பில மற்ற ஆட்களுக்கு  கொதிவரப் பண்ணுறது "

                                   "  இல்லை  இல்ல,,அம்மா,,,கோவிக்காதையுங்கோ ,,ஆணியில்  பொம்புளை பார்க்கப்போனவனுக்கு  எட்டுச் சோடி செருப்பு ஆடியில தேஞ்சு போன மாதிரி,,நான்  வாயைத்திறந்தால் வம்பாதானே எல்லாரும்  நினைக்குதுகள் "

                                      " அது தானே உண்மை,,சித்தப்புக்கு வாயிலதானே  சனியன்,,அதுதானே ஊர் முழுக்க சனம் பறையிறது "

                                        "  ஓ,,வெறும் வாயில கொட்டாவி  விடுற சனம்களுக்கும் வாயைப் போட்டு ஆட்டவும்  அவல் வேணும்தானே "

                                         " உந்தக்  கிரந்தம் மட்டும் இன்னும் சித்தப்புவை  விட்டுப்  போகுதில்லை "

                        " அட அட  அதுக்கும்  எண்ணவும் காய்வெட்ட போறிங்களோ "

                                   " சரி,,உந்த விண்ணணாத்தை அங்கால  வைச்சுப்போட்டு,,வந்த விசயத்தை  சொல்லுங்கோ  சித்தப்பு,,எனக்கு அலுவல் ஆயிரம் கிடக்கு "

                               " எங்கட பர்வதம் தெரியும்தானே ,,அவளிண்ட பிள்ளைக்கு  என்னமோ காத்துக்கறுப்பு ராவுப்பட்ட நேரம் அண்டிப்போட்டுது போல கிடக்கு "

                                                       " ஓம்,,அதுவே வந்த அலுவல் "

                           " ஓம்,,ஓம்  பொடிச்சியை மல்லாக்கா விழுத்திப்போட்டுது .. "

                                 "  அவள்  சடங்கு வைச்சு  குமரி  ஆகிடாள் இல்லையா,,அப்பிடித்தான்  கேள்விப்பட்டன்,,மெய்தானே "

                                              "    ஓம் ஓம் குமரிதான் , ஒரு கையோடு இந்தக்கிழமையில் ஒருநாள் பார்வை பார்த்தால் நல்லம்,,கொஞ்சம் பிள்ளை அலங்கோலமாய்க் கிடக்கிறாள்   "

                                                         என்று கவுசல்யா நிலைமையை சொல்ல, சாமியம்மா ஒருக்கா சாமிப் படங்களைப் பார்த்துப்போட்டு  ,தீட்டுத்  துடக்கு இல்லாத ஒருநாள் அவளைக்கொண்டுவரச் சொல்லி ,ஒரு லிஸ்டில் இன்ன இன்ன சாமான் எல்லாம் வேண்டிக்கொண்டு வரச் சொல்லி எழுதிக்கொடுத்தா . அதுக்குப்பிறகு கொஞ்சநேரம் புண்ணியக்குஞ்சியோடு ஊர் விடுப்புக் கதையில் கொஞ்சம் கேட்க ,எப்பவும் போல புன்னியக்குஞ்சி அவரோட திரைக்கதைகளில் கொஞ்சம் அவிட்டுக் கொட்டிப்போட்டு வந்திட்டார் .

                                                                   அந்த வாரத்தில் வந்த வியாழக்கிழமை கவுசல்யாவை குளிப்பாட்டி கொண்டுபோய் சாமியம்மாவுக்கு முன்னால கிடத்த, சாமியம்மா வந்து கொஞ்சநேரம் ஒன்றுமே சொல்லாமல் பல வருடமா  பூட்டிக் கிடந்த அறையை பார்த்திட்டு, அந்த சிலந்திவலை கதவை மூடின அறையை கொஞ்சநேரம் சந்தேகமாய் பார்த்திட்டு,

                                               ரெண்டு விசியம் சொன்னா ,

                                                  அதில முதல் சொன்ன விசியம் ஓரளவு நம்பும்படியாக இருந்தது . பார்வதம் மாமியின் பின் காணியில் வடமேட்கு  மூலையில் ",,,சாமவேத  பாதாளம்  பதம் ஏழும் பண்ணிய திருட்டுக் கட்டியை .... மண்வெட்டியால் தோண்டிப்பாக்க சொன்ன  ......".அந்த  ரெண்டாவது விசியம்  பிடரி மண்டையில் உலக்கையால் அடிச்ச மாதிரி   தூக்கிவாரிப் போட்டது... 
,
.
..தொடரும் ....... 

                                                                       

Thursday, 16 June 2016

ஒருவிதத்தில் கதைகள்தான்,

நேர்மையாக என் படைப்புகளைத்  தண்ணீரிலும் , பிறகு சலவைத் தூளிலும்  போட்டு  அலசோ அலசென்று அலசி ஆராய்ந்து நேரத்தை செலவழித்து. பின்னர் அதை லைக் செய்து  , அதற்கு ஏற்றாற் போல சிறந்த கமெண்ட் எழுத வேண்டுமே என்று கடுமையாக மூளையைப் போட்டுக் குழப்போ குழப்பென்று குழப்பி, ஒரு வழியாக கமெண்ட் எழுத தட்டு முட்டென்று ஒழுங்காகக் கணனியில்  எழுத  முடியாத   தமிழில் தட்டச்சு செய்து  கருத்துப்  போட்டு  உற்சாகம் தரும் நண்பர்களே என்னோட ஸ்பெயின்  நாட்டைச் சுற்றிப்பார்த்த அனுபவங்கள்  எல்லாமே  ஒருவிதத்தில் கதைகள் தான்,  

                                               என்ன வரலாறும், அனுபவமும் சேர்ந்த   தெற்கு   ஐரோப்பாவில் உள்ள  ஸ்பெயின் என்ற நாட்டின் மூன்று முக்கிய நகரங்களான பார்சிலோனா, மாட்ரிட், செண்ட் செபஸ்தியான்  நகரங்களின்  வழிகள்  எல்லாம் சேர்ந்தே நடந்த பிரயாணக் கதைகள் தான். அதில்க்  கனவுகள்,  நம்பிக்கைகள் பொய்த்துப்போன ,தென் அமரிக்க கண்டதை  ஒருகாலத்தில் கட்டி ஆண்ட ஸ்பானியர்களின் இன்றைய நிலையின் அவலமான காட்சிகள் கசப்பாக இருக்கலாம்  ! 

                                                                  பார்சிலோனா நகரத்தின் மக்களின் இன்றைய நிலைமை பற்றிய என்னோட  பார்வைகள் ,தேடல்கள் தான் இதில்  அதிகம். அந்த நகரம் ஒரு  ஒப்பனைகள் இல்லாத  மேடை நடிகையின் நாடகங்களின்  நளினப் பிரமிப்புக்கள்  ஒவ்வொருநாளும் சலிக்கவிடாத   வாழ்வின்  ஒப்பற்ற  உற்சாகங்களை  நிரப்பிவிடும்  நகரம்.  அதை  உறங்காத  காதல்  நகரம் என்றுதான் சொல்லவேண்டும் . மிச்சம் ஸ்பெயின் நாட்டின் முக்கியமானமாட்ரிட், செண்ட் செபஸ்தியான் என்ற   இரண்டு நகரங்களின் அனுபவம் ! 

                                                       மூன்று வருடங்களின் முன் பார்சிலோனா  போயிருக்கிறேன். அப்போது பார்த்த உற்சாகம் இந்த முறை  இல்லவே இல்லை.  பணக்கார  டூரிசஸ்டுகள் அலை மோதிய வீதியெங்கும் ரகசியப் பொலிசார்கள்  , ATM காசு எடுக்கும் BANK ங்குகளின் முன்னால் " ஐரோப்பிய யூனியனில் " இருந்து உடனடியா வெளியேற சொல்லி கெட்டவார்த்தையில் திட்டுக்கள் நிறைந்த வாசகங்கள், ஜன்னல்களில் சோகமாக எட்டிப்பார்க்கும் தூங்கும் முகங்கள், சோர்ந்துபோன " காளை ஏற்ற" வீரர்கள் சதுக்கங்களில் சுற்றி இருந்து கொண்டு  " ஆண்டவன் புண்ணியத்தில் நல்லது நடக்கும் " என்ற எதிர்கால கனவுகளில் கைகளை முறுக்குகிறார்கள்,

                                               நல்ல நினைவுகள் எல்லாமே  பிய்ந்து போன பின்னும்   கடற்கரைகள் மட்டும் இன்னும் பழைய களியாட்டங்களில்  போதையோடு அலையடிக்குது , வெள்ளை  மணலில் கவுண்டு கிடக்கும் அரை நிர்வாணப் பெண்கள், பிள்ளையார் வண்டிய தடவிக்கொண்டு கையில "பீர் " போத்திலோட ஜெர்மன் டூரிஸ்ட்டுகள் ," மெளனம் அழகான மொழியென" ஒருவர் மீது சாய்ந்து " கலியாணம் கட்டாமல் பிள்ளைப் பெறுவதுக்குக்  "கனவுகாணும் இளம் காதலர்கள்,

                                                     எண்ணப் பறவை சிறகடிக்க வண்ணப் பறவைகளுக்கு நொறுக்கு தீனி வீசுபவர்கள், பிளாஸ்டிக் கோப்பையில் " சென்ஜெரோ .சென்ஜோரே " எண்டு  ஐரோப்பிய யூனியன்  கொடுத்த கடனோடு வட்டியையும் சேர்த்தே எடுத்துக்கொண்டு   பின்வாங்கியதால் குனிந்து வழிந்து பிச்சை எடுக்கும் நடப்பு நிலவரத்தில் வறுமையாகிய பிச்சைச்காரர்கள், வளையங்களில் குத்துக்கரணம் அடிக்கும் கோமாளிகள் , அவர்களை  உலகம் மறந்து ரசிபவர்களுக்கு இடையே வளைந்து, நெளிந்து ,நுழைந்து வேவு பார்க்கும் " பிட் பொக்கட் " திருடர்கள், 

                                                        80 களின் பழைய " பிளமிங்கோ "பாடல்களை கிடாரில் தடவி , பெட்டியில் மேளம் அடித்து வாசிக்கும் "ரும்பா கதலானா " தெருவோர இசைக் குழுக்கள்,  வியர்வை வழிய வழிய  உல்லாசப்பயணிகள்  விரும்பிக் கேட்ட கியூபன் மரிம்பா ரிதத்தில் வரும் லத்தினோ  பாடல்களையும் அவர்கள் சளைக்காமல் பாடினார்கள் .அவர்கள் அழகாக ஆட்டிப்,பாடி ,வாசிப்பதை " ஆ " எண்டு பார்த்து ,ரசித்து, காசு போடாமல், சத்தமில்லாமல் போகும் வெள்ளைக்காரர்கள், அந்த இசை தெருமுனையில் மழுங்கிப் போய் ,,மங்கிக்கொண்டு  திரும்ப ,அதன் தொடர்ச்சியாக இன்னொரு ஸ்பானிஸ்  ரிதம் அடுத்த தெருவில் ஆரம்பிக்கும் . 

                                                            காலாற நடக்க நீண்ட கடற்கரை , அந்தக்  கரை எனக்கும் நுரை தள்ளும் கடல்,  அதன் மீது விழும் சூரியனின் கதிர்கள் தெறித்து  ஆகாசம் நீலமாக , நீரலைகளில் நளினம் காட்டும் வைடூரிய மணிகள் என்ன காரணமோ  தெரியவில்லை, இந்தமுறை  குறைந்தது இவளவு என்னைச் சுற்றி நடந்தும் ,ஏனோ தெரியவில்லை என் மனம் என்னிடம் இல்லை ! ஒரு விடுமுறையிலும்  மனஅழுத்தங்களுடன் வாழ்வதில் அப்படி என்னதான் சுவாரசியம் இருக்கிறதென்று தெரியவில்லை.

                                                             ஹ்ம்ம் .பேசிக்கொண்டு இருப்பதுக்கு எல்லா ரெஸ்டாரென்ட் , பப்புகளில்  பெண்களுக்கு மட்டும் குறைச்சல் இல்லை.  அவர்கள் நீலக் கண்களில் நட்பு எப்போதும் மிகப் பரிட்சயமாக பரிசம் போடும் நேரங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கு. ஆனாலும் .என்னத்தை சொல்ல , விடுமுறையில் தனிமையாய்  இருப்பதின் பலன்களை அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறேன்.கால  நேரப்  பிரிவின் வதை. அதை நேற்று இரவு சொன்ன ஒரு பெண்ணின் அன்பின் வதையில் , என்னை  விமான நிலையம் வரை வந்து  வரை வழியனுப்பியவர்களிடம் நான் தனியப் போவது விருப்பமில்லை என்பது எதிரொலித்தது  ! 

                                                             எப்படியோ ஒரு ஆங்கிலப் புத்தகத்தை வேண்டி  அந்தப் புத்தகத்தை லயித்து படித்துக் கொண்டிருக்கலாம் எண்டு நினைத்து வந்தது சாத்தியமாக முடியவில்லை.. சந்தித்த  ஐரோப்பிய, வட அமரிக்க  ஆங்கிலம் பேசும் உல்லாசப் பிரயாண  நண்பர்களுடன் ,நண்பிகளுடன் உரையாடிக் கொண்டிருப்பதில் உற்சாகமாக  ஒண்டுமே இல்லை .  கடல்கரை ஓரங்களில்  " கத்தலோனா ரெஸ்டாரென்ட்  " க்கு வெளிய விளையாடிக் கொண்டிருக்கும் ஸ்பானிஷ்   குழந்தைகளின் நீலக் கண்களை மட்டும் பாத்துக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு ,

                                                          நீல மேகம் எங்கோ அவசரமாக ஊர்வலம் போகும் வானத்தில் , மைத்திய தரைக்கடல் மெடிடெர்னியன் சூரியன் மட்டும் வஞ்சகமில்லாமல் குளிர் உறைந்த தோலை எரிக்கிறது , அந்த எரிவு யாழ்பாணத்தை மறுபடியும் நினைவுகளில் பத்த வைக்குது.  இரவு நிலவு காயும் நேரம் ஏதாவது நடக்கலாம் என்ட நம்பிக்கையில் ," டிஸ்கோ டான்ஸ் " போய்ப் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன் .பார்சிலோனா நகரம் இரவில்தான் விழித்துக்கொள்கிறதே 

                                                          "வாழ்க்கை இனிக்கும்" என சொல்வதற்கு இந்தமுறை பார்சிலோனாவில் நிண்டு சிரித்துக்கொண்டு சொல்ல வாய்வருகுதில்லை !.......காத்திருக்கிறது கனவும், நினைவும், எங்கிருந்து எங்கு போவதென்பதுதான், தற்போதைய குழப்பம் போலத்தான் முதல் ரெண்டு நாளும் இருந்தது. ஒரு நாடோடி போலவே அலைந்தேன். வாசனை நிரம்பிய அந்த நகரத்தின் வீதிகளில் ஆயிரம் விசியங்கள் பார்ப்பதுக்கு ரெண்டு பக்கமும் காத்திருந்தது என்பது என்னவோ  உண்மைதான்.!.


இன்று  ஸ்பெயினில்  மிதமான  வெயில் மட்டும் நல்லா இருக்கு , மற்றதெல்லாம் " சப் " எண்டு இருக்குது. சூரியனைப் பார்க்காத என் உடம்பு வெளிறிப் போகத் துவங்கிவிட்டாலும், நேற்று இரவு "டிஸ்கோவில " புட்வைசர் பியரையும், மெக்சிகன் "திக்கிலா"வையும் வெறுப்பில கலந்தடிச்சு இப்ப அடி வயிறு நோகுது. அதன் பக்கவிளைவுகளில் மோசமானது ஒற்றைத் தலைவலி என்ற மைகிரேன் அதுக்குக் கைவைத்தியமே  இன்னொரு 
புட்வைசர் பியரும் , மெக்சிகன் "திக்கிலா"வும் தான் என்பதால் அன்றைய  நாளை அப்படிதான் தொடக்கவேண்டி இருந்தது 

                                                      ஸ்பெயினில எனக்கு பிட்டிகிட்டி போல  உலக மகா உத்தமமான  நண்பர்கள்  என்று யாருமே  கிடையாது அதனால் அவர்களின்   தத்துவ  அட்வைஸ்களை  எல்லாத்துக்கும் பலதிசையில் இருந்து எதிர்பார்க்க வேண்டிய பிரச்சனைகளில்லை . கடவுள் புண்ணியத்தில ஸ்பெயின்ல  குடும்ப கவுரவத்தைக்  கமக்கட்டில காவிக்கொண்டு திரியிற  சொந்தக்காரரும் இல்லை. உறவென்று சொல்ல இரவலாகவும்  யாருமில்லை .  அதால நேரம் காலம் இல்லாமல், என்னுடைய உளறல்களை யாரும் கேட்டு, "குட்டு உடைபடாமல் " குடித்துக் கொண்டிருக்கலாம். 

                                                       ஒரு உல்லாச மேடையில்  விடுமுறை அதால வேலை பற்றிய கவலையற்று நேரம் பற்றிய பதற்றங்கள்  இன்றி  மழைக்கால அட்டை போல சுருண்டு கிடக்கலாம். ஆனால் வேலை நாட்களில் வருவதுபோல ஏனோ  தூக்கம் வருகுதில்லை.  கலைந்து கிடக்கும் படுக்கை விரிப்பில் மல்லாந்து கிடந்தபடி ,"மடிக் கணனியில்" எப்போது வேண்டுமானாலும் நிறைய எழுதலாம் போல இருந்தாலும் , "என்னைப்பார் ,என்னைப்பார் " எண்டு ஆயிரம் விசியம் நடகுது , சுற்றி நடக்கும் சம்பவங்களை சுவாரசியமா பார்கிற ஆர்வம்,  அதை எல்லாம் எழுத என்னவோ ஆர்வம் கொடுக்குதில்லை! 

                                                                  வெளியே வெண் மணல் கடட்கரையில் விரித்து வைக்கப்பட்டிருக்கும் "வெயில் நிழல் குடையின்" கீழ் யாருமே இல்லாமல் தனித்துக் கிடக்கின்றன ஓய்வு எடுக்கும் வாங்குகள், கறுப்பு மேகங்கள் இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியங்களைச் சொல்லி வெருட்டுகின்றன ! சலனமில்லாத ஸ்பானிஷ் தொலைக்காட்சியில் காலங்காத்தாலயே   "கிளின் ஈஸ்ட்வுடோட" வெஸ்டேர்ன் "கௌ போய் " படம் அதுபாடுக்கு பார்க்க யாரும் இல்லாமல் ஓடுது , அதில் குதிரைகள் பிடரி மயிர் எழும்ப மெக்ஸ்சிகோ  அமரிக்க  எல்லைவரை பறக்கின்றன  

                                                         வெள்ளையும் சொள்ளையுமா "தவிடுக் குருவிகள்" போன்ற நிறத்தில் உள்ள  ஸ்பானிஷ் குருவிகள்  மட்டும் அங்கயும்,இங்கயும், அதுக்கு மேலாலையும், இதுக்கு மேலாலையும் ,கண்டபாடுக்கு " க்ரோஸ்" பண்ணி, பார்சிலோனா "டுரிஸ்ட் கைட் " புத்தகத்தை வாசிக்க விடாமல் கவனத்தை சிதறடிக்கின்றன ! ஸ்பானிஷ்  குருவிகள் பற்றி சொல்வதுக்கு என்ன இருக்கு . அவைகள் பறக்கும்போது விசிறிவிடும் காற்றில் ஒருவித மயக்கும் வாசனை பரவிக்கொண்டிருந்தது 

                                                               அந்நிய நாடுகளில் இருக்கும் போது ,அடுத்தவர்கள் என்ன செய்கிறார் என்பதை கவனிக்க துணிவு வருகிறது. அதுவும் ஒரு உல்லாசப் பிராணியாக  இருப்பதால் நாலு விசியங்களை நேராகவே பார்க்கும் ஒருவித அதிகார அங்கீகாரம் கிடைத்தது  போல தயக்கங்கள் கொஞ்சம் தள்ளியே நிற்குது. என் மேசைக்குப் பக்கத்தில் உள்ள மேசையில் அமர்ந்திருக்கும் பெண்ணைவிட எதிரில் உள்ள ஊஞ்சலில் காலை "எம்பி எம்பி "தள்ளி ஆடும் பெண் அதிகம் உடல் மொழியில் ஈர்க்கிறாள்! 

                                                                       எதிரில் மேசையில் அமர்ந்திருக்கும் பெண்ணின் முகத்தை கூச்சம் இல்லாமல் நேருக்கு நேர் பார்க்க பயமா இருக்கு, உஞ்சலில் ஆடும் பெண்ணின் முழு உருவத்தையும் சில நேரங்களில் தலை முதல் கால் வரை அவள் என்னென்ன செய்கிறாள், எந்த மொழியில் முணுமுணுக்கிறாள், எப்ப sms அனுப்புகிறாள் , எப்படி வரும் sms களுக்கு வாய்குள்ள சிரித்துக்கொள்கிறாள் என்பது வரை நேரம் போவதே தெரியாமல், "டுரிஸ்ட் கைட் " புத்தகத்தை ஆர்வமாய் பார்ப்பது போல் அங்குலம் அங்குலமாய் ரசிக்கலாம் போல இருக்கு. 

                                                        இதுக்கு மேல விவரிப்பதில் என்னோட கவுரவம் அடங்கி இருப்பதால் அவளவுதான் இப்போது  சொல்லுகிறேன் . விடுமுறையில் தன்னும் பலவிதமான எண்ண ஓட்டங்களை கொஞ்ச நேரம் நிறுத்தி வைத்து  மனதை ஒருமுகப்படுத்த முடியவில்லையே என்று ஜோசித்தாலும் குற்றவுணர்வுகள் இல்லாமல் இல்லை.! எனக்கான பாதைகளில் எங்கே எல்லைக்கோடுகள் வரையப்பட்டிருக்கு என்ற தன்னுணர்வு தெரியும்வரை பிரச்சினைகளில் அதிகம் தலை போடும் அவசியம் இல்லை என்கிறது பார்சிலோனா நகரம்,

                                                           இண்டைக்கு உலகப் புகழ்பெற்ற  மொடேர்ன் ஆர்ட் ஓவியத்தின்   தந்தை எனப்படும் ஆர்டிஸ்ட் பபெலோ பிக்காசோவின் "  காலி எனபர "  என்ற  "சொர்கத்துக்குப் போகும் வாசல் " எனத்  தமிழில் மொளிபெயர்க்கக்கூடிய அவரின்  வழிநடத்தல்  படியே  கட்டிய  ஒரு  கலைக் கோவில் ,மற்றும் அவரோட உலகப்புகழ்பெற்ற  ஓவியங்கள் உள்ள  "மாடர்ன் ஆர்ட் முயுசியம்" பார்க்கப் போகபோகிறேன். இப்படிக் கலையே வாழ்வின் நிலையென்று  சொல்லிக்கொண்டு  வெளிக்கிடுகிறேன் . எது எப்படியோ மறுபடியும் சொல்லுறன் என் மனம் என்னிடம் இல்லை! .

                                                             கடற்கரையில் நேற்று இரவு ஸ்பனிஷ் கிடாரிஸ்ட் ஒருவர் தனிய இருந்து "பல்லவி இல்லாமல் பாடுகிறேன்"  போலவே மெட்டு உள்ள ஒரு ஸ்பானிஸ்  பாடலைப் பாடிக்கொண்டு இருந்தார். யாழ்பாணத்தில O/L எடுத்து போட்டு ,ரிசல்ட் வரக்காத்திருந்த போது , காதல் மட்டும் நாடி,நரம்புகளில் எகிறிப்பாய , துரதிஸ்டவசமாக   காதலிக்க யாரும் இல்லாமல் இருந்த நேரம், வெலிங்கடன் தியட்டரில்  பார்த்த ," உயிரே உனக்காக ", தமிழ் படத்தில் இந்த தமிழப் பாடல் மெலோடி நினைவில வர ,இன்று youtube இல் தேடினேன் அந்தப்  பாடல் வந்தது, பாடலுக்கு முதல் திரையில் வரும் அன்பான வரிகள் ஏனோ இண்டைக்கு ரெம்பவே அர்த்தம் உள்ளவை போல இருந்தது ...

.                                                          ஸ்பெயினில் என் அழகையோ .அழகின்மையையோ காட்ட நினைத்தாலும்,பார்க்க யாருமே இல்லாதமாதிரி ஒரு வெறுமை , என்னதான் எதிரில் ரசித்தாலும், சுற்றி வந்து ஈர்த்தாலும் கடைசியில் , உபயோகமாய் வாழ்க்கையைப்பற்றி அதிகம் சிந்திக்க வைக்கிறது பழைய வீட்டு நினைவுகள்!  வீட்டை இன்னொரு அந்நிய  நாட்டில் அலையும்போதுதான்  அதிகம் உணரமுடிகிறது ,ஒவ்வொரு சின்னச் சின்னச் சம்பவங்களின் முடிவிலும் அந்த நிகழ்வின் காரண காரியமாக  வீடுதான் வந்து ஒட்டிக்கொண்டுவிடுகிறது  



 இன்று  கொஞ்சம் நான்  இப்போது  நடந்து கடக்கும் நகரத்தைப் பற்றிச் சொல்கிறேன் . முக்கியமாக இன்று ஒரு தேவாலயம் பார்க்கப் போனேன். ஸ்பெயினின் இரண்டாவது பெரிய,ஆனால் காலாசர முக்கியம் வாய்ந்த, முற்காலத்தில்" கத்தலோனா" எண்டு அழைக்கப்பட்ட இன்றைய பார்சிலோனா நகரத்துக்கு ,உலகம் எங்கும் இருந்து உல்லாசப் பிரயாணிகளை அழைக்கும்  "sagrada familia" கட்டிடம், பார்பதுக்கு "திகில்" படங்களில் பேய் வசிக்கும் இடம்போல இருந்தாலும், அது   ஒரு  கிறிஸ்தவ தேவாலயம் .

                                     1882 இல் கட்டத்தொடன்கிய அந்தக்   " கத்தலோனா " ஸ்டைல் மொடேர்ன் தேவாலயம் 2030 இல் தான் கட்டிமுடியும் என்கிறார்கள்!  கட்டிடக்கலை  நவீனமான  உலகத்தில்  இவளவு நீண்ட வருடங்கள் இந்த உலகத்தில ஒரு கட்டிடம் கட்டப்படுவது இது ஒன்றுதானாம்.அப்படி என்ன அதில இருக்கு என்றால் அது வடிவமைக்கப்பட்ட மாதிரியே அதை கட்டிமுடிப்பதில் உள்ள சவால்கள்தான் இவளவு காலத்துக்கும் காரணம் என்றார்கள் 

                                  இதை வடிவமைத்த ,1852 இல் இதே பார்சிலோனா நகரத்தில், ஒரு ஏழ்மையான கத்தோலிக்க மதபற்றுள்ள குடும்பத்தில் பிறந்த ,அந்தோனியோ கைடி ,இன்றுவரை " மொடெரன் ஆர்கிடெக்சர் " அதிசம் எண்டு அழைக்கப்படுவதால் உலகம் எங்கும் இருந்து கிளாசிகல்,மொடேர்ன் " ஆர்கிடெக்சர்" படிக்கும் மாணவர்களுக்கு இது ஒரு மக்கா,மதினா போல இருப்பதால், வந்து ,சுற்றிப் பார்த்து ஒவ்வொரு " Catalan Modernisme " விசியதையும் ஆரவமாகப் பார்த்து, குறிப்பு எடுகின்றார்கள்!

                                       கைடி இதை அவரோட 35 வயதில் கட்டதொடங்க, வடிவமைத்து மட்டும் தான், இப்ப வேறு பல ஆ ர்கிடேக்சர்கள் ,தொடர்ந்து அவரோட" Neo-Gothic period பிளானை " வைத்து 2030 இல கட்டி முடிபபத்தாக உறுதி எடுத்துள்ளார்கள். அந்த தேவாலயத்தை வடிவமைத்த  கைடியின் ஆதார  வரைபடங்களை கண்ணாடியில் தலைகீழாகப் பிடித்துப் பார்த்தால் தான் அதன் அமைப்பே விளங்கும் என்கிறார்கள்  

                                                 பல ஆர்கிடெக்சர் விசியன்களில் ஆதாரமகாவே புதுமை செய்துள்ளார் கைடி , பாவனைக்கு உதவாத பிங்கான் கோப்பைகளை, பாவித்த இரும்புகள்,வேறு என்ன என்ன "ரீ -சய்கிளிங் "செய்ய முடியுமோ அவளதையும் வீண் ஆகாமல், எல்லாவற்றையும் ,அங்க,இங்க செருகி , "முப்பரிமான "கலை அம்சம் ஆக்கியுள்ளார். அது அந்த தேவாலயத்தின் ஒவ்வொரு சின்ன சின்ன கற்களிலும் காணமுடிகிறது 

                                      அந்தோனியோ கைடி இந்த தேவாலயத்தை வடிவமைத்து " இது கடவுளின் வாசஸ்த்தலம் " எண்டு சொன்னதால்,அவரை "கடவுளின் ஆர்கிடெக்சர்" என்கிறார்கள் ஸ்பனிஷ் மக்கள்! அப்படி சொன்னது மட்டுமல்ல இன்றுவர இந்த தேவாலயம் கட்டுவதுக்கான செலவு பார்சிலோன நகர மக்களின் பொதுப்பணம்! 

                                                       அந்தோனியோ கைடி, கலியாணமே கட்டாமல், மனதை ஒருமுகப் படுத்தி , இதை வடிவு அமைத்து இருக்கிறார் ,ஆனாலும் அவர் வாழ்ந்த விதம் கொஞ்சம் குழப்பமா தான் இருக்கு,தனிமையில் ,சமுகத்தில இருந்து ஒதுங்கி , நேரம் கிடைக்கும் போதெல்லாம் தேவாலயத்தில் பிராத்தனை பண்ணிக்கொண்டு , ஆடம்பரம் இல்லாமல் ஒரு பிச்சைகாரன் போல வாழ்ந்திருக்கிறார்.

                                                                அவரோட 72 வது வயதில் ,ஒரு சாலை விபத்தில் இறந்துபோக,யாரோ ஒரு பிச்சைகாரன் போல அவர் இருந்ததால, அலட்சியமான பார்சிலோனா மக்கள், அவர் யார் எண்டு தெரியாமல் , கவனிக்காமல் விட , அம்புலன்ஸ் வண்டி தாமதித்து வர,அவர் சில மணித்தியாலங்களில் இறந்து போய் விட்டாராம்,அதன் பின் செய்தி கசிய, இன்ருவரை ஸ்பெயின்ல் நடந்த மிகப் பெரிய ஊர்வலம் அந்தோனியோ கைடியின் மரண ஊர்வலம் என்கிறார்கள்.

                                                         இந்த முடிவுறாத , அவரின் வாழ்நாள் வடிவமைப்பை, அவர் இரவும், பகலும் கண்ட கனவின் தொடர்ச்சியா , sagrada familia தேவாலயத்தின் முதல் நிலத்தடி தளப்பகுதியில் அவரோட பூதவுடலை அடக்கம் செய்து இருக்கிறார்கள் பார்சிலோனா மக்கள்.!

                                                       இந்த  மிகச் சிறந்த மொடேர்ன் ஆர்கிடெக்சர், அந்தோனியோ கைடி, இறப்பதுக்கு சில வாரம் முன் ஒரு குறிப்பு ,தான் ஏன் ,எல்லாரையும் போல இல்லாமல் ,விதியாசம்கா வாழ்ந்தேன் என்று எழுதி வைத்ததை ,அவரோட கல்லறையின் அருகில் ஸ்பானிஷ்ல் எழுதி வைத்திருந்தார்கள்,.அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு இப்படி தொடங்குகின்றது...".My good friends are dead; I have no family and no clients, no fortune nor anything. Now I can dedicate myself entirely to the Church......".
                                                            

ஸ்பெயின் விடுமுறை அனுபவதில் முக்கியமானது,இந்தமுறை பார்த்த , சனிக்கிழமைகளில் மட்டும் நடக்கும் " காளை அடக்கி மடக்கும் " வீர தீர விளையாட்டு! நீங்களும் அதுபற்றிக் கேள்விப்பட்டு இருக்கலாம். என்னோட அபிமான எழுத்தாளர் ஏர்னெஸ்ட் ஹெமிங்க்வே இதை பற்றி அவரோட எல்லா நாவலகளிலும் குறிப்பிட்டு இருந்தாலும், இந்த விளையாட்டை வைத்து , அவர் ஸ்பெயின் பொம்பலொனாவில் சில வருடம் வசித்து எழுதிய" The Sun Also Rises" வாசித்தபோது, ஒரு நாள் இதைப் போய் பார்த்தே ஆகவேண்டும் எண்டு நினைத்தேன்

                                              பலர் இன்றுவரை அந்த நாவலை அவரின் சிறந்த நாவல் எண்டு சொல்கிறார்கள். ஸ்பெயினிற்குப் பெருமளவு உல்லாசப் பிரயாணிகள் வரவும் இந்த வீர தீர விளையாட்டு ஒரு காரணமாக இருக்கு. நான் போன சனிக்கிழமை அந்த அரங்கில் உலாவிப் பார்த்தபோது உல்லாசப் பிரயாணிகள் அதிகம் இல்லை, உள்ளூர் ஸ்பானிஷ் மக்கள் நிரம்பி இருந்தார்கள்

                                                  அரங்கின் ஓரத்தில் ,காலுக்கு மேல காலைப் போட்டு கொண்டிருந்த, " டைட்டானிக்" படத்தில வாற "கேட் வின்சிலோ" போல முகமுடைய ஒரு அழகான ஸ்பானிஷ் பெண் அருகில் போய் பவ்வியமாக இருந்தேன். அவள் என்னைப் பார்கிறதை விட்டுப்போட்டு மாடுகள் எகிறிப் பாய்கிரத்தையும், அதை திரத்தி ,சிவப்பு சீலையால் அதுகளை ஏய்க்கும் வீரகளையும் கண்கொடாமல் மெய்மறந்து பார்த்துக்கொண்டு இருந்தாள்!

                                      ஒருக்கா மட்டும் என்னைப் பார்த்து சிரித்த சமயத்தில்,நானும் சிரித்து

                                      "உனக்கு இந்த விளையாட்டு ரெம்ப்பப் பிடிக்கும் போல இருக்கே ",

                                                          எண்டு சொன்னேன், அவள்

                                        "இது எனக்கு உசிர்,என்னோட பாய்ப்ரெண்ட் இது விளயாடுகிரான் "

எண்டு மைதானத்தில் நின்ற ஒரு இளம் "காளை அடக்கி மடக்கு " வீரனைக் காட்டினாள்,

                                           " ஒ ,அப்படியா , இது ரெம்ப ஆபத்தான விளையாடுப்போல இருக்கே "

                                                          எண்டு சொல்ல,சொன்னமாதிரியே, ஒரு காளை மாடு ஒரு வீரனை கொம்பால இடிச்சு, காத்தில தூக்கி எறிஞ்சு ,காலால ஏறி முதுகில உளக்க ,மற்ற வீர்கள் அந்த காளையை ,சிவப்பு சீலையை அங்கால இங்கால காட்டி,மாட்டை திசை திருப்பி,அந்த வீரனை தூக்கிக்கொண்டு போக, அம்புலன்ஸ் "நோய்ன்க் ,நோய்ன்க் " எண்டு கூவிக்கொண்டு வந்தது.

                                                 என் அருகில் இருந்த அந்தப் பெண் அதை சும்மா திரில் படம் பார்க்கிறமாதி ,சுவிங்கத்தை சப்பிக்கொண்டு,இடைக்கிடை , சுவிங்கத்தை பலுன் போல வாயில ஊதிக்கொண்டு , சுவாரசியமா பார்த்துக்கொண்டு

                                                          " இது இடைக்கிடை நடக்கும், இப்படிக் காயம் பட்டு ,முறிந்து பல வீரர்களின் கை,கால்களில் இரும்புத் தகடுகள் பொருதுவார்கள் , உனக்கு தெரியுமா ,அவர்கள் ஆசுபத்திரிய விட்டு, வீட்டை போகாமல் முதலில் இங்கதான் திரும்பி வருவார்கள், அவளவு "அதிரினளின் கிக்" அவர்களுக்கு இந்த விளையாடில் "

                                                    என்று சொல்லி

                                               " நீ எந்த நாட்டவன்,,,இந்தியாவா ,,"

                                                    " இல்லைப்பா,,நான் ஸ்ரீலங்கா என்ற நாட்டவன், ஆனால் இப்ப ஐரோப்பாவில் நாட்டில்லாத அரசியல் அகதியாக வசிக்கிறேன் "

                                         " உங்கள் ஊரில் இப்படி எல்லாம் விளையாட்டு இல்லையா ? "

எண்டு என்னைப் பார்க்காமல் கேட்டாள் ,

                                                 நான் " ஜல்லிக்கட்டு எண்டு ஒண்டு இருக்கிறதா கேள்விப்படேன், மற்றப்படி எங்கள் ஊர்ர் ஆம்பிளையள் மாடு மேய்க்கத்தான் லாயக்கு "

                                                         என்றேன் , அவள் சிரித்து,

                                                     " இது பரவாயில்லை , இன்னுமொரு இடத்தில, வெள்ளிக்கிழமைகளில் நடக்கிறதில் ,காளைமாட்டை அடக்கிரவன்,அந்த மாட்டை கடசியில் வாளாள குத்திக் கொன்று,அதன் காதை வாளால் அறுப்பான்"

                                  என்றாள் ,நான் சுவாரசியம் இல்லாமல்

                                  "பாவம் அந்த மாடுகள் ,அதைப் பற்றி நான் படித்திருக்கிறேன், எர்னெஸ்ட் ஹெமிங்க்வே அதை கவலையா எழுதியிருக்கிறார், அதால் தானோ என்னவோ அவர் தன்னைதானே சுட்டு தற்கொலை செய்தார் போல "

                              என்றேன் , அவள்

                                "வாவ்,ஹெமிங்வே ,எனக்கும் பிடிக்கும், உங்கள் ஊரில் மாட்டை கடவுளாக வழிபடுவார்களாமே ,உண்மையா ?"

                                 "இந்துக்கள் என்ற சமயத்தவர்களுக்கு காளை மாடு புனிதமானது ,,பசுமாட்டை இன்னும் அதிகமாக நேசிப்போம் "

                                  "  அப்படியா  ,,ஏன்  அப்படி,,இங்கே ஸ்பெயினில் அப்பிடி எல்லாம் இல்லை  "

                                   " பசுமாடு  பால்  தருமே "


                               "  அட அட அட ,,அது  பெரிய விசியமா ,ஆடும் தானே பால்  தருகிறது,ஸ்பெயினில் ஆட்டுப்பால் மிகவும் பிரபலம் அது உனக்குத் தெரியுமா  "

                         "  மாடு  அம்மா  அம்மா  என்று கத்தும்,,,அது எங்களுக்கு எங்கள் அம்மாவை நினைவுபடுத்துவதால் ,,நாங்கள் பசுமாட்டை எப்போதும் வணங்குவது  பா ."

                              "   ஒ ,,அப்படியா  இது  நல்ல  லாயிக் ஆக இருக்கு...அம்மா  என்றால் யாருக்குத்தான் பிடிக்காது ,,சொல்லு பார்ப்போம் "

                                   "உன்னோட நீலக் கண்கள் அழகா இருக்கு,, மை   லவ்விங்  ஸ்பானிஸ் ஆயிஸ்  என்று  என்ஜெல்பேர்க் ஹம்பர்டிக் பாடிய  பாடல்  தெரியுமா  "

                               "வாவ்,,,,அந்த  பாட்டு  உலகம் முழுதும்  கலக்குது,,தெரியும் பா...ஸ்பானிஸ்  அயிஸ் ,ஹ்ம்ம்...என்ஜெல்பேர்க் ஹம்பர்டிக்  ,,ஹ்ம்ம்,,அவரோட  குரல்  ஸ்பானிஸ் பெண்களின் நீலநிறக் கண்களைவிட கிறங்க வைக்கும் இனிமைப்பா "

                               "உண்மைதான்,,அதை  நான்  எப்போதும் அவதானிப்பேன்  " 

                                   என்றேன் ,அவள் அதன் பின் என்னைப் பற்றி  எனக்கு  முக்கியம் இல்லாத என்  ஊர் ,பேர் ,தொழில், பற்றி ஆர்வமாக விசாரித்து, முக்கியமான நான் "கேர்ள் ப்ரெண்ட்" இல்லாமல் தன்னம் தனியா இருக்கிறேன் எண்டதைப் பற்றி ஒண்டுமே கேட்கவில்லை  .
             
                                         அவள் ஸ்பானிஷ் மக்களுக்கேயுரிய வெளிப்படையான நட்பான பெண் போல இருந்தாள், அவளிடம் ஸ்பெயின் "காளை அடக்கி மடக்கும்" பல விசியங்களை கேட்டேன், அழகாக விவரித்து சொன்னாள் , நான் அவள் சொல்லுறதை சின்னக் குழந்தைகள் கேட்பது போலக் கேட்டுக்கொண்டு,முற்றும் துறந்த முனிவர் போல அவளைப் பார்த்துக்கொண்ருந்தேன் .....

                                                      அவளின் " புசுக்கு புசுக்கு" எண்டு சுருண்ட தலை முடியையும் , அகன்ற பெரிய நீலக் கண்களையும், மா நிற கலரில் இருந்த அவளின் வட்ட முகத்தையும், அளவுக்கு அதிகமா "மஸ்கார "போட்டிருந்த இமைகளையும், ஹிட்லர் போல நீண்ட கிளி மூக்கையும் ,மேல் வரிசையில் வரிசை தவறிய ஒரு தெத்துப் பல்லையும், பாம்பு போன்ற நீண்ட கழுத்தையும்,அதுக்கு கீழே இரண்டு மாலைதீவு செவ்விளனியையும் ,அதுக்கு நடுவில ஓடும் மகாவலி கங்கையும், .........இதுக்கு மேல வேண்ட்டம்பா . .....

.                                    அந்த உரையாயடலின் இறுதியில்

                                          " உனக்கு ஒரு ஜோக் தெரியுமா ,அந்த கடசியில் வாளாள குத்திக் கொல்லும் காளை மாட்டின் "....."இரண்டையும் எடுத்து ,இங்குள்ள ஒரு பேமஸ் ரேச்டோறேண்டில் அவித்து விற்பார்கள்,அதுதான் பொம்பலூனா ஸ்பெயினில் விலை கூடிய உணவு"

                                               என்று சொல்லி வாயைத் திறந்து சிரித்தாள்,,நான் புரியாமல்

                                                "இது ஒரு ஜோக்கா ?" என்றேன் ,அவள் .

                                                "இல்லை, சொல்லுறன் கேள் ,

                                   " சரி சொல்லு "

                                    "என்னோட ஆங்கிலம் உனக்குப் புரியுதா,,,எனக்கு ஸ்பானிஷ் தான் ஒழுங்காப் பேசமுடியும் "

                                " இல்லை,,உன்னோட ஆங்கிலம் அமர்களமாக இருக்கு "

                                   " அப்படியா,,,தேங்க்ஸ்,,கிராசியஸ் மொச்சோஸ் கிராசியஸ் "

                            அதென்ன கிராசியஸ் மொச்சோஸ் கிராசியஸ்,,,அந்த அமரிக்கரின் பெயரா "

                                 " இல்லை,,ஸ்பானிஸ் மொழியில் அப்பிடி சொன்னால் நன்றி,,மிகவும் நன்றி என்று அர்த்தம் "

                                                         " சரி,,அந்த .......ஜோக்கை சொல்லுப்பா "

                                                " ஒரு அமரிக்கர் இதைக் கேள்விப்பட்டு,அந்த ரேச்டோறேண்டுக்கு போய் , அவித்த உருளைக்கிளங்கு போல இருந்த படம் போட்ட அந்த விலைகூடிய இரண்டு அவித்த காளை மாட்டின் "...." மெனுவை ஓடர் பண்ணி இருக்கிறார், "

                            " ம்,,,,பயங்கரப் பசியில இருந்து இருப்பார் போல "

                           " ஹ்ம்ம், அவர் ஆர்வமாக சாப்பிட ரெடியான போது ,அங்கு வேலை செய்த பரிமாறும் பெண் , இரண்டு பிலாக்கொட்டை சைசில் உள்ள "....." களை பிளேடில் அவர்முன் வைக்க,அவருக்கு கோபம் வந்திட்டுது ,"

                            " அதென்ன சுத்துமாத்து "

                                        " அவர் கோபமாகி , நீங்கள் , வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில் , மடக்கி அடக்கப்பட்டு ,தோற்கடிக்கப்பட்ட காளை மாட்டின் "......"இரண்டும் உருளைக்கிளங்கு போல இருந்த படம் போட்ட மெனுவைப் பார்த்துதான் நானே ஓடர் பண்ணினேன் ,இது என்ன இவளவு சின்னதா இருக்கே?" என்று கோபமாகக் கேட்டாராம் "

                                " அப்புறம் "

                                                                      " அந்தப் பரிமாறும் பெண் இயல்பாக, நாங்க என்ன சார் செய்யிறது, சிலநேரம் காளை மாடு வெல்லுதே எண்டு சொன்னாளாம் ,"

                                " ஹஹஹஹஹ "

                                "அட,,உனக்கு நல்லா ஜோக் விளங்குதே "

                                                     " ஹஹஹஹ "

                                    " போதும்பா,,,அதிகம் சிரிக்காதை..காளை .மாடுகள் ஒருவிதமா கலவரமா உன்னைப் பார்க்குதுகள் "

                                    என்டு சிரிக்காமல் சொன்னாள் .அந்த நீலநிறக் கண் ஸ்பானிஸ் பெண்!.......


ஸ்பெயினின் உள் நாட்டு யுத்தத்தில் இறந்தவர்களில் "மியூசியத்தில் "மனிதாபிமானம் ஒரு கொடூரத்தின் பின்னணியில் கன்னத்தில் அறைகின்றது . எங்கள் தாய்த் திருநாட்டில் நடந்தது போலவே, எல்லா விதத்திலும், எல்லாராலும், படுகொலை செயப்பட்டவர்களின் அந்த நினைவு இடத்தை சுற்றிபார்த்த போது ஒன்று தெரிந்தது. உலகம் முழுவதும் அடக்கப்படும் இனங்களின் விடுதலையின் தியாகங்கள் ஒரே மாதிரிர்தான் இருக்கிறது.

                                                        ஸ்பெயினின் உள் நாட்டு யுத்தம் ஒரு சோகமான சரித்திரத்தின் வாசனை! எல்லா பக்கங்களிலும் " கெக்கே பிக்கே " என்று அதிகாரப் பிதற்றல்கள்! , சொல்லி வைத்த மாதிரி வெற்றிகள் ,தோல்விகள் ,அப்பாவி மனித இழப்புக்கள் ! உள்நாட்டு யுத்தமே அந்த நகரத்தில்  இரத்த  ஆறு ஓடிய அடையாளங்களை வரைந்து வைத்திருக்கிறது 

                                        ஒரு நாட்டை சுற்றிப் பார்ப்பது என்பது நினைவுகளின் வாசனை! சில நேரங்களில் ஆயிரம் வரலாற்று விசியம் அறிந்து கொண்டாலும், கசப்பான வரலாற்றுப் பக்கங்களில் எப்பவுமே துரோகத்தின் வலி இருக்கும் ! ஸ்பெயினின் அண்டை நாடுகளின் துரோகம் ! பிளவுபட்ட சொந்த நாட்டு மக்களின் அரசியல் பரிகசிப்பு ! ஒரு நாடோடியின் நாட்குறிப்பு போல என்னோடு இந்த பயண அனுபவங்களில் வரலாறு  பற்றி  ,நிறைய எழுத நினைத்தேன்  ஆனால்  கொஞ்சம்தான்  எழுதினேன் ,

                                      எல்லா சம்பவமும் இதில்  உடனுக்கு உடன் நடந்த அன்றே எழுதியது என்று சொல்ல முடியாது! நெஞ்சத்தில் தேக்கி வைத்து , புரண்டு புரண்டு படுத்து, தூக்கம் வராமல், "குவாடரை " உள்ளுக்க தள்ளி , தனிமையில் சோர்வாக எழுதிய வார்த்தைகளாக இருக்கலாம்! ஆனால்  அதில பல சம்பவங்களில் உயிர் என்பது மெல்லவே எழுந்து நடமாடியாது. வேறு எப்படிதான் எழுதுவதாம் . 

                                    பார்சிலோனா தெருவெங்கும்    கேட்ட ஸ்பானிஷ் பாடல்களில்  ,பிடித்த பாடல்களின் வரிகள், அதில் பிரிவின் விளிம்பில் வரும் காதலைப்பற்றிய வர்ணனைகள் கொஞ்சம் நினைவு இருக்கு ! முகம் அறியா யாருக்கோ உதவிய குறிப்புகள், குத்து மதிப்பாக எல்லாம் எழுதி இருக்கலாம். மதிய தரைக்கடல் ,மேடிடேர்நியன் சூரியன் தந்த உடலெங்கும் பரவும் ஒரு புத்துணர்ச்சியோடு உருவாகும் வார்த்தைகளோடு அந்த பக்கங்கள் நிரப்பப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறன் !

                                                               சங்கிலியால் பின்னைக்கப்பட்ட ஒரு அடிமையின் அவலக் குரல் போலவும் அது இருக்கலாம், ஏமாற்றத்தில் புலம்பியது போலவும் இருக்கலாம் ! படிக்க முடியாத வார்த்தைகலில் எழுதியது போலவும், நினைக்கக்கூடாத கற்பனைகள் கடசியில் நடந்தது போலவும் ஒரு வக்கிரமான எழுத்துக்களாக இருக்கலாம்! ஆனால் டயரி  போலவே ஒவ்வொருநாளும்  கொஞ்சமாவது   எழுதிக்கொண்டே இருந்தேன் .அதில் என் ஆத்மா நனைந்துகொண்டிருந்தது உண்மைதான் 

                                                       பார்சிலோனாவில் பழைய நகரத்தில் பிக்காசோ போன்ற ஆர்டிஸ்ட்கள் வாழந்த, ஏழ்மையான,விபசாரிகள் வாழ்ந்த குறுகிய வீதிகலில், கதை இல்லாத வீதிகளே இல்லை. பிக்காசோவே அந்த விபசார விடுதிகளில் எடுபிடி வேலை செய்தாரம் சிறு வயதில், அந்த இடத்தை நேற்று சுற்றிப் பார்த்தேன் . வறுமையான பகுதிகள் போலிருக்க கற்பனைக்கும்  யதார்த்தத்துக்கும் இடையில் கோடுகளும் நிறங்களும் மண்டையுள் ஓவியமாகியது 

                                                                 அந்தப் பழைய நகரத்தின் நகரின் ஒவ்வொரு பாதைகள், வளைவுகள்,சந்துகள் பின்னேயும் ஒரு சிற்பியின்  அல்லது  ஓவியனின்  கதையிருக்கிறது. அந்தக் கதை ஒரு காலத்தில் ஏழ்மையாக வாழ்ந்து பின்னர் உலகப் பிரபலமான  பபிலோ பிக்காசோ போன்ற அத்தனை கலை ரசிக மனிதர்களின் நினைவுகளை கொஞ்சம் கொஞ்சமாக  மறைத்து வைத்திருகிறது .  நின்று நிதானித்துப் பார்த்தால், காலத்தில் பிரயாணம் செய்வதுபோல முடிச்சு முடிச்சா அவிழ்க்கவும், அவிழ்த்துப் பின்னர் பின்னவும் கூடியது !

                                                           உலகம் என்கும் இருநது வந்து அந்த ஆர்டிஸ்ட் மேதைகள் நடந்த தடங்களில் , பகலிலும் இரவிலும் ஒரே மாதிரி சனம் நெரியும் தெருக்கள். அந்தப்  பழைய நகரத்தின் உயர்ந்த நாடக தியேட்டர்களை மூடி "கச கச "எண்டு விளம்பரப்பலகைகள் வைத்திருகிறார்கள், பல இடங்களில் பழைய கட்டிடங்களை இடித்துக் கண்ணாடியில் மாளிகை செய்து வைத்திருகிறார்கள்  !

                                                             பர்சிலோனாவின்  அழகே நிறங்கள்.  அதன் இன்னொரு  நளினம்  அதன் அதிகாலை வாசனை , அது  எல்லா  அவநம்பிக்கைகளையும்  பிடித்து வெளியே தள்ளிவிடும்  அலாதியானது, வசதி பார்த்து  வாய்ப்புக்கள் தேடாமல்  நட்பாகப் பழகும் ஸ்பானிஷ் மக்களின் நெகிழ்ச்சி! பகலிலும் இரவிலும் ஒரே மாதிரி சனம் நெரியும் தெருக்கள், இரவுகளில் சதுக்கங்களில் எப்போதும் மெல்லிய பதற்றம் தொற்றிக்கொண்டிருக்கும் பெண்களின் நடமாட்டம்,

                                                                ஒரு காலத்தில் செழிப்பாக இருந்து , புரிந்து கொள்ளமுடியாத பொருளாதார விதியின் கைகளில் சிக்கி அலைக்கழிக்கப்பட்டது போன்ற ஸ்பானிஷ் மக்களின் அன்றாடவாழக்கைச் சோகம் தான்  குழப்பமாக இருக்கு. ஸ்பானிஸ் மக்கள் இன்று எங்கே ஓடித்தப்பி எப்படிப் பிழைக்கலாம் என்பதில் இடிந்துபோய் இருக்கிறார்கள் .அதனால் கலாச்சாரப் பெறுமதிகளில் அள்ளிக்குவிக்கும் பார்சிலோனா போன்ற நகர்த்தைக் கைவிடவும் தயாராக  இருப்பது போலிருக்கு  .....

                                                                          எது எப்படியோ, என் அனுபவ முடிச்சுக்கள் சொல்லித் தந்த பாடம்    கொடுமையான வெயில் நாட்களில் குளத்தில் குதித்து கும்மாளம் போடுவது போன்றதுதான் பார்சிலோனாவின் வாழக்கை . குளத்தில குதிக்கிறது மட்டுமே நாங்கள் செய்யவேண்டிய ஒரு வேலை,மிச்சத்தை அந்த உயிர் உள்ள நகரம் பார்த்துக்கொள்ளும்!

                                                             Barcelona - Such a beautiful horizon, a gentle breeze, The bells are ringing out......And if God willing we will meet again someday!.என்ற பிரடிக் மெர்குரி பாடின பாடல்  உங்கள் எல்லாருக்கும் தெரியும், அதுதான் அந்த நகரத்தின் ஆத்மா . அதுதான் என் காதுகளில் அந்த அதிசயமான நகரத்தை வெயிலோடு  சுற்றிக்கொண்டு  இருந்த ரம்மியமான பொழுதுகள் எப்போதும் ஒலித்துகொண்டிருந்தது . 

                                                பயணக்கட்டுரை எழுவதும்  அடிப்படையில்க் கதை எழுதி காதில பூ சுத்திவிடுவது போலத்தான். ரெண்டுக்குமே சுவாரசியம் குறையாமல் எழுதும் மூடு மந்திர வித்தை தெரியவேண்டும் .      என்னோட ஸ்பானிஷ் விடுமுறை அனுபவங்களை " பயணங்கள் முடிவதில்லை " எண்டு கிறுக்கி எழுத நேரம் இல்லாமல் "துண்டைக் கானம் துணியக்கானம்" எண்டு ஓடும் வாழ்கையை நினைக்க வெறுப்பு வருகுது  என்று சொன்னாலும், என்னை அந்த நாடு ஒரு மனித வாழ்வின் ஒரு சுற்றில் அதிகம் பாதித்த நாடு .


  

ஸ்பெயினில் பார்த்த கிளுகிளுப்பான அனுபவம், ஸ்பெயின் நாட்டின் பெயரை இசை உலகம் எங்கும் எதிரொலிக்கச்   செய்யும் " பிளெமிங்கோ நடன இசை வடிவம் ". பிளெமிங்கோ ஒரு ரொமாண்டிக் இசை வடிவம், அதைக் கேட்டால் யாருக்கும் காதல் உணர்வு வரவேண்டும், வராவிட்டால் , அது பிளெமிங்கோ நடன இசையின் பிழை இல்லை,பதிலாக கேட்பவர்களின் " செக்ஸ் ஹோர்மோன் "களில் குளறுபடி இருக்குது எண்டு அர்த்தம் என்கிறார்கள்.

                                                    " பிளமிங்கோ ரொமாண்டிக் டான்சும் " அப்படிதான் ,அதைக் கேட்க , லத்தின் அமெ ரிக்கன் டான்ஸ் பழகியவர்களுக்கோ , அல்லது பழகாதவர்களுக்கோ , " வா ,வந்து என்னோட ஆடவா , என் இடுப்பைப் மெதுவாகப் பிடித்து ,சுற்றி சுழண்டு ஆட ஆடவா " எண்டு கால் இழுக்கும், அப்படி ஒரு பெண்ணும் ,ஆணும் அசங்காமல், கசங்காமல் மல்லிகைப்பூப்போல ஆடக்கூடிய அழகு நடனம் பிளமிங்கோ !

                                                 பிளமிங்கோ நடனதுக்குக்கென்று பிரத்தியேக சட்ட திட்டமே இருக்கு பிளெமிங்கோ இசை வடிவத்துக்கு , அந்த பிளெமிங்கோ நடனத்துக்கு பெண்கள் அணிய பிரத்தியேக நீண்ட டிசைன் உள்ள "கவுன்" போன்ற உடையே உள்ளது, குதிக்கால் உயரமான ஹீல்ஸ் இருக்கு. அந்த நீண்ட டிசைன் உள்ள பிளமிங்கோ உடையை அணித்து ஆடுவதுக்கு பிரத்தியேகமான நடன இடங்களே உள்ளது! கடசியில் ,அந்த பிளமிங்கோ நடனம் ஆடுவதுக்கு பிரத்தியேக நேரமே இருக்குது! 

                                                        இவளவு மரபு ரீதியான கலாசார அணுகுமுறைகளை உடைத்து ஒரு திறந்த வெளி மேடையில்,யார் வேண்டும் எண்டாலும் ஆடலாம், என்ன உடுப்பு போட்டும் ஆடலாம்,யார் வேண்டும் எண்டாலும் மேடையில் ஏறி பிளமிங்கோ இசையை கிடாரில் வாசிக்கலாம் என்பது போன்ற ஒரு பூங்கா போன்ற இடத்தை பார்சிலோனாவில் பார்த்தேன்! 

                                                            வெளிய நல்ல வெயில் அடிக்க , வியர்வை வழிந்தோட ,கையில "பியர் " போத்திலை பிடிச்சுகொண்டு , இடைக்கிடை "தாக சாந்தி " செய்துகொண்டு ,வெட்டி வெட்டி பிளமிங்கோ நடனம் ஆடும் பெண்களைப் கண்கொட்டாமல் இரசித்து பார்க்க்கொண்டு , அந்த நடனத்துக்கு பின்னணி இசையாக தலையைக் குனிந்துகொண்டு , கிடார் வாத்தியத்தை பூனையை தடவுவது போல நோகாமல் தடவி வாசிக்கும் கலைஞ்சைப் ஏறெடுத்தும் பார்க்காமல் இருந்து ரசிக்க முடிந்தது.

                                                         நேரம் போவது தெரியாமல் காதோடு இசையாக ,நெஞ்சோடு நினைவாக , விழியோடு கனவாக, மனம் எல்லாம் மகிழ்வாக , இசையும் கதையும் போல ,சின்னக் குழந்தையின் சிரிப்புப் போல , மணிரத்தினம் படங்களில் வரும் காதல் பாடலில் வரும் " கனவு சீன்" போலப் போனது பார்சிலோனா விடுமுறை நாட்கள் அந்த நகரின் பழைய பெயரான கத்தலோனா ரிதமில் கண்ணுக்கு முன்னாள் கரைந்து போனது !

                                                    பல வருடம் முன் ஸ்வீடனில் " பிளமிங்கோ, சம்பா, சலசா , தங்கோ, மரிம்பா " போன்ற "லத்தின் அமரிகன் டான்ஸ்" ஒரு ஸ்பானிஷ் டீச்சரிடம் கொஞ்சநாள் பழகினேன். கிடாரில் ஸ்பானிஷ் பாடல்கள் வாசிப்பதால், ஒரு ஆர்வக்கோளாரில் பழகப்போனேன் ,போய்ப் பழகிய போதுதான் தெரிந்தது அது நாங்க நினைக்கிற மாதிரி அவளவு சுலபம் இல்லை எண்டு, அதால இருந்த கொஞ்சநஞ்ச "லத்தின் அமரிகன் டான்ஸ்" ஆர்வமும் போனாலும், அதை சொல்லித்தந்த ஸ்பானிஷ் டீச்சரின் இடுப்பு " பிளமிங்கோ,சம்பா, சலசா , தங்கோ, மரிம்பா " எல்லா நடனத்தையும் விடக் கவர்ச்சியா இருந்ததால கொஞ்சநாள் விடாம படு ஆர்வமாகப் படிச்சேன்.

                                               "லத்தின் அமரிகன் டான்ஸ்" ஆடப் பழகினால் ஆண்களுக்கு தோள்ப்பட்டை முதுகுப் பகுதி விலா எலும்புகள் விரிய , முதுகு நாலுக்கு நாலு தீராந்தி அறுக்கக் கூடிய மாதிரி விசாலமா மேல் உடம்பு வருமாம் , அப்புறமென்ன பெண்களுக்கு ஆண்களில் பிடித்த பிரதேசமே விசாலமான " V " சேப் முதுகுதானே என்கிறார்களே செக்ஸ்சியோலாயிட்ஸ்டுகள்! 

                                                    அதே நேரம் பெண்களுக்கு இடுப்பு நல்ல " சேப் "ஆக " ஸ்பானிஷ் அக்கொச்டிக் கிட்டார் " போலவரும், அவர்களின் மார்புப்பகுதி "ஸ்டாண்டர்ட் சைஸ் " இக்கு வர, பின்புறம் கொஞ்சம் எக்ஸ்ராவா வாட்டர் மிலான் பழம் போல வாளிப்பா நளினம் காட்டும் என்கிறார்கள் ! எங்களின் குலதெய்வம் வீராளி அம்மாளாச்சி மேல சத்தியமா சொல்லுறேன் அது உண்மைதான் கண்டியளோ .

                                                 அந்த ஸ்பானிஷ் டீச்சர் ,CD இல டான்ஸ் பாடல் போட்டுட்டு , என்னோட இரண்டு கைகளையும் பிடித்து, அங்க இழுத்து, நிறுத்தி இங்க இழுத்து, இயல்பாக என்னை நெருக்கிப் பிடித்து, கால்களை மெதுவாக அகட்டி, சடார் எண்டு ஒடுக்கி, வாயால

                                                     "லா - டூ-   டூ    -பெ --லா    லா டு     டு பே     பே - " 

                                                எண்டு ஸ்பானிஷ் மொழியில் " ஸ்டெப்ஸ் சொல்லி" தருவா . அவாவை நடனம் முடியவும் , நான் அவாவின் இடுப்பை இறுக்கி பிடிச்சிருப்பேன், பின்ன என்ன நான் டான்ஸ் பழக வந்ததே அந்த இடுப்புக்கு தானே!, 

                                                 அவா கஷ்டபப்பட்டுதான் என்னைப் பிரிச்சு தன்னை விடுவித்துக் கொள்ளுவா. நான் அப்படி ஆர்வமா நடனம் பயில்துக்கு கோபமா ஒண்டும் சொல்லமாட்டா . ஆனால்

                                                 " என்னோட இடுப்பை விடடா ,பாட்டு முடிஞ்சு அரை மணித்தியாலம் ஆகிவிட்டதடா , நாசாமாப் போனவனே ,அனக்கொண்டா பாம்பு இறுக்கி பிடிக்கிற மாதிரி பிடிகிறியே , பழகும் போதே பழக்கிற டீசரோடையே இப்படி ரொமாண்டிக் கோளாறு எண்டா ,அப்புறம் இளம் பெண்களுடன் ஆடும்போது என்ன என்ன வில்லங்கம் வரப்போகுதோ " 

                                         எண்டு என்னைப் பெருமையாக சொல்லி சிரிப்பா.

                                              நான் என்னோட வாழ்கையில் எதையுமே முழுமையா செய்யுறது இல்லை, அதால கொஞ்சநாட்களில் நான் டான்ஸ் பழகுவதை விட்டு விட்டேன் ! இப்பொது சில நாட்டகளில் ஒஸ்லோவில் உள்ள டிஸ்கோ நடன கிளப்பில், கொஞசம் சோமபானம் தலைக்கு ஏற , ரொமண்டிக் ஹோர்மோன் நரம்பை முறுக்க , " வந்தா வா , போனாப்போ " என்று "லத்தின் அமரிகன் டான்ஸ்" முறைப்படி பழகிய வெள்ளைப் பெண்களுடன் ஆடுவேன், 

                        அது எப்பவுமே "கம்மாக்கோ ,சிக்காக்கோ " எண்டு வில்லன்கதிலதான் நகைசுவையாக முடியும் , நான் பெருமைக்கு சொல்லவில்லை, நான் அந்த கிளப்பில் ஆடுவது எண்டால் பார்பவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்வார்கள்! சில நேரம் கவலையா இருக்கு ஏன் அதை முழுமையாகப் பழகிப் ,படிக்காம விட்டேன் என்று!!!
.
.

Thursday, 19 May 2016

உதிரிப்பூக்கள்....

காலம்  ஒரு  நதிபோல .அது ஓடிக்கொண்டேயிருக்கும் . அதன் கரைகளில் நிறைய சம்பவங்கள் நடந்தாலும் எல்லாவற்றிலும் கதைகள் ஒரு அடியாழத்தில் சலசலப்பு இல்லாமல் இருக்கலாம். அதை என் உள்ளே இறங்கி வெளியே எடுத்துக்கொண்டு வந்து கொடுக்கும் ஒரு சின்ன நினைவு பலசமயங்களில் சிலவற்றை எழுதிவிட உற்சாகம் கொடுக்கும் .
                                                        
                                                   எங்கள்  ஊரில்  சின்னவயசில நான் மாலை கட்டுவேன், எங்கள் வீட்டுக்கு முன்னால  வசித்த என் வயதுள்ள ஒரு பெண் ,எப்படி வாழை நாரில , மலர்களை அசங்காமல் , கசங்காமல் அடுக்கி , மலர்களின் நிறங்களை வேறுபடுத்தி, இடை இடையே பச்சை இலைகளை வைத்து , கடைசியில கொத்தாக மலர்களை இணைத்து குஞ்சரம் போல  தொங்கவிட்டு  எப்படி மாலை கட்டுவது எண்டு,  அந்த வித்தையை எனக்கு காட்டித் தந்தா  !                                                   

                                            அதலா என்னோட அம்மா ஊருக்குள்ள அயல் அட்டையில் நடக்கும் சாமத்திய வீடுகளுக்கு ,கலியான வீடுகளுக்கு,  "என்னோட மகன் நல்லா மாலை கட்டுவான் " எண்டு சொல்லுறது மட்டுமில்லை, மாலை ஓடரும் எடுத்துக்கொண்டு வருவா! நான் பூ எல்லாம் புடுங்கமாட்டன் எண்டு அவாவுக்கு தெரியும், அதால அவாவே ஒரு கூடையை எடுத்துக்கொண்டு வீடு வீடாப் போய் ,சுவரிலையும் ,வேலியிலையும் தொங்கி தொங்கி பூ எல்லாம் புடுங்கி கொண்டு வந்து தருவா மாலை கட்டசொல்லி, நான் முதலில் எல்லாப் பூகளையும் முகர்ந்து பார்த்து , அவைகளின் அழகை கொஞ்சம் ரசித்துப் பார்த்து, அப்புறமா மாலை கட்ட தொடங்குவேன்!                                       

                                      நான்  முக்கியமா சாமத்திய வீட்டுக்கு ஸ்பெசலா "ஆண்டாள் மாலை" கட்டுவேன். கலியான வீட்டுக்கு மணமகளுக்கு சடைநாகம் , மணமகன் மாங்கல்ய மாலை , சரஸ்வதிப் பூசைக்கு  வாடா மல்லிகையில்   சின்ன மாலை , கோவில் திருவிழாவுக்கு போகும் தாவணி போட்ட இளம்  பெண்களின் கூந்தலுக்கு கனகாம்பர ஒற்றைச் சர மாலை, இப்படி  எனக்கு  பிடித்த மாதிரி கட்டுவேன்.

                                       தொழில் ரீதியாகவோ, கோவில்களில்  முறைப்படி  கட்டுபவர்கள் போலவோ  எல்லாம்  கட்டுவது  இல்லை. ஆனால் அயலட்டையில் தரமாக  இருக்கு  என்று சொல்வார்கள் அதைவிட  அதை  எல்லாம் ஓசியில் தான் கட்டிக்கொடுப்பேன்,ஆனால் மாலையில் விதம் விதமான பூக்களை "colour combination" இல் கற்பனையில் இணைப்பதில் ஒரு " த்ரில் "இருந்ததால்,எனக்கும் அதில நல்ல விருப்பம், வெளிநாடுக்கு புலன் பெயர்ந்தபின் ஒரு நாளும் சந்தர்பம் கிடைக்கவில்லை மாலை கட்ட!                           

                                          பல வருடம் முன் ஒரு நாள் ஸ்வீடனில் நான் வசித்த சிட்டியிடில் இருக்கும் பாரிய கடைத்தொகுதி அங்காடியில் இருந்த மலர்கள் விக்கும் கடையின் முன் ஒரு போட்டி வைத்தார்கள், வேறு பல பூ கடைகளில் வேலை செய்யும் இளம் பெண்கள் தங்கள் " பூ அலங்கரிப்பு திறமைய " காட்டும் ஒரு நிகழ்வு அது, வாசமில்லாத, வாசமுள்ள  பலவண்ண நிற மலர்கள் குவிந்து இருக்க அந்தக் கடையே மலர்த் தோட்டத்துக்கு நடுவில் இருப்பது போலிருந்தது  

                                     நான் அதை தற்செயலாக  கடந்து போகும் போது அவர்கள் அலங்கரிப்பு செய்த மேசையின் கீழே நிறையப் பூக்கள், உதிரிப்பூக்கள் போல சிதறிக் கிடந்தன. நிராகரித்த அந்த மலர்களைப் பார்க்கப் பாவமாய் இருக்க , கொஞ்சம் தயங்கி , ஸ்வீடிஷ் மொழியில்  

                                 ",நான் அவைகளை எடுத்து மாலை கட்டவா, நீங்கள்  பாவிக்காத ,அல்லது  நிராகதித்த மலர்களை  எடுத்து  எங்கள் நாட்டு ஸ்டைலில் ஒரு அலங்கரிப்பு செய்யவா  ?"

                                                எண்டு அந்தப் பெண்களிடம் கேட்டேன், அவர்களுக்கு நான் என்ன சொன்னேன் எண்டு விளங்கவில்லை

                                        " ,  மாலையா , அப்படி எண்டால் என்ன ,,,ங்க்  , .. கீழ  கிடக்கும் பூக்களில் அதென்ன மாலை ...அங்க்...நாங்க கேள்விப்பட்டதே இல்லையே ..."

                           " அதுவும்  நீங்கள் மலர்களில் செய்வது போன்ற ஒரு அலங்காரம் தான் ,"
                                     
                                  "அப்படியா,,எங்கே  சரி  செய்து காட்டேன் ,நாங்களும் அறிந்து கொள்கிறோம் "
                                           
                                      " ம்ம்,,,பார்க்கலாம்,,மாலை  கட்ட  வாழை  நார் தேவை,,அதுதான் ஜோசிக்கிறேன் "
                                         
                                  " வாழை  நார்,,,,ஹ்ம்ம்,,அது  என்ன,,,எங்களிடம்  அப்படி  ஒன்றுமே இல்லையே "
                                             
                                 "  ஓகே, தென்னாலிராமனின்  குதிரை கனவில  சாணி போட்ட மாதிரி  ஒரு  ஐடியா  வருகுது "
                                     
                               " ஹ்ம்ம், மாலை,,,வாழை  நார்,,,,தென்னாலி ராமனின்  குதிரை.... என்னவோ  சொல்லுறாய்,, ஒண்டுமே  புரியவில்லை "

                               எண்டு மண்டைய சொறிஞ்சார்கள்! நான் வாழை நாருக்குப் பதிலாக ஒரு உடுப்பு தைக்கிற " ட்வைன் " நூலை , அவர்கள் பார்சல் கட்ட வைத்திருந்த மேசையில் இருந்து  உருவி எடுத்து, முதலில் ஒரு சின்ன மாலை கட்டதான் தொடங்கினேன் கடைசியில் அவர்களே நெறைய பெரிய பூக்கள்  கொண்டு வந்து தர அந்த  உதிரிப்  பூக்களையும் ,உதிராத அர்ச்சனைப் பூக்களையும்  எல்லாம் இணைத்து ஒரு ஆண்டாள் மாலையே கட்டி முடித்தேன்.

                                        திருச்சபை ஏறிடும் அருச்சனை மலர்களை இணைத்து மாலை கட்டிக்கொண்டு இருந்த போது அந்தப் பெண்கள் எல்லாரும் நான் எப்படிக் கட்டுறேன் எண்டு கவனமாகப்பார்க்க, சில பார்வையாளர்கள் ",க்ளிக் கிளிக் " எண்டு அவர்கள் வைத்திருந்த கமராவில் படம் வேற கிளிக்கினார்கள், உலகத்தில் மிகவும் மொடேர்ன் சயன்ஸ் தொழில் நுட்பம் முன்னேறிய அந்த சுவீடன் நாட்டு மக்கள் ஒரு மாலையில் ஆச்சரியமாகி  ,அவர்களே மரியாதையாக  மாலை பற்றிய பல விவரங்களை என்னிடம் இருந்து முடிந்தளவு கேட்டார்கள் !

                                                உலகம் எவளவுதான்  இயந்திரங்களில்  நுட்பமாக முன்னேறினாலும் ஒருவன் கையால வெறும் பூக்களை வைத்துக்கொண்டு ஒரு வித்தை காட்டுவதை சுவிடிஷ் மக்கள் ஆச்சரியமாகப் பார்க்கத் தொடங்கினார்கள். அவர்கள் கவனிக்கத் தொடங்க நானும் மாலை கட்டுவது என்னவோ தேவலோக கைவினை இரகசியம் போல பல விதங்களின் கையைப் போட்டு வளைச்சு எடுத்து அவர்களின் காதில பூ சுற்றினேன் .

                                        மாலை  கட்டுவதில்  உள்ள டெக்னிக் உண்மையில்  ரெண்டு வாழை நார் பூவைக்  கொழுவிக் கொண்டு வளைந்து வளைந்து போவது . அதில்  நிலையான வாழை  நாரை  பிடிக்கும்  கோணம், அதில் பூவை  வைக்கும்  கோணம், வைத்து ரெண்டாவது  வாழை நாரை சுற்றி எடுக்கும் விதம் இதுதான்  சிம்பிளாக  மாலையாகும். ஆனால் எவளவுதான் அதை உலுப்பினாலும் அந்த நார் சுற்றிய  விதமான இணைப்புக்கள் பூக்களைக் கழண்டு போக விடாது . 

                                          பாடிப்  பாடிக் கட்டி முடிந்த ஆண்டாள் மாலையை என்ன செய்வது எண்டு ஜோசிக்கும் போது, அந்தப் பூ கடையில வேலை செய்த ஆண்டாள் போலவே இருந்த ஒரு வெள்ளைப் பெண் என்னிடம் வந்து 

                                       " இந்த மாலை பெண்கள் அணித்து இருப்பதை இந்தியா பற்றி பார்த்த ஒரு டாகுமெண்டில் பார்த்தேன் ,உங்கள் நாடில் மாலை கட்டிப் பெண்களுக்கா போடுவார்கள்? இதுக்கு என்ன அர்த்தம்?" 

                                        எண்டு கேட்டாள் . நான்

                                        " முதலில் நான் இந்தியாவைச் சேர்ந்தவன் இல்லை, வடக்கு ஸ்ரீ லங்காவில் இருந்து வந்த தமிழன் , ஆனாலும் தெற்கு இந்தியா மாநிலங்களில் வசிப்பவர்களும் என்னைப் போல இருப்பார்கள், எங்களின் இந்து சமய நம்பிக்கையில் இந்த ஆண்டாள் மாலையை அணிந்து கொண்டு ஆண்டாள் என்ற பெண் , நீலநிறக் கிருஷ்னருக்காக காத்திருந்தா,"

                                       என்றேன். 

                                             " அப்படியா எனக்கு சிறிலங்கா ,இந்தியா எல்லாம் ஒன்டுபோல தான் தெரிகிறதே, அந்தக் கிருஷ்ணர் , ஆண்டாளின் பாய் பிரெண்டா ?"

                                       என்றாள் . பாய் பிரென்ட் என்று  சொல்லும்போது அவள் கண்களில் ஜன்னல் திறந்தது 

                                         "ஒரு வகையில் அப்படிதான் ! அவருக்கு ஏகப்பட்ட் கோபிய கேர்ள் பிரண்ட் கோகுலம் எண்ட அவரோட நந்த வனத்தில இருந்தார்கள் "

                                          "  என்னது   ஏகப்பட்ட  கேர்ல்ஸ் பிரெண்டா "
                                   
 "   ஆமாப்பா,,,அப்படிதான்  சொல்லுவார்கள்,,அந்தக்  கண்ணன்  ஒரு மாய லீலைக் கண்ணன் பா "
                                       
                           " மாய லீலைக் கண்ணன்... அப்படி  என்றால்  என்ன "
                                     
                                  "  அதுதான் ,,நீங்க  சொல்லுறிங்களே  வுமனைசர்  என்று,,அப்படி  ஒரு  கில்லாடி "
                                       
                                     " அப்படியா,,ஆனாலும்  அவளவு  கேர்ல்ஸ் பிரெண்ட்ஸ் ஐ  சமாளிக்க தனித் திறமை  வேணும் பா,"
                                       
                                  "  அதெல்லாம்  அவருக்கு  பிறக்கும்போதே கூடவே பிறந்த சொல்லிக் கொடுக்கத் தேவையில்லாத  கலை "
                                         
                                          "  அதெப்படி சொல்லுறாய் "
                                       
                                     "  கிருஷ்ணன் குழந்தையாக இருக்கும் போதே மின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னம் வைத்து மன்னவன் போல் லீலை  செய்த மாயவன் "
                             
                                           "  அப்படியா ,,சின்னக்  குழந்தை அழகாய் இருந்து  இருக்கும்,,அது கன்னிப்  பெண்களுக்கு  ஒருவித  அன்பான ஆசையைக்  கிளப்பி இருக்கும் "
                                     
                                  "   ஹ்ம்ம்,, கிருஸ்ணனின்  பின்னழகைப்  பார்த்து  போதை முத்தம் கேட்கவே கன்னிகள் அலைந்தார்கள்  "
                                       
                                           " அப்படியா,,நீ ஒண்டும்  அப்படி அலையிற  ஆள் இல்லைதானே ,பார்க்க  அநியாயத்துக்கு அப்பாவி  போல தெரியிறாய் "
                                         
                                   "  ஹ்ம்ம்,,கிருஷ்ணர்  பரமாத்மா  ,,நான்  ஜீவாத்மா ,,எல்லா  விதத்திலும்  சாதாரணமானவன்   "
                                                   
                                           என்றேன் ! அவள் கொஞ்சம் ஜோசித்தாள். பிறகு  சிரிச்சாள் . இளம் பெண்கள் சிரித்தால் அவர்களின் தற்பாதுகாப்பு அதி உயர் பாதுக்காப்பு வலயத்தை விட்டு கொஞ்சம் வெளியே வருகிறார்கள் என்று அர்த்தம், அதை  நழுவ விடாமல் மெதுவாக , அவளுக்கு மட்டும் கேட்கிற மாதிரி ,

                                         " இப்படி ஆண்டாள் மாலை போட்டால் கிருஸ்னர் போல நீல நிற ஆண்கள் கணவனாக வருவார்களாம் எண்டு எங்கள் ஹிந்து சமய  இதிகாசம்களில் உள்ளது " 

                                         என்றேன்..அவளுக்கு  கண்கள் இப்ப அரண்மனைக் கதவே தாழ் திறந்த மாதிரி விரிய 

                                         " ஒ அப்படியா , நாலு அஞ்சு பூவை  வைச்சு  இந்த நூலில்  அழகாக இணைத்துக்    கட்டி இதுக்குப்  பின்னணியில்  ஒரு  ரொமான்ஸ்  கதை  வேற  சொல்லுறியே ,,உண்மையில்  வெரி இன்றேச்டிங்கா இருக்கே" 

                             என்றாள், சிறிது நேரத்தில் அப்பாவியா  

                                  "உனக்கு  ஆட்சேபனை இல்லை என்றால் , இதை உனக்குப் போடவா?" 

                      எண்டேன் அவள் கன்னம் இரண்டும் தார்பூசணி போல சிவக்க,

                                        "ஒ , நான் தான் நீ சொல்லும் ஹிந்து சமயம் சார்ந்தவள் இல்லையே,, சிரிப்பு என்னவென்றால் நானே என்ன சமயம் சார்ந்தவள் எண்டும் எனக்கு இன்றைவரை தெரியாது,  எப்படியோ நான்தான் யாருக்காகவும் காத்திருக்கவில்லையே, என்றாலும் நீ விரும்பினால்ப்  போடு "  

                               எண்டு சொல்லி முடிக்கமுன் நான், மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன கேதுனா ,சந்தே பத்னாதிதம் ..எண்டு சொல்லி  அவளுக்கு அந்த ஆண்டாள் மாலைப்போடஅவள் அணில்குஞ்சு போல சுருங்கி , ஒவ்வையார் போல  வாய் முழுவதும்  சிரித்து, தாஸ்மேனியன்  அப்பிள் போல  கன்னத்தில்   சிவந்தாள் , நானும் படார் எண்டு ,

                                   " எங்கள் நாட்டில் மாலை போட்ட பெண் மாலை சூடியவனுக்கே சொந்த என்றேன்", 

                                   அவள் திடுக்கிட்டு ஜோசிதுப்போட்டு ,

                                          "அதுக்கென்ன ,எனக்கு கிருஷ்ணர் போல நீலநிற ஆண்கள் எல்லாம் வேண்டாம், உன்னைப்போல பிரவுன் நிறத்தில ஒரு  ஆண் கிடைத்தாலே போதும் "
                                  என்றாள் ! மறுபடியும் ,மெதுவாக , அவளுக்கு மட்டும் கேட்கிற மாதிரி ,

                                             " எங்கள் நாட்டில் திருமணத்தில் ஆணும்,பெண்ணும் மாறி மாறி மாலை மாற்றுவார்கள்" 

                                  என்றேன், அதுக்கு அவள்

                                    "இந்தியாவில் யானைகள் எல்லாம் திருமணவீட்டில கொண்டு வந்து கலாய்ப்பதையும் ஒரு டிஸ்கவரி tv  டாகுமெண்டில் பார்த்தேன் " 

                                   என்றாள்  ,

                                          " எனக்கெல்லாம் யானை கொண்டுவர வசதி இல்லை,வேண்டுமென்றால் இரண்டு பூனை பிடிச்சு கொண்டுவரலாம் "

                                       " ஹஹஹஹா,     பூனை   அது  என்னோட  வீட்டிலேயே ரெண்டு இருக்கே,,நான் தான்  வளர்க்கிறேன் "
                                   
                                    " ஹ்ம்ம்,,இப்பிடியே  மாலையோடு சேர்த்து  படம் எடுப்பமா,,உன்னோட வேலை செய்யும்   நண்பியைப் படம்  எடுக்கச் சொல்லுறியா "
                               
                                         "   ஹ்ம்ம்,, ஹன்னா  நல்லா படம் எடுப்பாள்,,நான்  வரச் சொல்லுறேன் ,"
                             
                                             "  ஆண்டாள் மாலையில்  நீ திருச்சூர்  பூரம்  திருநாளுக்குப்  போன சந்திரமுகி போல இருக்கிறாய் "
                                 
                                                " என்னவோ எல்லாம் சொல்லுறாய்,,ஒன்றுமே  புரியவில்லை ,,ஆனால்  என்னைப்  புகழ்ந்துதான் சொல்லுறாய் என்று தெரிகிறது "
                                 
                                           "  ஹ்ம்ம்,,,அப்படிதான்  சொல்லுறேன்,,உன்னோட  முகத்துக்கு  இது  அப்படி அம்சமா பொருந்துது ,, "
                                   
                                             " ஹ்ம்ம் ,  எனக்கு  இந்தப் படம் கட்டாயம்  வேணும் ,நான்  போன  பிறப்பில்  இந்தியாவில்  பிறந்து இருக்க வேண்டும்  போல ,"
                                   
                                               " வேண்டுமென்றால்  இந்த மாலையைக்  கட்டினவனையும்  அப்படியே கட்டி எடுத்துக்கொள் "
                                 
                                              "   ஹஹஹா,,  என்னோட  உணர்வுகள்  இப்ப என்ன தெரியுமா,"
                                 
                                         "      ஹ்ம்ம்,,நீயே  சொல்லு  "
                                 
                                           "  ஒரு    மாலையோடு  ஒரு  முழுமையான கலியாணமே  கட்டின  மாதிரி  இருக்கு "
                                     
                                          "  ஹ்ம்ம்,,எனக்கும்  ஒரு  மாலையை  வைச்சு  உனக்குக் மலையாளக் கந்தர்வன்  நாட்சார்  வீட்டில கலியாணம்  நடுராத்திரியில் காட்டின  கதை  மாதிரி  இருக்கு, உனக்கு  மாலை  போட்டது    "

                    " அதென்ன   மலையாளக் கந்தர்வன்  நாட்சார்  வீட்டில கலியாணம்  நடுராத்திரியில் காட்டின  கதை,,சொல்லு  ,,சுவாரசியமா இருக்கும் "

                                "  கந்தர்வன்   நடுச்  சாமம்  அழகிய  இளம்  பெண்களை  மயக்குவான்,,,ஒருநாள்  .....திருவனந்தபுரதில்....................    ஒரு  அழகிய  இளம்  பெண்  ..................அவளோட  வயதான  பாட்டியுடன்  வசித்து  வந்த நேரம் ..................................... ஒரு கந்தர்வன்  .....................   பாட்டியை  எழுப்பி ,,,,,,,,,,,,,,,,  அந்த  இளம்பெண் ....................அதிகாலை  முழித்துப்பார்க்க..................அழகான  குழந்தை.................  "
                 
                                         என்றேன் ,விழுந்து விழுந்து சிரித்து என்னை இறுக்கக் கட்டிப் பிடிக்க,  அவளோட வேலை செய்த ஹன்னா  வந்து  அவளோட  ஒலிம்பஸ்   கமராவில்  ,  அவளையும், அவள் போட்டிருந்த ஆண்டாள் மாலையையும்,  அருகில்  என்னையும் சேர்த்து " க்ளோசப்பில " படம் எடுத்தாள்! பல பெண்கள் என்னோட படமெடுக்க விரும்பினார்கள். நான் ஏகபத்தினி விரதன் ஸ்ரீ இராமன்  போல ஆண்டாளோடு மட்டுமே  படம் எடுத்தேன் .
                                             
                                           அந்த ஆண்டாள்  படத்துக்கு தலைமயிரை மாதவிப் பொன் மயிலாள் பொன்னிறத்  தோகை விரித்தாள்  மாதிரி பிரித்துப் பிரித்து அலைபாயவிட்டிருந்தாள் . படமெடுக்க வந்த ஹன்னா சின்னதாக இருந்தாள். தானும் அந்த ஆண்டாள் மாலையைப் போட்டுப் படமெடுக்க விரும்புவதாகச் சொன்னாள் , நான் அதை ஒரே முகூர்த்த கலியான மேடையில் அக்காவுக்கும்  தங்கச்சிக்கும் ரெண்டு கலியாணம் போல  அவளுக்கும் போட்டேன் , அவள் திரிபுரசுந்தரி போல சிரிச்சுக்கொண்டிருந்தாள்
                                           
                                                எப்படியோ  அந்த  நேரம்  அந்தப் படம் பற்றி சொல்ல  எதுவுமேயில்லை . பார்க்க கல்யானமான புது  மாப்பிளை பொம்பிளை வாழைப் பழத்தில திரி செருகிய  மஞ்சள் தட்டில் ஆலாத்தி எடுத்து நெற்றியில் பொட்டு வைச்ச மாதிரி   வந்திருக்கலாம்  என்று  நினைச்சேன். ஒரு சின்ன சந்திப்பில் சில மணி நேர இடைவெளியில்  உதிரிப்பூக்கள் மாலையாகி ஒரு சுவிடிஷ்  பொன்னிற  மேனி மங்கையின் கழுத்தில் விழுந்த சம்பவம்  அவளவுதான் .                              
                                 
                                            அதுக்குப் பிறகு நான் நோர்வே வந்துவிட்டேன் ! பல வருடங்களின் பின் அண்மையில் மருபடியும் ஸ்வீடன் போனபோது அந்த நிகழ்வு நினைவுவர அந்தப் பூக் கடையிட்கு வெளியேபோய் வேடிக்கை பார்த்தேன்,முக்கியமா ஒரு மாலையை வைச்சு சில நிமிடங்கள் கலியாணம் கட்டின அந்த ஆண்டாளை தேடினேன் , கண்ணன்மீது காதல் கொண்டு மானிடக் காதலைத் தெய்வீகக் காதலாக மாற்றி " ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து தாழாதே சங்கம் உதைத்த சரமழை ..." போல் சில்லறை எறிந்த மாதிரிச் சிரித்து, நீலக் கண்களால் மொழி பேசிய  திருப்பாவை போன்ற அவள் இல்லை! 

                                                    வேறு பல புது ஆண்டாள்கள்  வேலை செய்தார்கள் ,கடையை கொஞ்சம் நோட்டம் விட்டுப பார்க்க, அந்த கடையின் ஒரு மூலையில் நானும்,ஆண்டாளும் ,அந்த ஆண்டாள் மாலையும் உள்ள படத்தை "என் லார்ச்" பண்ணி தொங்கவிட்டிருந்தார்கள். எப்படியோ அந்தப் படம் ஒரு மூலையில் யாரும் கவனிப்பார் அற்று தொங்கிக்கொண்டு இருந்தது.                                                                     

                                                  ஆனால்  இடைப்பட்ட பல வருசங்களில் நிறைய மாற்றம்கள் நாட்டிலையும்,வீட்டிலையும் ,ரோட்டிலையும் ,ஏன் உலகத்திலயும் ,வந்த போதும்,அந்த ஆண்டாள் மாலையில் இருந்த பூக்கள்  இன்னும் புத்தம் புதுப் பூக்கள் போல பொலிவுடன் இருந்தன! அந்த ஆண்டாள் அவளும்  மாலையோடு  கண்களில்  கிருஷ்ணன் வரவுக்காய் காத்துக்கொண்டிருந்தாள் . 
,
,

Thursday, 12 May 2016

ஐந்து விதமாகிய நாட்கள் ...


..........................................................
இப்போதைய
உன்
புறக்கணிப்புகளை
ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை
அப்போதெல்லாம்
குங்கும நாட்களில்
நூறு மடங்கு
கொஞ்சிப் பேசிக்
கொண்டாட்டங்களுக்குக்
குறைவில்லாமலிருந்ததடா
இதயமில்லாதவனே
என்கிறாள்
எனக்கென்றொரு
இதயம்
இயங்காமலிருப்பதுவும்
நல்லதுக்கே கச்சியேகம்பநாதா
இல்லாவிட்டால்
அது நூறு துண்டுகளாக
சிதறி வெடித்திருக்கும்.
.

.............................................................

வெய்யில் 
என்னோடு சேர்ந்து நடக்க
எப்பவுமே ஆசைப்படுவது
ஒருநாளும் அது
நடந்தேறியதில்லை
நிழல் மட்டும்
முன்னுக்கும்
பின்னுக்கும்
சரிவிலும்
சமாந்தரமாயும்
பக்கவாட்டிலும்
இணை பிரிவதில்லை
சிலநாட்களின்
உச்சிப் பகல்களில்
எனக்குள்ளும்
மறைந்து கொண்டு
ஒளித்து விளையாடுது.
.

...........................................................

நீராரும் கடலுடுத்த 
நிலமடந்தைக் கெழிலொழுகும்
நாட்டில்
தேர்தல் அறிக்கை பார்க்கிறேன்
டெலிவிசனில
ரெம்ப கொடுமையா இருக்கு
என்கிற தோழிக்கு
தக்கசிறு பிறைநுதலும்
தரித்தநறுந் திலகமுமே
அழகாக
அலங்கரிக்கப்பட்ட
பொய்களைப்
பார்த்துக்கிட்டு இருக்கேன்
என்று உண்மையைச்
சொல்லுங்க
என்கிறேன் நான்

...........................................................

முன்னமெல்லாம்
தண்ணியில்லாக் காட்டுக்கு 
மாற்றலாக்குவேன் என்பார்
மேலதிகாரி
அதைக்
காதில வேண்டாமல்
கணக்கெடுக்காமல்
காலை ஆட்டிக்கொண்டு
அசட்டையாக இருப்பது
இப்பெல்லாம்
நெட்வேர் கனெக்சன் இல்லாத
ஏரியாவுக்கு
இடம்மாற்றுவேன் என்று வெருட்டுறார்
உண்மையாகவே
உயிர் போகும்போலப்
பயமாய் இருக்கு.
.............................................................
கொலுசு நல்லாருக்கா.
நீ வெள்ளிக் கொலுசு வாங்கித்தரேன்னு 
கவிதை எழுதின
அடுத்த்நாள் வாங்கினேன்
மிஞ்சியும்
பஞ்சி பிடிக்காமல்
வேண்டி அணிந்தேன்
என்கிறாள் அவள்
உன்
மின்னும் கொலுசும்
பின்னும் மிஞ்சியும்
எனக்குத் தெரியலைடி
பட்டைவெடிச்ச
உன் பாதங்களை கொஞ்சவா
என்கிறேன் நான்
தேவையா
இந்த உத்தரிப்பு
காலக் கொடுமைடா சாமி .
....................................................