Monday, 25 May 2015

மேரி யுவானா மயக்கிய பொப் மார்லி..

இது  அப்பட்டமான உண்மைக் கதை இல்லை, அதுக்காக முழுவதும் கற்பனையும் இல்லை .விரும்பினால்  முடிவில் யாவும் கற்பனை என்ற வரியை நீங்களே போட்டுக்கொள்ளுங்கள்.  ஆனாலும்  எல்லாக் கதைகளில் அடித்து விரட்ட முடியாத யதார்த்தம் கொண்டு வரும்  உண்மை மனிதர்களின், ஒரு காலகட்டத்தில் நடந்த கற்பனைக் கதை போல...

                                   யாழ்பாணத்தில வளர்ந்த காலத்தில ,பொப் மார்லியின் " ரெக்கே " இசை பற்றி கொஞ்சமும் , அவர் விரும்பிப் புகைத்த "மேரி யுவானா " போதை வஸ்துப் பற்றி கொஞ்சம் அதிகமாகவும் கேள்விப்பட்டு இருந்தாலும்,பின் நாடக்களில் ஸ்வீடனில் அரசியல் அகதி முகாமில் வசித்த போது அது இரண்டையும் அனுபவிக்கவே சந்தர்பம் கிடைத்தது ! கூடவெ அவர் உருவாகிய "ரச்தபேரியன்" கலாசாரம் பற்றி கொஞ்சம் கிட்டத்தில் அதுக்குள்ள இறங்கியே பார்க்கவும் அந்த ஸ்வீடடன் அரசியல் அகதி முகாமில் வாய்ப்பு வேற கிடைத்தது !

                                        பொப் மர்லியை 80 களில் பிரபலம் ஆக்கிய அவரின் இசையுடன்,அவர் வசித்த நாடான ஜமைக்காவில் , உலகம் எங்கும் சட்டவிரோதமணா  மேரி யுவானா போதைவஸ்து, அந்த நாடில் சட்டரீதியா எல்லாரும் புகைக்லாம் என்று இருந்தது. அதுவே  உலகம் எங்கும் இருந்து ரசிகர்களை அந்த நாடுக்கு போகப்பண்ணியது ,அவர்கள் திரும்பி வந்த போது தங்களுடன் பொப் மார்லியின் இசையுடன்,அவரின் பைபிளின் பழைய ஏற்பாட்டு கோட்பாடுகளில் அமைந்த "ரச்தபெரியன் "கலாசாரத்தையும் மேற்கு உலகத்துக்கு கொண்டு வந்தார்கள்!

                              ஆங்கிலேயர்களால், ஆபிரிக்காவில் இருந்து , கரூபியன் தீவுகளில் ஒரு சிறு தீவான ஜமைக்காவில் கரும்புத் தோட்டதுக்கு வேலைக்கு கொண்டுவரப்பட,  கரும்பு போலவே சக்கையாகப் பிழியப்பட்ட , பாவப்பட கறுப்பின மக்களின் அடிமைகளின் வம்சாவளியான, பொப் மார்லியின் பாடல்களில் எப்படியும் ஒரு வரி அடிமை விடுதலை பற்றி வரும், அவரோட " A Blackman Redemption  " என்ற பாடல் இன்றுவரை  கறுப்பின மக்களின் தேசிய விடுதலை கீதம் என்கிறார்கள் . 

                          அதாலதான் எப்படி, கியூபாவின்" விடுதலைத் தந்தை " ஏற்நேஸ்ட்ரோ சேகுவேரவின் முகத்தை புரட்சியின் அடையாளம், " கெரில்லாப் போராளிகளின் கடவுள் " என்பது போல கொண்டாடுகிறார்களோ அதுபோல ,பொப் மார்லியின் இசையை " அடிமை விடுதலைப் புரட்சி இசை " என்கிறார்கள் உலகம் முழுவதும் .

                                     ஸ்வீடன் அகதி முகாமில் என்னோட அறையிட்கு அருகில் வாசித்த,கிழக்கு ஆபிரிக்க நாடான எதியோபியாவில் இருந்து அகதியா வந்திருந்த டானியல், பொப் மார்லியின் இசைக்கு மட்டுமில்லை,அந்தப் புகைக்கும் தீவிர ரசிகரா இருந்தார்! அந்த " மேரி யுவானா " போதைவஸ்தை மொரோக்கோவில் இருந்து எடுப்பித்து சட்டவிரோதமா முகாமில் இருந்த புகை போக்கிகளுக்கு விற்றுக்கொண்டும் இருந்தார்! 

                               பொப் மார்லி போலவே,நடை,உடை,பாவனையில் இருந்த அவர்,தலை மயிரை குடும்பைச் சித்தர்போல சடை ஆக்கி ,கழுத்தில நாய்ச் சங்கிலி போல நிறைய மாலைகள் போட்டு, யாரைப் பார்த்தாலும் "யா, மாண் ,யா மாண் ," எண்டு பொப் மார்லி போலவே வெட்டி வெட்டி விழுங்கி ஆங்கிலம் பேசி, கை முஸ்டியை பொத்தி, இடித்து , வருபவர் போபவர்களுக்கு,  "  Freedom came my way one day , And I started out of town, yeah! "    எண்டு பாடி பொப் மார்லி அடையாள வணக்கம் சொல்லுவார்!

                                   பொப் மார்லி மீது இருந்த அபிமானத்தால், நான் அவரிடம் நட்பாகி , அவரின் அறையில் , 24 மணித்தியாலமும்" non -stop " ஆகப் பாடிக்கொண்டு இருக்கும் பொப் மார்லியின் பாடல்களைக் கேட்டிருக்கிறேன். கிழக்கு ஆப்பிரிக்க நாடான எதியோப்பியா, அதன் ஜெனாதிபதியாக இருந்த " ஆபிரிக்க சிங்கம்" எண்டு அழைக்கப்பட்ட சாலீஸ் லாச்க்கி, பொப் மார்லியின் " ரஸ்த பேரியன்" சமயம், " ரெக்கே" இசைவடிவம், போதை கொடுக்கும் இலை "மேரி யுவானா " இன் இங்கிதம், பொப் மார்லி நம்பிய பைபிளின் பழைய ஏற்பாட்டுக் கதைகள் , போன்ற எல்லாத்தையும் அவரிடம் இருந்து கேட்டு அறிந்தேன் ! 

                                அவர் மரியுவானவை ஒரு பேபரில் குழாய் போல சுருட்டி ,அதை "joint "எண்டு சொல்லுவார்கள்,அதை டானியல் பத்த வைத்து , விரல்களால் பொத்திப் பிடித்து உள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளுக்க இழுத்து, புகையை வெளிய விடாமல் அமுக்கி , கண் இரண்டும் சிவப்பாக ,மேலே விட்டதை வெறித்துப் பார்த்துக்கொண்டு ஏகாந்தமா இருப்பார்!

                                         மேரி யுவானா  புகைக்கும் போது அவர் பாடல் CD ஐ நிப்பாட்டிப் போட்டு அமைதியாகப் புகைப்பார். ஒருமுறை

                 " ஏன் நீங்கள் அப்படி செய்கிறீர்கள்?" எண்டு கேட்டதுக்கு,

                              " மேரி யுவானா  புகைக்கும் போது ,பொப்பின் பாடல்கள் எல்லாம் நினைவுவரும், அதன் வரிகளுக்கு நிறைய வேறு வேறு அர்த்தமும் சேர்ந்து வரும் " என்றார், 

                             பொப் மார்லியே மேரி யுவானா  புகைத்துக்கொண்டு ,அவர் பாடல்களை எழுதி, அதுக்கு இசை அமைத்து இருக்கிறார் எண்டு வேற கேள்விப்படதால் அதில உண்மை இருக்கலாம் போலதான் இருந்தது !

                                          ஒரு நாள் டானியல் சொன்ன அந்த அனுபவத்தை அறிய , துணிந்து நானும் அதைப் புகைத்துப் பார்த்தேன், டானியல் joint சுருட்டித் தந்தார், அதைப் பவ்வியமா வேண்டி , பத்தவைத்து உள்ளுக்க இழுக்கவே தலை சுற்றியது, கொஞ்ச நேரத்தில கண் ரெண்டும் விரிய , காதுக்குள் யாழ்தேவி ரெயில் ஓடுற சதம் கேட்க , என் கை இரண்டும் சரணவாதம் வந்து  குறண்டிக்கொண்டு வரும்போல  விட்டு விட்டு இழுக்க ,   எப்பவுமே குப்பையாக இருக்கும் டானியலின் அறை, சடார் எண்டு சாணி போட்டு மெழுகியது போல சுத்தமா இருக்க , அதுக்குப் பிறக்கு நல்லா உள்ளுக்க இழுக்க, முளங்காலுக்கு கீழ என்னோட காலைத் தடவிப் பார்க்க இரண்டு காலும் காணாமல் போயிடுத்து....கண்ணீரும் புகையும் சேர்ந்து கண்ணீர்ப்புகை போல முகமெல்லாம் எரியத்  தொடங்க  

                                            " I shot the sheriff, but I swear it was in self defense  " என்ற வரிகளை , விரல்களை பிஸ்டல் துப்பாக்கி  போல ஒடுக்கி , அந்த பிஸ்டல் துப்பாக்கியை அங்கயும் ,இங்கையும் குறிபார்துக்கொண்டு ,  என்னைப் போலவே புகைத்துக் கொண்டு கனவில் மிதந்து பாடிக்கொண்டு இருந்த  டானியல் , பாடுறதை நிபாடிப்போட்டு , இயல்பாக

                             " யா மாண் , எப்படி இருக்கு? பொப் மார்லியின் பாடல் நினைவு வருகுதா, எங்க ஒரு பாடல் பாடும் பார்ப்பம்" என்றார். 

                               நான் " இடம் கொண்டு விம்மி , இனை கொண்டு இறுகி , இளகி முத்து வடங் கொண்ட கொங்கை நலங் கொண்ட நாயகி ,,,நல் அரவின்   அல்குர்ப் பனிமொழி... " எண்டு பாடினேன் ,

                              அவர் கோபமாகி " என்ன பிசத்துறாய் .இது , பொப் மார்லி பாடவில்லையே, எதோ புரியாத மொழியில் எதுக்குப் பாடி என்னோட உசிரை எடுகுறாய் ?" என்றார் கோபமாகி . நான், அமைதியாக , தலையைக்  கையாலா பிடிச்சுக்கொண்டு

                                  " இல்லை , இது எங்கள் நாட்டு கவிஞ்சர் அபிராமிப் பட்டர் என்பவர் பாடிய, அபிராமி அந்தாதி" என்றேன்,அவர் என்னை

                             " நிப்பாட்டு உன் பிசத்தலை" எண்டு , 


                  கொஞ்சம் வில்லன்கமாப் பார்க்க,  எனக்கு  அந்த பிஸ்டல் துப்பாக்கியை பார்க்க பயம் வந்திட்டுது ! நான் என்ன செய்ய  மேரி யுவானா  மண்டைக்குள்ள தாறு மாறாய்ப் பாய எனக்கு சின்ன வயசில படித்த அபிராமி அந்தாதி சாடர் எண்டு நினைவு வந்து, பொப் மார்லியின் பாட்டு ஒண்டுமே நினைவு வரவில்லை! 

                                அதுக்குப் பிறகு நான் ஒரு நாளும் அந்த நாசமாப் போன மரியுவான புகையை நினைத்தே பார்க்கவில்லை எண்டு ரீல் விடப்போறதில்லை ,,பல வருடங்களின் பின் ,ஹொலண்டில் ,ஆம்ஸ்டர்டாமில் அதை மீண்டும் ட்ரை பண்ணினேன் ,அது வேறுவிதமான அனுபவம் கொடுக்க , கடசியில் சக்கடத்தாரின் குதிரைபோல இருந்த கத்தரீனாவை சந்திக்க ,,,,அது வேற கதை ,,,,,,   !

                                       ஸ்வீடனில்  அரசியல் அகதிகள் ஆனா நாங்கள் எல்லாம் காட்டுவாசிகள் போல இருந்ததாலோ என்னோவோ , அந்த அகதி முகாமை , ரெம்ப நாகரிகமான ஸ்வீடிஷ் மக்கள், சன நடமாட்டம் இல்லாத ஒரு அத்துவானக் கிராமத்தில இருந்த பைன் மரக் காட்டுக்கு நடுவில வைத்திருந்தார்கள். சன நடமாடம் உள்ள டவுன்க்கு வரவே காடுப் தாண்டி  3 கிலோ மீட்டர் நடக்க வேண்டும்!

                                                நான் அந்த நாட்களில் தனிமையிலும் , வெறுப்பிலும் , மன அழுத்த நோயாலும் , வாழ்கையின் விளிம்பில் இருந்ததாலும்,  பொப் மார்லி போலவே,நடை,உடை, பாவனையில   மரியுவானா புகையின் மத்தியில்  இருந்த  டானியலின் போக்கு எனக்குப் பிடிக்கவேயில்லை . அனாலும் பொப் மார்லி போலவே,நடை,உடை, பாவனையில மட்டும் , அந்த முகாமில்  சில வருடம் வேறு  போக்கிடம் இல்லாமல்  இருந்தேன், 

                                  சிலநேரம் முகாமில இருந்து நடந்து காடுப் பாதையால டவுனுக்குப் போவேன், கிறுக்கு பிடித்த பொப் மார்லி போல இருந்த என்னைப் பார்த்தாலே நெறைய இளம் ஸ்வீடிஷ் பெண்கள் நெருங்கி வந்து , நட்பாக சிரித்து,பொப் மார்லி ஸ்டைலில் கை முஸ்டியை பொத்தி இடித்து " ம........... இருக்கா?" எண்டு ரகசியமாக ,கிசு கிசு குரலில் காதுக்க  கேட்பார்கள்.நான் அவர்களில் பலரை டானியலுக்கு அறிமுகம் செய்து வைத்தேன்!எதோ , அந்த நேரம் ஏதோ என்னால பொப் மார்லியின் "ரெக்கே "இசைக்கும்,அவரின் "ரேஸ்த பேரியன் " கலாசாரத்தும் செய்ய முடிஞ்சது அவ்வளவுதான்!

                                              மூன்றாம் உலக ,வறிய,ஆபிரிக்க  நாடுகளில் இருந்து அரசியல்  அகதியாகியா என்னைப் போன்றவர்கள்   வசிக்கும்  அகதிமுகாமில் டானியல்  மரியுவானா  விற்பது ஸ்வீடிஷ்  மக்களுக்கு பெரிய அக்கறை இருக்கவில்லை . ஆனால் அவர்களின் இளம் பெண் பிள்ளைகள் அகதிமுகாமுக்கு அதை வேண்ட வருவது கண்னுக்க குத்தத் தொடங்க  அதாலே நிறையப் பிரச்சினை வர ,ஒருநாள் டானியலை போலிஸ் வந்து அள்ளிக்கொண்டு போக அவரை பலதகரமாக இழுக்க, அவர் அப்பொழுதும் ,

                         "  Freedom came my way one day , And I started out of town, yeah!  ,Freedom came my way one day,,,¤

                                   எண்ட பொப் மார்லியின் பாடல் வரிகளை உரத்துப் பாடி , பொலிஸ்காரரோட  சண்டை பிடிக்க ,கடைசியில் டானியலை சுவிடிஷ் பொலிஸ்காரர் , விலங்கு போட்டு , கொற இழுவயில இழுத்துக்கொண்டு போயிட்டாங்கள் !

.

யாழ் எடுத்து இன்பம் சேர்க்க

இது  அப்பட்டமான உண்மைக் கதை இல்லை, அதுக்காக முழுவதும் கற்பனையும் இல்லை .விரும்பினால்  முடிவில் யாவும் கற்பனை என்ற வரியை நீங்களே போட்டுக்கொள்ளுங்கள்.  ஆனாலும்  எல்லாக் கதைகளில் அடித்து விரட்ட முடியாத யதார்த்தம் கொண்டு வரும்  உண்மை மனிதர்களின், ஒரு காலகட்டத்தில் நடந்த கற்பனைக் கதை போல...

                                     யாழ்பாணத்தில் பிறந்து, இளவயது முழுவதும் வாழ்ந்த போதும், அந்த நகரத்தின் பெயர் யாழ்ப்பாணம் என்று வந்ததுக்கு பாணன் என்பவன் யாழ் என்ற நரம்பு வாத்தியம் வாசித்துப் பாடியதால் அந்தப் பெயர் காரணப்பெயர் ஆக வந்த கதை பலர் வரலாறாக எழுதி இருந்தாலும், அந்த நரம்பு வாத்தியம்,யாழ்பாணதின் அடையாள இலட்சினையாக படத்திலயும், நந்திக் கொடியிலயும் இருந்தாலும்,ஒரு நாளும் அந்த இசைக் கருவியை நேரடியா அந்த நகரத்திலோ, அல்லது இலங்கைத் தீவிலோ யாரும் வாசிபதையோ கண்டதே இல்லை.

                                                      இலங்கையின் தலை நகரம்   கொழும்பில் ரசியன் கலாச்சார நிலையத்தில் ஒரு ரசியப் பெண் வாசித்ததைப் பார்துள்ளேன் ,,ஆனால் அவா ரசியன்,,தமிழ்,சிங்கள இசைக் கலைஞ்சர் வாசித்து பார்த்தில்லை. அதெப்படி ஒரு பிரதேசத்தின் வாழ்வியல்  வரலாற்றில் இலட்சினையாக  வடிக்கப்பட்ட ஒரு இசைக்கருவி  பிரக்டிக்கலாகப்  பாவனையில்  இல்லாமல்  இருக்கு  என்ற  குழப்பம் நிறைய நாட்களாய் இருந்தது 

                                       அதைவிட தென்னிந்திய தமிழ் நாட்டு சங்க இலக்கியங்களில், கல்லாடம் என்ற இசைப் புத்தகத்தில்,திருக்குறளில்,யாழைப்பழித்தமொழியம்மை கதையில், கோவலன் பூம்புகார்ப் பூவையருக்கு அல்வா கொடுத்த சிலப்பதிகாரக் 'கானல்வரி'' யில் வரும் யாளைப், பாணன் என்பவன் தூக்கிக் கொண்டு, பாக்கு நீரிணையக் கடந்து யாழ்பாணம் வந்து, ஒரு மன்னனுக்கு வாசித்துக் காட்டி, இலங்கையின் வடக்கின் தொங்கலில் இருக்கும் ஒரு பிரதேசத்தைப் பரிசாகப் பெற்றான் என்று தகவல்கள் சொல்லுது. 

                                    யாழ் என்ற அந்த இசைக்கருவி ஒரு காலத்தில் இருந்து இருக்காலம் தொன்மையான இலங்கையில், மட்டகளப்பு காரைதீவில்ப் பிறந்த சுவாமி விபுலானந்தர் யாழ் நூல் எண்டு ஒன்று எழுதியுள்ளார் என்கிறார்கள்." துன்பம் சேர்ந்த வேளையில் யாழ் எடுத்து இன்பம் சேர்க்க மாட்டாயா " எண்டு ஒரு எளிமையான பாடல் இருக்கு. யாழ் நூல் அந்த இசைக்கருவியின் மேன்மையான பல விசியங்களை சொல்லி இருக்கு என்கிறார்கள் 

                                           அந்தப் பாடல் சங்கீதம் படிபவர்கள் பாடும் போது கேட்டிருந்தாலும்,அவளவுதான் அதுக்கு மேல அந்த வாத்தியம் எப்படி இருக்கும்,அதன் இசை எப்படி இருக்கும்,துன்பத்தில் அவதிப்பட்டவன் ,அவன் துன்பத்தை அகற்ற யாழ் எடுத்து இன்பம் சேர்த்த அந்தப் பெண் எப்படி இருந்திருப்பாள், அதை பாணன் எப்படி வாசித்தான் போன்ற குழப்பங்களுக்கு நடைமுறை ஆதாரம் இல்லை

                             ,யாழ் என்ற ஹார்ப் எண்டு இங்கிலீசில் சொல்லும் வாத்தியம் வெஸ்டர்ன் கிளாசிகல் இசை வடிவங்களில்,இருக்கு அதை நரம்பு முறுக்கிய இளம் பெண்கள் அழகாய் வாசிக்கும், செமி கிளாசிகல் பாடல்கள்,படங்கள்,கடுரைகள் போன்ற விபரம் இன்டர்நெட்டில் இருக்கு.

                                      சில வாரம் முன் புறநகர் ஒஸ்லோவில் ,நான் வசிக்கும் பேட்டையில் உள்ள இடை உயர் நிலைப் பாடசாலையில், வெஸ்டர்ன் கிளாசிகல் இசையை, ஒரு பாடமாகப் படிக்கும், அழகுப் பெண் பிள்ளைகளிடம் ஒரு நல்ல நாள், அவர்கள் இசைக்கலைஞர்கள் போல இசைக்கருவிகளைக்  காவிக்கொண்டு வந்து ஒஸ்லோ போகும் ரெயிலிட்கு காத்திருக்கும்போது சில இசை கருவி விசியங்கள் அவர்களிடம் கேட்டேன், என்னை மேலயும் கீழயும் முழிஞ்சு பார்த்திட்டு கொஞ்சம் கதைத்தார்கள், கொஞ்சம் நம்பிக்கை வர

                        " உங்கள் இசை வகுப்பில் என்ன என்ன இசைக்கருவிகள் இருக்கு "

                        எண்டு கேட்டேன் , சொன்னார்கள்,அதில் ஆச்சரியமா அவர்களின் இசை வகுப்பில் யாழ் என்ற , நான் பல வருடம் பார்க்க ஆசைப்பட்ட ஹார்ப்பும் இருக்கு எண்டு சொன்னார்கள்,

                     " நான் அதைப் பார்க்கலாமா " எண்டு கேட்டேன்

                     " எதை " எண்டு கேட்டார்கள், கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

                 நான் விளக்கமா சொன்னேன்,

              " உங்களுடன் சேர்ந்து ஒரு பாடல் கிடாரில் வாசிக்கலாமா " எண்டு கேட்டேன்,

                 " ஓம் " என்றார்கள்.

                         சொன்ன மாதிரி அவர்கள் இசை ஆசிரியரின் அனுமதியுடன்,ஒரு நாள் நேரம் ஒதுக்கி தங்கள் வகுப்பு அறையிட்கு வந்தார்கள், அவர்களைப் பாடவைத்து " புல்லாங்குழல் குடுத்த மூங்கில்களே ....." பாடலை பியானோ ,செல்லோ, பேஸ் வயலின், இவைகளுடன் பாட,   நான் கிட்டார் வாசித்து ஒரு ஆர்வக்கோளாரில பாடினோம், அன்று தான் முதல் முதல் யாழ் என்ற வாத்தியத்தை தொட்டுப் பார்த்து, அதன் நரம்புகளில் கொஞ்சம் சுண்டியும் பார்த்தேன்

                           அந்தப் பிள்ளைகள், என் கிட்டார் இசைஅறிவில் கொஞ்சம் சந்தேகமாத்தான் ஆரம்பத்தில் இருந்தார்கள். நான் வாசிக்கத் தொடங்க ஆச்சரியமாகினார்கள். தட்பாதுகாப்புக்கு அல்லது ,வேண்டுமென்றோ தமிழ் பெண்கள் சொல்லவது போல என்னை " அண்ணா " என்றோ " அங்கிள் " எண்டோ சொல்லிக் கேவலப்படுத்தாமல் என்னோட பெயரை சொல்லியே அழைத்தார்கள். அதுவே எனக்கு என் வயசில் அரைவாசியைக் குறைக்க வைத்த மாதிரி இருந்தது. 

                      பன்னீர் மழை சொரியும் மேகங்களே , எங்கள் பரந்தாமன் மெய் அழகைப் பாடுங்களே....." என்ற அந்தப் பரந்தாமன் புகழ் பாடும் மெல்லிசை மன்னர் பாடலை நான் கிடாரில் வாசித்து, சில டெக்னிகல் விசியம் சொல்ல அவர்கள் " பார் நோடச்ன் " வடிவில் அதை " டைமிங், டெம்போ " எல்லாம் போட்டு சடார் சடார் எண்டு எழுதினார்கள்,எழுதி முடிய அந்தப் பேபரை என்னிடம் தந்து " சரியா "  எண்டு கேட்க,நான் அந்தப் பேபரை தலை கீழாக்கப் பிடித்து வாசித்த்தும் ஒண்டுமே விளங்கவில்லை. அந்த ஒரு விசியத்தில் மட்டும் தான் விதி என்னைக் கேவலப்படுத்த ,

                         நான்  " முறைப்படி இசைக் குறிப்பு  எழுதும் முறையில் நான் கிட்டார்  படிக்கவில்லை " என்ற உண்மையைச் சொன்னேன்.

                    " உண்மையாதான் சொல்லுறியா  பார் நோடச்ன் விளங்காதா உனக்கு,,,ஆச்சரியம் "   எண்டு கேட்டு, உண்மையாகச் சிரித்தார்கள்.

                        இந்த அன்பின் அழகுப் பிள்ளைகள்,,,வஞ்சகம் இல்லாத நல்லது கெட்டது தெரியாத பிள்ளைகளைப் பாடவைத்து " புல்லாங்குழல் குடுத்த மூங்கில்களே ....." பாடலை இவர்கள் பியானோ ,செல்லோ, பேஸ் வயலின் ,இவைகளுடன் பாட நான் கிட்டார் வாசித்து முடிய  எனக்கு நிறைய வெஸ்டர்ன் மூசிக் டெக்னிகல் விஷயம் வேறு சொல்லி தந்தார்கள். 

                                        புலம்  பெயர் டமில் பிள்ளைகள்," ஊதாக் கலரு ரிப்பன் எவண்டி உனக்கு அப்பன் " ,போன்ற டமில் பாடல்கள் படிக்க ஆசைப்படும் போது, புல்லாங்குழல் குடுத்த மூங்கில்களே ....." பாடலில் வரும் பல விசயம், தமிழ் மொழி, இந்துக் கலாசாரம்,திருவேங்கடம் ,ஸ்ரீ ரங்கம், கிருஸ்னர் , பற்றி இந்தப் பிள்ளைகள் என்னிடம் அந்த பாடல் படித்து முடியக் கேட்ட கேள்விகள் ஆச்சரியமா இருந்தது........

                          புருசோத்தமன் புகழ் பாடி முடிய

                 " யாழ் என்ற ஹார்ப் இசைக்கருவியை கொஞ்சம் நோண்டலாமா எண்டு கேட்டேன் " ,

              ,  ," உர்சுலா தான் அதை நல்லாவே போட்டு நோண்டும் ஒரு மாணவி இங்கே, அவளோடு போய் அவளையும் போட்டு நோண்டு "   எண்டு சிரித்து சிரித்து சொன்னார்கள்.

                           உர்சுலா 007 ஜேம்ஸ் பொன்ட் படங்களில் வரும் கதாநாயகிகளின் சின்ன வடிவம் போல மின்ன , யாழ்கருவியை வைச்சு நோண்ட தன்னை விட்டாள் வேற யாருமே இந்த உலகத்தில இல்லை என்பது போல அவளும் சிரித்து சிரித்து கைகளால் சிரித்தாள் உர்சுலா . 

                        உர்சுலா நான் கிட்டார் வாசித்ததைப் பார்த்தவள்,எனக்கு கொஞ்சம் விசியம் தெரியும் எண்டு அவளுக்கும் தெரியும்,கிட்ட வந்து என்னவோ கேள்வி கேட்க்கப் போற மாதிரி நிண்டாள், என்னவும் வில்லங்கமான டெக்னிகல் கேட்கப் போறாளோ எண்டு நினைக்க,

                " முதலில் உன்னிடம்  சிகரட் இருக்கா " எண்டு கேட்டாள்,

                    " எப்படி அது தெரியும் " எண்டு கேட்டேன்,

                      " ரெயில்வே ஸ்டேசனில் புக்கு புக்கு எண்டு ஊதித் தள்ளினாயே நான் பார்த்தேனே " எண்டாள்,

                  சிகரட் பெட்டியையே அவளிடம் கொடுத்தேன்,ஒன்றை மட்டும் எடுத்து வைத்து கொண்டு,

                     " பிறகு பத்துறேன் வா ஹார்ப் காட்டுறேன் " எண்டு சொல்லி

                     " நீ எந்த நாட்டைச் சேர்ந்தவன் " ,எண்டு கேட்டுக்கொண்டே வேறு சில விபரமும் கேட்டாள்.

                    அந்த இசை வகுப்பறையின் மூலையில் இருந்த ஹார்ப் யாழ்பானா இலச்சினையில் இருந்த ,அட்டை போல சுருண்டு வளைந்த யாழ் போல இருக்கவில்லை, அங்கே இருந்த ஆள் உயர ,மரத்தால் செய்த நைலான் நார்கள் இணைத்து , யாழ்பாணத்தில சிமெந்து பூச்சு வேலைக்கு மேசன்மார் மணல் கஞ்சல்,குப்பை,குறுனிக் கல்லு வராமல் அரிக்கும் பெரிய வலை போட்ட தட்டுப் போல இருந்த பெரிய யாழ், வித்தியாசமான் வடிவம். கடல்க் கன்னி போன்ற உர்சுலா ,என்னை அருகில அழைத்து,

                      " உங்கள் தாய் நாட்டில் இது வாசிபாங்களா " எண்டு கேட்டாள்,

                      "  என் தாய் நாட்டில் நான் பிறந்த நகரத்தின்   முதல்ப் பெயரில் மட்டும் இந்த இசைக்கருவி பெயர் இருக்கு ,உர்சுலா ,ஆனால் ஒரு நாளும் கண்டதே இல்லை " என்றேன்,

                        ஹார்ப் தெனிந்திய சினிமா பாடல்களிலும் இசை அமைப்பில் பயன்பாட்டில் இல்லை போல இருக்கு, அது வாசிக்க கடினமான ஒரு வாத்தியம் எண்டு விளங்கியது அதை சில வெஸ்டர்ன் இசை மேதைகள் இலகுவாக வாசிக்கும் போது ...

                                    உர்சுலா கை ரெண்டையும் உரசிப்போட்டு, கொஞ்சம் சுருதி செக் பண்ணிப்போட்டு,

                      " எனக்கும் கொஞ்சம் தான் தெரியும், லுட்விக் பித்தோவன். அமேடியஸ் மொசார்ட்,செபஸ்டியன் பாச் ,தொச்டோவ்சிகி,  எட்வார்ட் கிரிக்..,இவர்களில் உனக்கு என்ன சிம்பொனி வேண்டும் " எண்டு கேட்டாள்,

                       நான் ஹிஹிஹிஹி எண்டு இழிசுப்போட்டு, உர்சுலா

                       " உர்சுலா நீ சொல்லும் மேதைகள் பற்றி ஒண்டுமே எனக்கு தெரியாது  , செல்டிக் வுமன் இன் ஸ்க்புரோ பாயர் வாசிப்பியா,அது நான் ஹர்பில் வாசித்து கேட்டு இருக்குறேன் " எண்டேன்.

                         சுமாராக வாசித்துக் காட்டினாள். அவள் அதை நிண்டு கொண்டே கைகளை அந்த இசைக்கருவியின் இரண்டு பக்கமும் பாவித்து ,விரல்களால் மெதுவாக தட்டி, இடை இடை காலுக்கு கீழே உள்ள கட்டைகளில் அமத்த. நரம்புகளில் நாதம் வேறுபட்டு வந்தது.

                         " கிடாரில் வரும் அகோடேவ் விசியம் தான் இதன் அடிப்படை,நீயும் சுண்டிப் பார்க்கப் போறியா " எண்டால் உர்சுலா . 

                                  நான் அவளச் சுண்டிப் பார்க்க கேக்குராளா,இல்லை யாழ் இசைக்கருவியை சுண்டிப் பார்க்க கேட்குறால எண்டு ஜோசிக்கும் போது,அவளே என்னோட கையைப் பிடிச்சு இழுத்து

                      " இது பிளாட். இப்படி சுண்டு , இது சார்ப், இதை அப்படி நோண்டு, இது நியுட்ரல் சொநேடோ இதை இப்படிக் கிண்டு "

                      எண்டு உர்சுலா சொல்ல,நான் தாறுமாறா சுண்டின சுண்டில இசை கொஞ்சம் அன்னதானத்துக்கு அடிபட்டு மடத்துக்க உள்ளிட்டவர்களின் கும்பலில் கோவிந்தா இரைச்சல் போல வர அவள் சிரிச்சு,

                                   " இதைக் கேட்குற, லுட்விக் பித்தோவன், அமேடியஸ் மொசார்ட்,செபஸ்டியன் பாச் ,தொச்டோவ்சிகி,எட்வார்ட் கிரிக். இவர்களின் ஆத்மா சாந்தி அடையாது, மறுபடியும் ஆவியாகி அலையப் போகுது "

                              " டென்மார்க்   கோபன்ஹேகன் இல் ஒரு  இளம் கடல்க்கன்னி  ஹார்ப்  வாசித்துக்கொண்டு இருக்கும் ஒரு சிலை  ஒரு கடற்கரையில்  பார்த்தேன் ,,நீ பார்த்து இருக்கிறாயா  உர்சுலா "

                                       "  இல்லை,,ஆனால் கேள்விப்பட்டு இருக்கிறேன்,,அந்தக் கடல்கன்னி அவள்  காதலனுக்காக  அதை  வாசித்தாள்  என்பார்கள் "

                                      "  அவள்  காதலன்  எங்கே "

                                 "  வேற  எங்கே,,வேற  யாரும்  ஒரு  கன்னியோடு எஸ்கேப்  ஆகி  இருப்பான் ,,உலகத்தில இளம் ஆண்களின்  மண்டைக்குள்  என்னதான்  ஓடுது  என்று  சொல்லவே  முடியாது "

                                         "   ஹ்ம்ம்,,ஆனாலும்  கடல்கன்னி  ,,ஒரு  மீனும்  பெண்ணும்  சேர்ந்த  உருவம்,,அதால  அவன்  விட்டுப்போட்டுப்  போயிருக்கலாம் "

                                        "  ஹஹஹா,,சலித்துப்போக  எப்படியும்  விட்டுப்போட்டுதான்  போவாங்கள்,,அது  மீனோ,,மனுசியோ  முக்கியமில்லை "

                                        " எங்க  ஊரில்  ஒரு  பசுமாடும்  பெண்ணும்  சேர்ந்த ஒரு  கன்னி  இருக்கிறா "

                                         "  உண்மையாவா,,அவாவுக்கு  என்ன  பெயர் "

                                        " அவாவைக்,,காராம்பசு  என்று  சொல்லுவோம் ,,உர்சுலா "

                                   "  அப்படியா,,அவாவும்  ஹார்ப்  வாசிப்பாவா "

                                       "  இல்லைப்பா,,அவா  ஒண்ணும்  வாசிக்க மாட்டா..ஆனால் கேட்டதெல்லாம்  கொடுப்பா "

                                            " என்னது,,கேட்டது  எல்லாம்  என்றால் "

                                             " கேட்டது  எல்லாம்  தான் உர்சுலா "

                                             " அட,,எனக்கு  அப்படி  ஒரு ஆள் கட்டாயம்  தேவை,, என்னோட  அப்பாவும்  அம்மாவும்  பிரிந்து விட்டார்கள்..நான்  கேட்டது  எல்லாமே  அவர்கள் வேண்டித்தாறது  இல்லை.."

                                                " ஹ்ம்ம் "

                                               "  நீ சொன்ன அந்தக்  காராம்பசுவை  பிடிச்சுக்கொண்டு வந்து வீட்டுக்குப்  பின்னால  கட்டி வைச்சா  வாழ்க்கை  அலாதியாகப்  போகும்  போல இருக்கே "

                                          " ஹ்ம்ம்,,அது  எங்க  இருக்கு  என்று  நானும்தான்  தேடுறேன் "

                                  "  ஹஹஹ்ஹா  , வா,,ரெண்டு பேரும்  சேர்ந்து  தேடுவோம்  ,,ஹஹஹாஹ்  "

                                        எண்டு உர்சுலா சொல்லி, கொஞ்சம் தாரளமாக அருகில் வந்து பூனை போல உரசிக்கொண்டு, டெக்னிகலா யாழில் உள்ள இசை எழுப்பும் விசியங்களை,வஞ்சகம் இல்லாமல்க் குனிந்து,நிமிர்ந்து சொல்லி தர நான் யாழ் பாடிய பாணன் போல பூந்து விளையாட யாழ் இசைகருவிகளின் நரம்புகள் முறுக்கு குறைந்து இழக இழக,வீராளி அம்மாள்சி புண்ணியத்தில் எனக்கு உடம்பெல்லாம் நரம்புகள் முறுக்கு ஏற்ற வைத்தாள் அந்த கடல்க் கன்னி உர்சுலா .

                                                          ஹார்ப் அருமையான இசைக்கருவி,அதன் நாதம் தனித்துவமானது," லோர்ட் ஒப் ரிங்க்ஸ் " படத்தில அந்த வாத்தியத்தைப் போட்டு அழகா பின்னணி இசை அமைத்து இருக்குறார்கள். உர்சுலா இடம் நிறைய விசயம் கேட்டேன், அவள் யாழ் பற்றி டெக்னிகல் விசியம் சந்தோசமா சொன்னாள் உர்சுலா , ஒஸ்ரியா ,வியன்னா போய் அங்கே சிம்பொனி விசியம்எல்லாம் கரைத்துக் குடிக்கப் போறதா சொன்னாள். நான் கொஞ்சம் ஜோசித்துபோட்டு

                               " துன்பம் சேர்ந்த வேளையில் யாழ் எடுத்து இன்பம் சேர்க்க மாட்டாயா... எண்டு என் தாய் மொழியில் ஒரு கீளைதேய இசை வடிவில் தமிழ் பாடல் இருக்கு, அந்தப் பாடல் யாழ் இசைக்கருவியில் வாசிக்க நல்ல அர்த்தம் உள்ள பாடல் எண்டு நினைகேறேன்,நான் கிட்டார் வாசிக்க ,நீ யாழில் வாசிக்க அதைப் பாடி ரேகொர்ட் பண்ணுவமா ,உனக்கு நேரம் உள்ள ஒரு நாள் சொல்லுவியா "

                          எண்டு கேட்டேன்,

                         உர்சுலா சின்னக் குழந்தைகள் போல ஆர்வமாகி,

                                 " எங்கே அதைப் பாடிக்காட்டு எப்படி ஒர்கேச்ற்றசன் அரேன்ச்மென்ட் வருகுது எண்டு ஐடியா போடலாம் " என்றால்,

                 " எனக்கு அந்த . துன்பம் சேர்ந்த வேளையில் யாழ் எடுத்து இன்பம் சேர்க்க மாட்டாயா  பாடல் முதல் வரிகள் மட்டுமே தெரியும் உர்சுலா " எண்டு சொன்னேன்,,

                           ," அடப் பாவி , எல்லாம் அரையும் குறையுமா தானே தெரிந்து வைத்து இருக்குறாயே " எண்டு சொல்லி சிரித்தாள் உர்சுலா ,

                                " ஹ்ம்ம்,  எதுக்கும் நீ பாட்டை எடுத்து பாடிக்காட்டு நான் மிச்சம் செய்தாப் போச்சு " எண்டு சொல்லி இருக்குறாள் அந்தக் கண்களால் சிரிக்கும் கடல்க் கன்னி உர்சுலா . 

                                   " மணம் கமழ் மாதரை மண்ணி யன்ன அணங்கு மெய்ந் நின்ற அமைவரு, காட்சி " போன்ற நீலக்கடல் அலைக் கண்களால் ,விழி வீசி மொழி பேசும் உர்சுலாவுடன் , யாழ்ப் பாணன் பாடிய, " ஆய் திணை யரிசி அவையல் அன்ன வேய்வை போகிய விரல் உளர் நரம்பின் _" நினைவோடு, வட துருவ ஆர்டிக் வலயத்தில் இருக்கும் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் யாழ் பாடி அந்தப் பாடலை , இந்தக் கோடை காலப் பள்ளி விடுமுறையில் ரேகொர்ட் பண்ணப்போறோம்.... 
 .

ஒஸ்லோ 27.04.14

Sunday, 24 May 2015

உயிர் தேடும் ரோசேத்தா ..

சென்ற  ஆண்டு நவம்பர் மாதக் கடைசியில் பூமியில் நாங்கள் " பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் அங்கம் குருகினத்தால்.. " என்று பாடிக் " கொங்கைகள் பொங்கப் குடையும் புனல்பொங்கப் பங்கயப் பூம்புனல்பாய்ந்து " திருவெம்பாவை பாடும் நேரம் விண்வெளியில் ஒரு உலக அதிசயம் நடக்கப்போகுது என்று எதிர்பார்த்தது,,,கடைசியில் வெற்றிகரமாக நடந்தது. 

                                பில்லியன் மைல்கள் வின் வெளியில் இருந்து , இருள் வெளிகள் தாண்டி வரும் அந்த மில்லியன் வருடங்கள் பழமையான செய்தி இன்றை வரை நாங்கள் நம்பும் இந்த உலகத்தில் முதல் உயிர் எங்கிருந்து வந்தது என்ற பல அறிவியல்ப் புத்தகங்கள் சொல்லும் உண்மைகளைப் பிரட்டிப் போடலாம், சமய புத்தகங்களின் நம்பிக்கைகளுக்கு ஆப்பு வைக்கலாம் இந்த வால் வெள்ளியில் இறங்கியுள்ள செயற்கைக்கோள் அனுப்பும் தகவல்கள். 

                                எங்களின் சித்தப்பு,பெரியப்பு பிரபஞ்சத்தில் வேற ஒரு கிரகத்தில் இருக்கலாம், அத்தை மகளும்,மாமன் மகளும் அன்றமிடா கலக்சியிலும் இருக்கலாம் போன்ற  முக்கியமா இதுவரை அறியாத பல விசியங்களை எங்களுக்காக Comet Churyumov–Gerasimenko பில்லியன் மையில் தூரத்தில் இருந்து ஒரு செய்தியாக கொண்டு வந்து இருக்காலம், சிலநேரம் இதில எதுவும் நடக்காமலும் புஸ்வானம் போலவும் போகலாம், அது என்ன எண்டு சொல்லுறேன்..

                                       பத்து வருடம் முன்  " உன் விழியில் விழுந்தேன் வின் வெளியில் பறந்தேன் கண் விழித்து சொப்பனம் கண்டேன்... "எண்டு சினிமாப் பாட்டுப் பாடிக்கொண்டு, அஸ்டர் பெல்ட் என்ற சனிக்கிரக பாறைத் தொகுதியின் இடியப்பத் தட்டு போன்ற வட்ட வளைவுகளின் விளிம்பில்  இருந்து " இனிக் கூட்டுக் குடும்பம் சரி வராது நான் தனிக் குடித்தனம் போறேன் " எண்டு சனியன் பிடித்து ,தப்பியது ஒரு விண் கல் ,,அது வால் வெள்ளியாகி நீண்டுகொண்டே நீந்தத் தொடங்கியது. 

                               அதுதான்   தடவிக்கொண்டு  எங்கள் சூரியக் குடும்பத்துக்கு உள்ளே  குறுக்க மறுக்க வந்த  கொமெட் என்ற Comet Churyumov–Gerasimenko வால் வெள்ளி. இந்த வால்வெள்ளியின்  " ஆற்று இருந்து அல்கி, வழங்குநர்ச் செகுத்த படு முடைப் பருந்து பார்த்திருக்கும் " கூந்தலைப் குறி வைத்துத் தேட அனுப்பிய நூறு கிலோ அழகு தேவதை ரோசேத்த Rosetta (spacecraft) சென்ற மாதம் அது தேடிக்கொண்டு இருந்த வால்வெள்ளியை பில்லியன் மையில்கள் அலைந்து, இடையில சில வருடம் தொடர்பு இழந்து, மறுபடியும்  சென்ற மாதம் 67P/Churyumov–Gerasimenko வால் வெள்ளியைக் கண்டுபிடித்துக்  கண் அடித்து, அதன் கமராக் கண்களைத் திறந்து எங்கள் நெஞ்சில பாலை வார்த்து  வால் வெள்ளிகளின் வாசல்க் கதவைத் தட்டிய Space rendezvous சம்பவம் தான் அது.

                                       எங்களின் சூரியத் தொகுதிக்கு கொஞ்சம் வெளியே ,அதன் விளிம்பில் சூரியனின் ஈர்ப்பு சக்தி கையை விடும் தூரத்தில் என்ன இருக்கு, என்ன நடக்குது எண்டு யாருக்கும்  தெரியாது,அங்கெல்லாம் சட்டலைட் அனுப்பி ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு இன்னும் எங்களிடம் தொழில்நுட்பம் இல்லை. ஒரே வழி அந்த பிரபஞ்ச வெளியில் இருந்து எங்கள் எல்லைக்குள் வரும் ஒரே ஒரு நல்ல தகவல் காவியான வால்வெள்ளிகளை மட்டும் வளைச்சுப் பிடிச்சு விசாரிக்கலாம்,அதுதான் பத்து ஆண்டுகள் முன் ஐரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்சி அனுப்பிய மில்லியன் டாலர் விழுங்கிய இந்த வால்வெள்ளி 67p சூரியமோவ் கிரிகிச்மெங்கோ வால்வெள்ளி பிடிக்கும் அந்த விண் வெளித் திட்டம். 

                                 அமரிக்காவின்  நாசா விஞ்ஞானிகள் தான் இதை முதலில் செய்ய இருந்தார்கள். வல்லரசு அமரிக்க பொருளாதாரம் சரிந்து விழ, காங்கிரஸ் " நாயைப்பிடி வால் வெள்ளி வேண்டாம் " என்று அந்த திட்டத்துக்கு காசு கொடுக்கவில்லை. வால்வெள்ளி எங்கள் சூரியத் தொகுதியை அண்மிக்கும் இந்த சந்தர்பத்தை இழக்க விரும்பாத ஐரோப்பிய  விஞ்ஞானிகள் துணிந்து இதில இறங்கினார்கள், நம்பினால் நம்புங்க , இதில மிகப் பெரிய ஆச்சரியம் இந்த  வைர மூக்குத்தியில்ஒரு விண்கலத்தை இறக்கி அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் நிகழ்வை  நடத்தப்போகும் European Astronaut Centre  விஞ்ஞானிகள் குழுவில் முக்கால் வாசிப்பேர் பெண் விஞ்ஞானிகள். 

                                  67p சூரியமோவ் கிரிகிச்மெங்கோ வால்வெள்ளியை 1969 இல் கண்டு பிடித்தவர்கள் இரண்டு சோவியத் யூனியன் ஒன்றாக இருந்த கால இரசிய விஞ்ஞானிகள் , அதனால் அவர்கள் இருவரின்  Churyumov–Gerasimenko பெயரைச்   சேர்த்து வெள்ளிக்கு வைத்துளார்கள். ஒருவர் Comet Churyumov இன்றைக்கு உள்நாட்டு சண்டையில் சாப்பிடவும் வழி இல்லாமல் அகதிகள் அலையும் உக்ரேன் நாட்டவர், மற்றப் பெண் விஞ்ஞானி வலந்தினா Gerasimenko  கசாகிஸ்தான் நாட்டவர். அவர்களின் கணிப்பில் 67p சூரியமோவ் கிரிகிச்மெங்கோ வால்வெள்ளி ஒரு நாள் எங்களின் எல்லைக்குள் வரும் எண்டு எழுதி வைத்துப்போட்டு மேல போய்ச் சேர்ந்து விட்டார்கள் ,அவர்களால் அப்போது அவளவுதான் செய்ய முடிந்தது,

                                உண்மையில் 67p சூரியமோவ் கிரிகிச்மெங்கோ வால்வெள்ளி எங்கள் சூரியத் தொகுதிக்குள் வந்த கொஞ்ச வருடங்களில்,எங்கள் கிரகத் தொகுதியில் உள்ள மிகப் பெரிய கோள் ஆனா, பூமிபோல ஆயிரம் மடங்கு ஈர்ப்பு விசை உள்ள வியாழன் என்ற ஜூப்பிடர் கிரகம் வியாழ தோஷம் பிடிச்சோ அல்லது வேற என்ன கோபமோ தெரியாது வால் வெள்ளியைப்  பலமுறை தாறுமாறா இழுத்து எறிந்தது ,அதன் பாதை பல சிரமங்களுக்கு மத்தியில் பில்லியன் மையில்கள் அலைய, அதைத் திரத்தி திரத்தி தேடி எங்கள் சின்னப் பெண் ரோசெத்தா டிசெம்பர்  மாதம் கண்டு பிடித்தா .

                                        நாங்கள் வசிக்கும் இந்த பூமிக்கு ஒரு நாள் ஆபத்து வின் வெளியில் இருந்துதான் வரும், அதோட எல்லாரும் கோவிந்தா தான்,முக்கியமா வால் வெள்ளிகள் ஆபத்தானவை ,எண்பதுகளில் வியாழக் கிரகத்துடன் மோதிய சூமேகர் லேவி என்ற வால்வெள்ளி அந்த கிரகத்தில் மோதி ஏட்படுத்திய பள்ளதுக்குள்ள எங்கள் பூமியைக்  கொண்டுபோய் வைக்கலாம்,அவளவு அகோர அடி,அப்படி ஒரு நிலைமை எங்களுக்கு வரும் போது எல்லா வீராதி வீரன்களும் ஓடிபோய் கெஞ்சப் போவது அஸ்ட்ரோ பிசிக்ஸ் விஞ்ஞானிகளிடம் தான்,அவர்கள் தான் விழிப்பாக விண் வெளியை பார்த்து கொண்டு இருப்பவர்கள் .

                            உயிர் கொடுத்து  உயிர்  தேடிய  ரோசேத்தா சட்டலைட் பல சந்தர்பங்களில் வின் கற்கள்,வேறு பல  சோலார் கதிர்கள்,காமாக் கதிர்கள், குழப்பங்களில் இருந்து இந்த பத்து வருடங்களில் உயிரைக் கையில பிடிசுக் கொண்டு பிராயணம் செய்த பில்லியன் மைல்களில் பலமுறை மயிர் இழையில் தப்பி இருக்கு, மணிக்கு முப்பத்தி ஐயாயிரம் கிலோ மீட்டார் வேகத்தில் ஒரு நீள் வட்டப் பாதையில் பறக்கும் 67P/Churyumov–Gerasimenko வால் வெள்ளியை வண்ணாத்திப்பூச்சியை பிடிக்கிற மாதிரி பிடிக்க முடியாத சந்தர்ப்பம் இருந்தும் ,கடைசியில் ரேசோத்தா நெருங்கிய இந்த திட்டமே ஒரு அதிசயம் இப்படி முடிவில் வெற்றி அளித்தது என்கிறார்கள் விஞ்ஞானிகள்...

                                       ஜெர்மனியில் உள்ள பிரான்க் போர்ட் அருகில் உள்ள  டாரம்ஸ்டேட் Darmstadt  நகரில் உள்ள ஐரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்சி சென்டரில் European Space Agency (ESA) இருந்து ரோசெத்தாவை இயக்கிய  விஞ்ஞானிகள் சளைக்காமல், செவ்வாய் கிரகம் , வியாழக் கிரகம் இன் மைய நீக்க  சுழற்சி இளு விசையையும், ரோசெத்தாவில் பொருத்தியுள்ள சோலார் சக்கி எஞ்சின்கள், சின்ன ஹிபர்ஜோனிக் ரொக்கெட் உதவியில் அதன் பாதையைக்  கணித்து இயக்கி,அதைத் தேட வைத்து, மண்டையைப் பிச்சு பாதைகளைக் கணித்து இயக்க வைத்தும்,சில வருடம், எங்களை எல்லாம் அந்தரிக்க வைத்துப் போட்டு ரோசெத்தா பில்லியன் மைல்கள் விலகிப் போனதால் பூமியுடன் தொடர்பை இழந்து போய் இருந்தது, 

                              அதன் பாதையில் இப்படி Hibernation நடக்கும் எண்டு கணித்து இருந்தார்கள், கணித்த படியே இந்த வருட ஆரமபத்தில் ரோசெத்தா தொடர்பை ஏற்படுத்திய சில வாரங்களில் அது கண்டு பிடித்த  67p சூரியமோவ் கிரிகிச்மெங்கோ வால்வெள்ளி இன் அருகில் போய் எடுத்து அனுப்பிய தெளிவான படங்கள் இன்றைவரை மனித வரலாற்றில் முதல் முதல் ஒரு வால் வெள்ளியின்  பயோ டேட்டா எங்க சட்டைப்பையில்க்  கிடைத்து இருக்கு,

                                           பூமியில் உள்ள  தண்ணீர் முழுவதையும் கொண்டு வந்தது, முதல் முதல் உயிரை விண்வெளியில் இருந்து கொண்டு வந்தது வால் வெள்ளிகள் என்ற கொமெட் என்று பல விஞ்ஞான தியரிகள் இருக்கு,இதை உறுதி செய்யும் நிகழ்வாக, இப்ப ரோசெத்தாவிடம்  விஞ்ஞானிகள் நம்பிக்கையோடு எதிர் பார்க்கும் ஒரே  ஒரு கடைசி நிகழ்வு, அந்த நாலு கிலோ மீட்டார் நீள, ஆறு கிலோ மீட்டார் அகல மிதமான ஈர்ப்பு விசை உள்ள, கொஞ்சம் உருளைக்கிளங்கு போல இருக்கும் 

                                67p சூரியமோவ் கிரிகிச்மெங்கோ வால்வெள்ளியின் நிலப்பரப்பில் பைலே Philae (spacecraft) என்ற சிறிய சட்டலைட் பரிசோதனை ஆய்வு கூடக் கலத்தை இறக்கி,அதில தண்ணீர்,காபன்,வேற உயிர் உருவாகத் தேவையான ஆரம்பக் கட்டுமான கனிப்பொருள்கள்,அல்லது இதுவரை நாங்க பூமியில் அறியாத இரசாயனக் கலவைகளின் ஆதார கனிப்பொருள்கள் இருக்கா என்று அறியும் Docking and berthing of spacecraft நிகழ்வு நடக்கப் போகுது. ரோசெத்தா அது காவிக்கொண்டு பில்லியன் மைல்கள் அலைந்த பைலேயை இறக்கிப் போட்டு,அதில இருந்து தகவல்கள் அனுப்பியபின் மறுபடியும் அதைக் காவிக்கொண்டு வரப்போகுது,..

                                  இந்த திட்டத்தில் நோர்வேயில் இருந்து ஒஸ்லோ UiO யூனிவெர்சிட்டி இன் பிசிச்க்ஸ் டிபார்ட்மெண்டின்   எமிரேட்ஸ் பேராசிரியர்  காரே அக்ச்னஸ் Proff Dr. Kaare Aksnes  றோசெத்தாவின் பாதையை கணக்கிடுவதிலும் , எமிரேட்ஸ் பேராசிரியர் ஆர்னே பேட்டர்சன் Proff Dr.Arne Pedersen  டெக்னிகல் அட்வைஸ் கொடுப்பதிலும் , கொம்புயிடர் எஞ்சினியர் Dr.வோசயொச் மிலோச்  Wojciech Miloch  றோசெத்தாவின்  டேட்டா வை அனலைஸ் பண்ணுவதிலும் என்று இந்த    மூன்று அறிவியளாளர்கள்  European Space Agency (ESA) விஞ்ஞானிகளுடன் பங்கு பற்றி என்னைப்போன்ற மாங்கா மடையார்களும் வசிக்கும் நோர்வேயை ஒரு அறிவியல் நாடு எண்டு கவுரவ ப்படுத்தியுள்ளார்கள்....

                                      67p சூரியமோவ் கிரிகிச்மெங்கோ வால்வெள்ளி தரப்போகும் தகவல் வெளியே உள்ள பிரபஞ்சத்தை நாங்கள் உள்ளே இருந்து ஆராயக் கிடைத்த ஒரு மிகப்பெரிய சந்தர்ப்பம். யாருக்கு தெரியும் வான வெளியில் உள்ள தேவதூதர்கள் அதை எங்களுக்கு அனுப்பி இருக்கலாம். இதற்க்கு இடையில் பூமியில் உள்ள அசுரர்கள் எங்கள் சூரியக் கிரகத்தில் உயிர் வாழக் கூடிய ஒரே ஒரு கோள் ஆனா எங்கள் இந்த சின்ன பூமிக்  கிரகத்தை  ஆளை ஆள் பங்க்கு போட்டு, ISIS தீவிரவாதிகள் பல அப்பாவி சியா முஸ்லிம் மக்களைக் கொல்லலாம், நைஜீரியாவில் சிறுபான்மை  கிறிஸ்தவ மக்களை ஜிகாத்  தீவிரவாதிகள் போட்டு தள்ளலாம், உக்கிரேன் தீவிரவாதிகள் இன்னும் சில விமானத்தை சுட்டு விழுத்தலாம், இபோலா வைரஸ் மேற்கு ஆபிரிக்க நாடுகள் முழுவதும் பரவலாம், ஹமாஸ் அனுப்பும் ராக்கெட்டுக்கு இஸ்ரேல் இன்னும் இன்னும் ரொக்கெட் அனுப்பி அப்பாவி பலஸ்தீன மக்களைக் கொல்லலாம்...... 

                                 ரோசெத்தா விண்வெளியில் உயிர் இருபதுக்கான சாத்தியங்களை " வித்தாரமும் கடம்பும் வேண்டாம் மடநெஞ்சே " என்பது போலத் தேடுது . நாங்க இங்கே இருந்து அல்பிரேட் நோபெல்  தண்டவாளம் போட்டு ரெயில் ஓட வைக்க ரெயில்வே சுரங்கம் அமைக்க பாறைகளை இலகுவாகப் பிளக்கக் கண்டு பிடித்த  " டையினமைட் கன் பவுடர் " வெடி மருந்தை துப்பாக்கி ரவைகளிம் , பீரங்கியின் குண்டுகளி லும் , நீண்ட தூர ரொக்கெட்டிலும்  நிரப்பி வேண்டிய மட்டும்  உயிர்களை அழிக்கிறோம்....  

 (.இந்த படத்தின் பின்னே இருப்பது தான் அந்த வால் வெள்ளி . படத்தில் என்னுடன் நிற்பது நோர்வே அஸ்ட்ரோ பிசிக்ஸ் விஞ்ஞானி Dr, Camilla Andrsen . ரோசெத்தா பற்றிய நிகழ்வுக்கு போன போது எடுத்தேன். )
ஒஸ்லோ 26.28.14

காலம் செய்த கோலமடி......

இன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள மக்களில் யாரோ ஒருவர், எப்போதோ  ஒருதரம் தங்கள் வாழ்நாளில் சந்தித்த மிகவும் விரும்பாத விபத்துப் போன்ற சம்பவம் ஒன்று நடந்த சில செக்கன்களில் சொல்லும் வார்த்தை

                               " அட, கொஞ்சம் அசந்திட்டமே, இல்லாட்டி இதை வேற விதமா செய்து இருக்கலாம் " ,

                                         அல்லது

                          " அட இது முதலே தெரியாமல் போச்சே "

                                                         என்பது. அப்படி சொல்லத்தான் முடியும் காலத்தில் ஒரு மில்லி செக்கன் பின் நோக்கிப் போய் அதைத் தடுக்கவோ, அல்லது காலத்தில் மில்லி செக்கன் முன்னோக்கிப் போய் அந்த சம்பவம் நடக்கப் போறதை முன் கூட்டி அறியவோ  முடியாது, 

                          ஆனால் மொடேர்ன் பிசிக்ஸ் சொல்லுது இதெல்லாம் சாத்தியம் எண்டு. எப்படி என்றால், முதலில் காலம் என்ற நேரம் என்றால் சயன்ஸ்படி என்ன எண்டு விளங்கினால்த் தான் மிச்சம் விளக்கும், இதுக்கு மேலே இந்தக் கட்டுரையை வெள்ளி திசை, ஒம்பதில வியாழன்  கிரக பலன் உள்ள நல்ல காலம் நடப்பவர்கள் வாசிக்கவும்.

                                   மற்ற மங்குசனிக்  கால திசை நடக்கும் வாசகர்கள் வாசித்து இன்னும் அதிகம் துன்பம் பெறவேண்டாம். இதோட விட்டுப் போட்டு " கத்தி " படத்தில சமந்தா இடுப்பை நெளித்து உளுந்து அரைப்பது போல ஆடும்  "செல்பி புள்ள..  "  பாடலைப் போட்டு  நேரத்தை மறந்து  ரசித்துக்  கேட்டு புண்ணியம் சேருங்க. 

                                      காலத்தில பிரயாணம் செய்யலாமா எண்டு உங்க எல்லாருக்கு நிறைய குழப்பம் வருவது போல எனக்கும் என்னோட டீன் ஏஜ் வயசில் காதல் வருவதுக்கு பதிலா இந்த சந்தேகம் வந்ததுக்கு முதல் காரணம் இசாக் அசிமோவ் என்ற எழுத்தாளரின் சயன்ஸ் பிக்சன் கதைகள், அதை தொடர்ந்து வந்த ஸ்டார் வார் ,பட்டில் ஸ்டார் கலஸ்டிக்கா போன்ற கற்பனையான சயன்ஸ் படங்களைக் காதல் வரவேண்டிய இளவயதில் நம்பவே முடியாமல் திகிலாப் பார்த்தது.

                                      இன்றைக்கும் தியரி வடிவில் நிறைய சாத்தியங்கள் உள்ள அதை எப்படி நடைமுறையில் பிரக்டிகலா செய்வது எண்டு ஏறக்குறைய இந்த நுற்றாண்டு முழுவதும் மண்டயப் போட்டுக் குழப்ப வைக்கும் காலப்பயணம் என்பது ஆதாரமாக, காலம் என்பதும் இடம் என்பதும் ஒண்டுதான் எண்டு சொன்ன ஐன்ஸ்டைனின் தியரியில்த் தொடங்குது...  

                                      அடிப்படையில் ஒளியில், அதன் வேகத்தில் காலம்  தொடங்குது. அதில்தான் ஓடுது. நிலையாக நிற்கும் ஒருவருக்கும்,வேகமாக ஓடிக்கொண்டு இருக்கும் ஒருவருக்கும் இடையில் நேரம் என்பது பிரபஞ்ச அளவில் வேறுபடும், அதே நேரம் பூமியில் அருகில் நின்று பார்க்கும் எங்களுக்கு அதை உணரமுடியாது. குழப்புறேனா, சரி எளிமையாக  பாட்டி வடை சுட்ட கதை போல சொல்லுறேன் ..!

                                      அதுக்கு முதலில் பிரபஞ்சக் "காலம் அல்லது நேரம் என்றால் என்ன எண்டு தெரிய வேண்டும். நேரம் அல்லது காலம் இயற்கையின் பிரபஞ்ச ஆதார விதிப்படி , முதல் முதல் நடந்த பிரபஞ்சப் பெரு வெடிப்பு என்ற பிக் பாங் இல் இருந்து முன்னோக்கிப் பாயும் ஒளியின் வேகத்தில் தான் காலம் தோன்றியது, அதுக்கு முன்னம் காலம் இல்லை, இடமும் இல்லை,கோள்கள் ,நட்சத்திரங்கள், விண்கற்கள் , வீடு , வாசல் , கார் ஒண்டும்  இல்லை , நமிதாவின் இடுப்பும் இல்லை, உண்மையைச் சொன்னால் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. 

                                           அந்தக்  காலம்,  நேரம் என்ற இயற்பியல் வடிவில் எய்து விட்ட அம்புபோல பல ஃப்ரேம்களாக (Frames) முன்னுக்குத் தான் போகுது, இன்று வரை ஒரு நாளும் பின்னுக்கு போனதில்லை. ஆனால் எங்கள் நினைவுகள் பின்னுக்குப் போவது போல அதால் போக முடியாது.  ஆனால் மொடேர்ன் பிஸிக்ஸ் இல் காலமும், இடமும் ஒன்றாகி அதில நேரத்தை ஸ்பேஸ் டைம் என்ற நான்காவது பரிமாணமாக சொன்னார் ஆல்பர்ட் ஐன்ஸ்டின். 

                                    அதை மிகை ஒலி சூப்பர் சொனிக் விமானத்தில் பறக்கும் ஒருவரையும், அதையே நிலத்தில் நின்று பார்க்கும் ஒருவருடன் சார்பு வேகத்தில் ஒப்பீட்டு செய்து மிகை ஒலி வேகத்தில் பறப்பவரின் கால வேகம் மில்லி மில்லி செக்கன்கள் குறைவு என்பதை இலத்திரனியல் அணுக் கடிகாரத்தில் அளந்து எழுபதுக்களில் நிருபித்தார்கள். ஆனால் அந்த மில்லி செக்கன்கள் மிகச் சிறிய காலத்தில் பின்னடைவில் இருப்பதை வைத்து ஒண்டுமே பிரக்டிகலா செய்யமுடியாது.  

                                        ஸ்பேஸ் டைம் என்பதே உண்மையில் அஞ்சாவது பரிமாணம்,  முதலில் ஒரு பரிமாண, இரு பரிமாண மற்றும் முப்பரிமாணங்கள் பற்றி ஒரு சிறிய விளக்கம் சொன்னால் தான் அஞ்சாவது பரிமாணமே விளங்கும் . பரிமாணம் (Dimension) என்பது “ magnitude of something in a particular direction especially length or width or height”ஆகும்.  லூயிஸ் கரோல் எழுதிய குழந்தைகளுக்கான புத்தகம் " அலைஸ் இன் வொண்டர் லான்ட் " உண்மையில் பரிமாணங்களுக்கு இடையில் பயணம் செய்யும் புத்தகம்.

                                            தெருவில கரண்ட் வயரில் -" ஒன் லைனில் " ஒரு குருவி இருக்கு என்று வைப்போம் அந்தக் குருவி  அந்த வயரில்  எங்குள்ளது? வயரின்  ஏதாவது ஒரு மூலையின் தொங்கலில்  இருந்து இரண்டு மீட்டர்  தூரத்தில் எண்டு சொன்னால் அது  ஒரு பரிமாணம் ஆகும். இங்கு அந்தக்  கோடு ஒரு பரிமாணத்தில் இருப்பதால்  இங்கு ஒரு பரிமாணத்திலேயே அந்தக் குருவி இருக்கும் இடம் சொல்லலாம் .

                                               இளம் வயதில் காதலிகளுக்குக்  காதல்க் கடிதம் எழுதிய காகிதத்தில், அதை எழுதி முடித்து கடைசியில், அந்தப் பெண்ணின் இதயத்தைத் திருடும் நோக்கில் எப்பவும் ஒரு இதயம் படம் வரைவமெல்லா, வரைந்த அந்த இதயப்  படம் அந்த காகிதத்தில் எங்கிருக்கிறது என்றால்? முன்பு சொன்னதைப் போல ஒரு பரிமாணத்தில் சொல்ல முடியாது. காரணம், அந்த இதயம் படம் எந்த திசையில் வேண்டுமானாலும் இருக்கலாம்.

                                   ஆனால்  இப்படிச் சொல்லலாம் அந்த இதயம் அந்த காகிதத்தின் ஒரு மூலையில் இருந்து 3 cm வலமாகவும் (X-Axis), அங்கிருந்து 4 cm வடக்கு நோக்கிச் சென்றால் (Y-Axis) கிடைக்கும் இடத்தில என்று சொல்லலாம். இது விபரம் மிகச் சரியாக அந்த இதயம் இருக்கும் இடத்தைக்  கண்டுபிடிக்கும். இப்பொழுது அந்த இதயம் பேபரில்  இருப்பது இரு பரிமாணங்களில் ! 

                                      அடுத்து ஒரு அறையை எடுத்துக் கொள்ளலாம்.  அறை என்பது, நீளம், மற்றும் அகலம் ஆகிய இரு பரிமாணத்துடன் மூன்றாவதாக “உயரம் / ஆழம்” என்ற பரிமாணத்தையும் சேர்த்துக் கொள்வது. அந்த அறையில் ஓய்விலுள்ள ஒரு  குருவி சரியாக எந்த இடத்தில் இருக்கிறது ? “ஒரு மூலையில் இருந்து ஒரு மீட்டர்  வலமாகவும் (X-Axis), அங்கிருந்து ரெண்டு மீட்டர் வடக்கு நோக்கியும் (Y-Axis), அங்கிருந்து மேல் நோக்கி (Z-Axis) மூன்று மீட்டர்  சென்றால் கிடைக்கும்” எனக் கூறலாம். இங்கு இந்த மூன்று பரிமாணங்களும் இருந்தால் தான் அந்த பறவையின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியும்.

                                 இதை  perpendicular முறையில் சொல்ல வேண்டும் எண்டு சொல்லுறார்கள். perpendicular என்றாள் என்ன எண்டு சொல்லுறது எண்டால் அது கொஞ்சம் அட்வான்ஸ் பிசிக்ஸ் விளங்கினால் தான் முடியும் .அதை நான் சொல்ல முயன்றால் எனக்கே  மண்டைக்குள்  இருக்கிற கொஞ்ச சரக்கும் வெளிய போயிடும் .அதால அதை இப்போதைக்கு விடுவம். பெறகு ஒருநாள் சொல்லுறேன்.

                                           நான்காவது பரிமாணம் என்பது “நேரம்”.அதே அறையில், அந்தக் குருவி  பறந்து கொண்டே இருக்கும் பொழுது, அதன் இடம் மாறும். அந்த பறவையின் சரியான / நிலையான இருப்பிடத்தை காண நமக்கு நான்காவதாக ஒரு பரிமாணம் தேவைப்படுகின்றது. இப்பொழுது அந்த பறவை, அந்த அறையில், ஒரு மூலையில் இருந்து ஒரு மீட்டர்  வலமாகவும் (X-Axis), அங்கிருந்து ரெண்டு  வடக்கு நோக்கியும் (Y-Axis), அங்கிருந்து மேல் நோக்கி (Z-Axis) மூன்று மீட்டர் சென்றால், அந்த பறவை ஒரு குறிப்பிட்ட ‘நேரத்தில்’ இருந்த இடம் கிடைக்கும். இங்கு இந்த நான்கு பரிமாணங்களும் இருந்தால் தான்  இயங்க்கிக் கொண்டு இருக்கும் அந்தக் குருவியின்  இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியும்...

                               இந்தப் பிரபஞ்சம் என்ற யுனிவேர்ஸ் உண்மையில் நாங்கள் கற்பனை பண்ணிப் பார்க்கவே முடியாத பதினொரு பரிமாணத்தில் இருக்கு என்கிறார்கள். வெறும் நீளம், அகலம், உயரம் என்பனவே நமது அறிவின் வீச்சில் உணரக்கூடியவை ,அப்புறம் நேரத்தை மணிக் கூட்டில பார்த்தாப் போச்சே எண்டு கேட்பிங்க, ஆனால் நாங்க பார்க்கும் நேரம் வேற பிரபஞ்ச நேரம் வேற. நேரமே பிரபஞ்சத்தில் ஒவ்வொரு இடத்தில ஒவ்வொரு மாதிரி ஓடுது, ஏன் விண் வெளியில் மிதக்கும் ISS விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் இருக்கும் விஞ்ஞானிகளின் கைக்கடிகாரம் எங்கள் நேரத்தை விட சில மில்லி செக்கன்கள் வித்தியாசம், ஏன் அப்படி என்றா அதுக்கு நேரத்தை ஈர்ப்பு விசையும் பாதிக்கும் என்கிறார்கள்.  

                                                 நாங்கள் நம்பும் நேரம் உண்மையில் ஒரு மாயை. 6 அறிவு படைத்த மனிதனால் உணரத்தக்க பரிமாணங்களை நேரம் கட்டிப் போட்டு வைச்சுள்ளது. அந்தப் புதிரை விடுவித்தால் நிறைய விசியம் செய்யலாம். காலம் என்பது  நான்காவது பரிமாணம் என்று  Theory ரீதியில் ஏற்கப்பட்டுள்ளது. எப்படி ஒரு மனிதனால் ஒரு பரிமாணம், இரு பரிமாணம், மூன்று பரிமாணம் உள்ள பொருட்களை மட்டுமே உணரமுடிகிறது.? ஏன் எனில் நாங்கள் நான்கு பரிமாண ஆட்கள். எங்கள் எல்லா முயற்சியும் அதுக்குள்ளே தான் கிடந்தது சுழரும்,அதை மீறினால் நிலைமை வில்லங்கம் ஆகும் 

                                         நம்பிக்கையில் எப்பவுமே கை வைத்து, நம்பிக்கையோடு சாத்திரம் சொல்பவர்கள் ,குறி சொல்பவர்களை, கைரேகை பார்பவர்களை ,காண்டம் வாசிபவர்களையும், அதை நம்பிக்கையோடு நம்புபவர்களை தவிர, ஏன்  வேற  ஒருவரால் இன்னொருவரின் எதிர்காலத்தை இறந்த காலத்தை கூறமுடியாமல் இருக்கிறது ?, ஏன்  ஒரு நான்கு பரிமாண ஆளால் நான்கு பரிமாணத்தில் முன்னும் பின்னும் பார்க்க முடியாமல் இருக்கிறது ? போன்ற ஆதாரமான சயன்ஸ் கேள்விக்கு விடை இன்னும் பிரக்டிகலா இல்லை. 

                                         ஆனால் ஒரு சதுரப் பெட்டியை தலை கீழாகப் புரட்டி கையை உள்ளுக்க விட்டும் துலாவிப் பார்க்கலாம், ஹமாஸ் விடும் ஏவுகணையை இஸ்ரேல் இடையில்  பறக்கும் ஏவுகணை விட்டு அடிக்கலாம் ,ஆனால் நேரத்தில் கையே வைக்க முடியாது. அதை விளங்கிக்  கொள்வதே கடினம்தான் . நிறைய முன்னுக்குப்பின் முரணான விசியங்கள் அதில இருக்கும்..

                                           தியறிப்படி உள்ள ஸ்பேஸ் டைம் என்பது பல ஃப்ரேம்களாக (Frames) நடந்து கொண்டிருக்கிறது ,அதை உணர முடிந்தால்,அதுவும் ஓர் ஐந்து பரிமாண ஆளால் ஸ்பேஸ் டைமை உணரமுடியும் என்றால். அவர்களால் எமது இறந்த, எதிர் காலத்தை துல்லியமாக கூற முடியும். என்பது தியரி படி இருக்கு . அப்புறம் நாங்களே பெட்டி படுக்கையைக் காவிக்கொண்டு நாமே ஐந்தாவது பரிமாணத்தில் நுழைந்து விட்டோமானால் காலத்தில் பிரயாணம் செய்யலாம்! இதை தான் "Time Travelling" என்கிறார்கள் . ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது இன்னும் பரிசோதித்துப் பார்க்கப்படவில்லை. அதில ஏகப்பட்ட குழப்பம் இருக்கு. கொஞ்சக் குழப்பத்தை  சொல்லுறேன். 

                                       உண்மையா ஜோசித்துப் பார்த்தால்  காலத்தை நாங்க முன்னும் பின்னும் அறிஞ்சா அதன் பின் சுவாரசியமான வாழ்கை போயிடும்,  ஆனாலும் டைம் ட்ராவல் சம்பந்தமாக, இவ்வளவு நாட்களும் விஞ்ஞானிகளுக்கு தண்ணி காட்டி கொண்டிருக்கிற முக்கியமாக இரண்டு விஷயங்களில் முக்கியமானது  கால வெளியில் பிராயணம் செய்ய வேண்டுமென்றால் ஒளியின்  வேகத்துக்கு இணையான வேகத்தில் பிராயணிக்க வேண்டும்.  ஒளியின் வேகத்துக்கு கிட்ட நெருங்க நாம் பிரயாணம் செய்யும் வாகனத்தின் திணிவு நினைக்கமுடியாத அளவு அதிகரிக்கும் , அதை இயக்க ஒரு நட்சத்திரம் எரியும் அளவு பில்லியன் அளவு சக்கி வேணும்...இப்போதைக்கு அதைக்  கனவுதான் காண முடியும் நம்மளால் . 

                                          அப்படி பிராயணம் செய்ய கூடிய எந்தவித வாகனமும் இப்ப இல்லை. ஒளியின் வேகத்தில் பிரயாணம் செய்ய செய்ய காலத்தில் பின்னோக்கி செல்லலாம், அல்லது இன்னுமொரு இலகுவான ஆனால் தியறிப்படி உள்ள ஒரு விளக்கம்  நாலாவது பரிமாணத்தில் இருந்து அஞ்சாவது பரிமாணத்துக்கு உள்ள போக ஒரு பாதை வேண்டுமே  அந்த பாதைகளை  புழுத்துளைகள் (Worm Holes) என அழைக்கும்  மிக மிக நுண்ணிய குழாய் பாதைகள் இருக்கு எண்டு சொல்லுறார்கள். ஆனால் அதைக் கண்டு பிடிக்கும் அளவுக்கு இன்னும் விஞ்ஞானம்  எங்களிடம் இல்லை

                       ஒரு உதாரணத்துக்கு,

                                    மொடேர்ன் பிசிக்ஸ் நம்பும் பக்தர்களின் கடவுளான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சொன்ன ஒளியின் வேகத்தில்  என்னால்  பயணிக்க முடிந்தால் எனக்கு  வயது கூடாது, குறையாது  நிலையாக நிக்கும் எண்டு சயன்ஸ்படி சொல்வதில்லை ஆனால் நானே  வேற ஒரு பரிமாணம் ஆகிவிடுவேன்  என்கிறார்கள். ஆனால் என்னைச்  சுற்றி இருக்கும் உங்களுக்கும் இந்த உலகத்துக்கும் வயது கூடிக்கொண்டே இருக்கும்! நீங்க எல்லாம் கிழடுதட்டி ,அறளை பெயர்ந்து பிசத்தும் நேரம் நான் நல்ல தெளிவா அப்பவும் இருப்பேன், வயது போகாது  நான் ஏறக்குறைய  இப்ப இருப்பது போலவே இருப்பேன் மாறவேமாட்டேன். நினைக்வே எவளவு சந்தோசமா இருக்கே.

                                     உங்களுக்கு அப்பவும் காலம் ஓடிக்கொண்டு இருக்கும். ஆனால் ஒளியின் வேகத்தில் செல்பவருக்கு காலம் ஓடாது. 2014 இல் நான் ஒளியின் வேகத்தில் புறப்பட்டேன் என்றால், 30 வருடத்தின் பின்னரும் நான் அதே 2014 இல் தான் இருப்பேன் . ஆனால் நீங்க  2034 இக்கு போயிருப்பீர்கள் , நான் மறுபடி நோர்மல் வேகத்துக்கு வந்து பார்க்க , உங்களில் சிலருக்கு ஆண்டு திவசமும்,சிலருக்கு பல வருட நினைவாஞ்சலியும் முடிந்து இருக்கும்.

                                                   இப்படி உங்களை வெறுப்பு ஏற்றினாலும், இப்படி ஒளியின் வேகத்தில் செல்லும் ஒருவரை நீங்கள் யாருமே பார்க்க முடியாது! நாங்க ஒவ்வொரு நாளும் பார்க்கும் சூரிய ஒளி Photons என்ற அணு, அது ஒளியின் வேகத்தில் சூரியனில் இருந்து எங்கள் பூமிக்கு வர எட்டு நிமிடம் எடுத்து வருகுது, இது நிகழ்காலத்தில் எங்களுக்கு  நிகழுது. இதே பூமி  இன்னும் தூரத்தில் இருந்தால் இன்னும் தாமதமாகும். எங்களுக்கு வந்த ஒளி சூரியக்குடும்பதில் தொங்கலில் உள்ள புலூட்டோ கிரகத்தை பொறுத்தவரை அந்த செயல் நடைபெறவில்லை. ஏனென்றால் ஒளி இன்னும் சென்றடையவில்லை.

                                              அந்த வேகத்தை நம்மால் பார்க்க முடியாது. கடவுள். தேவர்கள், ஆவிகள் இவைகள் இப்படி இயங்குபவை எண்டு திருமந்திரம், சிவஞானபோதம், போன்றவற்றில் சொல்லி இருக்கு எண்டு எழுதியுள்ளார்கள்.தவம் செய்யும் முனிவர்கள் அவர்களின் ஜோகநிலையில் எழும்பும்  ஏழாவது அறிவில்  இந்த காலப் பரிமாணங்களை முன்னுக்கும் பின்னுக்கும் முக்காலமும் அறியும் ஒரு கலையில் தேர்ச்சி பெற்று இருந்தார்கள் என்று இந்து சமயத்தில் சொல்லுறார்கள். அப்புறம் சயன்ஸ் பிக்சன் எழுத்தாளர் வேற்றுக் கிரக மனிதர்கள் இப்படிப் பிரயாணம் செய்பவர்கள் எண்டு சொல்லி எழுதி,அந்தப் புத்தகங்கள் நல்லா விற்று அதை எழுதியவர்கள் வேற்றுக்கிரக மனிதர்கள் புண்ணியத்தில் கோடீஸ்வரர் ஆகி இருக்குறார்கள். 

                                   இப்ப முக்கியமான ஒரு காலத்தில் பிரயாணம் செய்யும் வசதியான Worm Holes என்பது என்ன எண்டு சொல்லுறேன் , எளிமையான  உதாரணமாக , பண்ணைக்காரன் பெண்டில் பனங்காய் உருடின மாதிரி ,ஒரு பனங்காயை எடுப்பம், பனங்காய் மிகவும் வழுக்கும் தன்மை உடையது. அதை உருட்டும் பனை ஓலைப் பாயும்  மிக மிக தட்டை. இவை இரண்டுமே முப்பரிமாண பொருட்கள், ஆனால் அதை மிக மிக தொழில்நுட்பம் பாவித்தால் அங்கு நிறைய துளைகள் காணப்படும். பனங்காயில்  நிறைய துளைகள் காணப்படும். இவ்வாறன துளைகள் மூன்று பரிணாமங்களிலும் காணப்படுகிறது.  

                                         இது நான்காவது பரிணாமமான ஸ்பேஸ் டைம் என்ற நேரத்திலும்  காணப்படுகிறது . இவை அளவிடமுடியாத அணுவைவிட  மிக மிக சிறிய இடைவெளிகள், ஆனால் ஸ்பேஸ் டைமில் விரைவான குறுக்கு பாதை அவைகள். பல மில்லியன் வருடங்கள் முன்னுக்கும்,பின்னுக்கும் உள்ள  நேரத்தையும், வேறு பிரபஞ்சங்கள் உள்ள  இடத்தையும் அந்த இடைவெளிகள் இணைக்கின்றன ,இந்த மிகச் சிறிய துளைகளுக்கு ஊடாக  எங்களால் பொஞ்சாதி, சின்ன வீடு , பிள்ளை குட்டிகளை இழுத்துக் கொண்டு பெட்டி படுக்கையை தூக்கிக்கொண்டு  போக முடியாதா அளவில் காணப்படுகிறது.

                          அப்படிப்பட்ட மிக நுண்ணிய வார்ம் ஹோல்ஸ்  இந்த பிரபஞ்சம் முழுவதும் இருக்கு. ஏன் நீங்க அதை வாசித்துக்கொண்டு இருக்கும் கொம்புடர் உள்ள அறையிலேயே இருக்கு, இந்த துளைகளில் விஞ்ஞானிகள் செய்ய நினைப்பது இந்த துளைகளில் ஒன்றை பெரிதாக்கி அதற்குள் ஒரு உயிரையும், அந்த உயிரைக் கடத்தும் ஒரு வண்டியையும் நுழைத்து, ஒளி வேகத்துக்கு இணையான வேகத்தில் அனுப்ப வேண்டும். ஏறக்குறையா ஒரு வெண்வெளி வீரனை அனுப்புவது ,அதுதான் தியரி, நடக்குமா , அதுதான் தெரியலை !

                            காலத்தில் பிரயாணம் செய்யும் போது முன்னோக்கி போகலாம்,பின்னோக்கி போக முடியாது, போனாலும் அவர்கள் காட்சிகளைதான் பார்க்க முடியும். செயல் முடிந்து விட்டதால் அதில் பாதிப்பை ஏற்படுத்த முடியாது எண்டும்,அப்படி இல்லை அதுக்கு பரலல் யுனிவெர்ஸ் என்று ஒண்டு இருக்கு எண்டு சொன்னாலும் அதில உள்ள " கிராண்ட் பாதர் பரடொக்ஸ் " என்பது ஒரு பெரிய குழப்பம்,உதரணமா நான் காலத்தில் பின்னோக்கிப் போய் என்னோட அம்மா வேம்படியில் படிக்கிற நேரம் சந்தித்து

                    " நான் தான் அம்மா உங்க எதிர்காலத்தில் உங்க நின்மதியைக் கெடுக்கும்  மகன் "

                                                     எண்டு சொன்னால், ஒரு வேளை அம்மா கலியாணமே கட்டாமலே இருந்து இருகலாம் , அதைவிடக் குழப்பம் நான் என் அம்மாவையும்  அப்பாவையும் கலியாணமே கட்ட விடாமல்க் குழப்பினால், அப்புறம் நான் எப்படி எதிர்காலத்தில் பிறந்திருப்பேன் ,சொல்லுங்க பார்ப்பம் , இந்தக் குழப்பம்தான் " கிராண்ட்பாதர் பரடொக்ஸ் " என்பது. ஆனால் காலத்தில்  பின்னோக்கி செல்லுதல் சாத்தியம் எண்டும் ஒரு படம் போல பார்க்கலாம், செயல் முடிந்து விட்டதால் அதில் பாதிப்பை ஏற்படுத்த முடியாது. அதில எந்த மாற்றமும் செய்ய முடியாது எண்டு சொல்லுறார்கள்.

                                       parallel universe எனும் கோட்பாட்டின் படி இறந்த காலத்துக்கு செல்ல முடியும் சாத்தியம் என்கிறார்கள். negative velocity இல்  எதிர் காலத்திற்கு செல்லுதல் சாத்தியமாகலாம் என்று உத்தரவாதம் தரும் இந்த time travellingபல ஃப்ரேம்களாக (Frames) நடந்து கொண்டிருக்கிறது மில்லியன் வருடங்கள் முன்னால் ,காலத்தில் எங்களுக்கு முன்னால் விஞ்ஞான வளர்சியில்இருக்கும் மனித இனம் , வார்ம் ஹோல் என்ற விஞ்ஞான விந்தையை கையாண்டு , அங்கிருந்து ஏன் பின்னோக்கி எங்களைச் சந்திக்க அட்லீஸ்ட் விஜய்யோட  " கத்தி " படத்தை ஒரு டுரிஸ்ட் போல ஆவது பார்க்க யாருமே வரவில்லையே?   அப்படி விஞ்ஞானம் முன்னேறிய  எதிர்காலத்திலிருந்து நம் காலத்திற்கு யாராவது வந்திருப்பார்களே ? என்று நீங்கள் கேக்கலாம். 

                                           சொன்னா நம்ப மாட்டிங்க, நான் அப்படி எதிர்காலத்தில் இருந்து " வார்ம் ஹோல் " என்ற வழியால வந்த ஆள்தான். வந்த இடத்தில நான்  வந்த " டைம் டவர்லிங் " வாகனத்துக்கு ஒழுங்கா இன்சூரன்ஸ் கட்டவில்லை எண்டு என்னை இங்கே விட்டுப் போட்டு போயிட்டாங்கள், அப்படி தெரியாமல் இங்கே மாட்டிய ஆள்தான், அதால " காலம் செய்த கோலமடி... " எண்டு இப்ப இந்தக் கட்டுரையை  உங்களுக்கு எழுதிக்கொண்டு இருக்கிறேன்...

ஒஸ்லோ 09.11,14

Thursday, 21 May 2015

பொஞ்சாதி குரங்கு வளர்தாளம்...

குடியில் பிறந்த பெண் வயிற்றெரிந்தால் கொடியில் உள்ள துணி எரியும் போல பல குழப்பங்களுக்கு மத்தியில் இருக்கும் சின்னப் பாதைகளில் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் அன்றாடம் இயங்க முடிந்தாலும் நான் வசிக்கும் நோர்வேயில் என்னதான் நடக்குது என்று டெலிவிசனில் செய்திகளில் பார்க்கும் சந்தர்ப்பங்கள்,நாளாந்த தினசரிகளில் வாசித்து அறியும் நிகழ்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டே போகுது.
                                     ஒரு மாதம் பரீட்ச்சாதமாக எங்களின் விண்ணாணத்தை கொஞ்சம் வாசித்துப் பாரேன் என்று சில பத்திரிகைகள் வீட்டு வாசலில் ஓசியில் நியூஸ்பேப்பர் போடுறார்கள், அதன் தலையங்கத்தை தன்னும் வாசிக்க விருப்பமும் நேரமும் இல்லை ,அதைக் காலால தள்ளி உதைஞ்சு போறேதே எல்லாரும் ஏறின குதிரையில் சக்கடத்தாரும் ஏறின மாதிரி பெரிய தலை இடியாக இருக்கு. வயதானவர்கள் தான் இப்பவும் வரிக்கு வரி ஒன்றும் விடாமல் பத்திரிகை எடுத்து விரித்து வைத்து வாசிக்கிறார்கள்.
                                             காலையில் பேப்பர் வாசிப்பது முன்னம் எல்லாம் சுவாரசியம்,இப்ப காலையில் போஸ்டிங் வாசிக்க வேண்டி இருக்கு. பல சமயம் சுப்பர் மார்க்கெட்டில் காசு கொடுக்கும் கசியர் மேசைக்கு முன்னால் பத்திரிகை வைச்சு இருப்பார்கள்,வரிசையில் நேரம் மினக்கெடும் நேரம் அதன் தலையங்கத்தை வாசிப்பது. அதில்தான் கொஞ்சம் தெரியும் போனாப் போகுது என்று உலகம் வியக்கும் பணக்கார நாடான நோர்வேயில் பொஞ்சாதி குரங்கு வளர்தாளம் ஆத்துக்காரன் குழல் ஊதி குடுமி சிரஞ்சானம் போல என்ன நடக்குது என்று,
                               முக்கியமான நோர்வே பரபரப்பு பத்திரிகைகளில் ஐம்பது வருடங்களின் முன் நாசி ஜெர்மனி எப்படி நோர்வேயை சுற்றி வளைத்தார்கள்,எப்படி நோர்வேயை ஆக்கிரமித்து அடிபணிய வைத்தார்கள், நோர்வே ராணுவ உளவாளிகள் எப்படி யுத்தத்தை தந்திரமாக எதிர்கொண்டார்கள், எப்படி நோர்வே பெண்கள் ஜெர்மன் ஆர்மி ஆண்களைக் காதலில் விழுத்தி அந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கட்டிலில் வைச்சு அந்தப் பெண்கள் எப்படி ஜெர்மன் நாஸி இராணுவ ரகசியங்களைக் கறந்தார்கள் என்று கடந்த காலத்தில் பின்னோக்கிப் போகும் மனஅழுத்த சம்பவங்களை முன் பக்கத்தில் எழுதுறார்கள்.
                                           மருமகளுக்கு தீவளிக்கு தீவளி எண்ணை தேய்ப்பேன், மகளுக்கு வெள்ளியோடு வெள்ளிதான் தேய்ப்பேன் என்றாளாம் கதை போல நிகழ்காலத்தில் என்னோட நோர்வேயிய நண்பர்களிடம் இதெல்லாம் எப்படி நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள் என்று கேட்டு இருக்கிறேன். நீங்களும் என்னைப்போல சுப்பர் மார்கெட் இல் பேப்பர் தலையங்கம் படிப்பீர்களா என்று கேட்டால் ,அவங்கள் சொன்னது #########
                                    அவங்கள் சொன்னதை இங்கே பச்சைப் படியே எழுத முடியாது உங்களுக்கு கொஞ்சம் மரியாதையாய் சொன்னால் என்ன அதைப் படிக்க விருப்பம் இல்லையாம்..... மழை வருவதும், பிள்ளை பெறுவதும் மகாதேவனுக்கே தெரியாது போல சுற்றிவர கலகலப்பான வாழ்க்கை வளைத்து இருந்த நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து ஸ்கண்டிநேவியாவில் பல வருடம் வாழ்வதால் என் மண்டை இன்னும் மெண்டல் கேஸ் போல பிசாகாமல் இருப்பதே பெரிய விசியம் போல இருக்கு.
.
............................என்ன சீவியமடா இது...........................


.09.04.15

பத்தாம் வகுப்பு மாணவன் 26 வயது ஆசிரியையுடன் ஓட்டம்...

ஒரு ஆண் பிள்ளைகள் படிக்கும் பாடசாலையில் ஸ்போர்ட் ஸ்டீச்சர் அந்த பாடசாலையில் நல்லா ஸ்போர்ட்ஸ் செய்து ஓடக்கூடிய பையனுக்கு அந்தப் பையனோடு சேர்ந்து கிரவுண்டில ஓடி ஓடுறது எப்படி என்று சொல்லிக்கொடுத்தாங்க...அதைப் பார்த்துப்போட்டு பிரபலமான பேஸ் புக் பதிவாளர் கொழுவி குமாரு போட்ட ஸ்டேட்ஸ்
.
" பத்தாம் வகுப்பு மாணவன் 26 வயது ஆசிரியையுடன் ஓட்டம்...."
.
.........அய்யோ குமாரு , இந்த விளையாட்டுக்கு நான் வரலைப்பா..