Friday, 20 March 2015

நடிகனானேன் ....

வாழ்கையே ஒரு மேடைநாடகம் என்று நிஜமான உலகத்தில் அப்பப்ப வாழ்க்கை வெறுக்கும் போது இப்பவும் சொல்லிக்கொண்டு இருந்தாலும், என்னோட இளந்தாரி வயதில் , முன் அனுபவம் எதுவுமில்லாமல் இரண்டு நாடகத்தில் மேடையில் மேக் அப் போட்டு நாடக இயக்குனரிடம் திட்டு வேண்டிக் கொண்டு அடிவேன்டாத குறையாக நடிக்கும் வாய்ப்பு, அதுவும் அந்த இரண்டும் தற்செயலாகக் கிடைத்த சம்பவம் போன்ற ஒரு ரியல் அனுபவ சம்பவம் இன்று வரை வேறே எங்கேயும் கிடைக்கவில்லை.

                                அந்த இரண்டு நாடகத்தில், அந்த நாட்களில் கட்டுமஸ்தான தேகக் கட்டில் இருந்ததால் ,சீதாலட்சுமி சுயம்வரம் என்றதில் ஜெனகனின் வில்லை முறிக்க முயல வரும் பன்னிரண்டு தேசத்து ராசாக்களில் ஒரு ராசாவாக வரும் வேடத்தில் கொஞ்ச நேரமே வரும் அந்த ராஜா வேஷம் போட்டேன்.

                                      ரெண்டாவது நாடகத்தில், அதில பொம்புளையாக நடிக்க வேண்டிய நடிகர் சின்னமுத்து வருத்தம் வந்ததால் நடிக்கமுடியாமல் போக எந்த வித முன்னறிவுப்பு ஒத்திகை எதுவுமேயில்லாமல், இன்னொருவரின் மனைவியான கிளியோபட்ராவை ஜுலிய சீசர் கடத்திக்கொண்டு வந்து காதலியாக்கிய சம்பவங்கள் வரும் சேக்ஸ்பியரின் ஜுலிய சீசர் நாடகத்தில் நடித்தேன் 


                                    தமிழில் மொழிபெயர்த்துப் போட்ட நாடகத்தில், பிறசியருக்குள்ள தேங்காய் சிரட்டையை வைச்சு நெஞ்சை எடுப்பாக்கி, உயர்த்திக் கட்டிய கொண்டை போட்டு , நீண்ட மினுங்கல் ஒட்டிய கவுன் ஒன்றைக் கொழுவிக்கொண்டு அழகிய எகிப்து நாட்டு இளம் பெண்ணாகிப் பொம்பிளை வேஷம் போட்டு நடித்தேன். அதுதான்  உண்மைக்கு மேலே  உண்மை

                                       யாழ்பாணத்தில் எங்களின் அயலில் இருந்த வாசிக்கசாலையில் எங்களின் மதிப்புக்குரிய உள்ளுர்க் கவிஞ்சர் கந்தப்பு நாடகங்கள் போடுவார், அதிகம் தமிழ் புராண, சமுதாய , புரட்சி நாடகங்கள் போட்டாலும் சில நேரம் ஆங்கிலதில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நாடகங்களும் போடுவார். 


                              முக்கிய எவசில்வர் போன்ற பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் எல்லாம் வேறு இடங்களில் மேடைகளில் நடிக்கும் நடிப்பு நல்லா தெரிந்தவர்கள், அலுமினியம் போன்ற சில்லறைப் பாத்திரங்களில் என்னைப்போல முன்னப்பின்ன அனுபவம் இல்லாத சின்னப் பொடியன்களை பின்னேரங்களில் ,வாசிகசாலை லைபிறேரியில் வைச்சுப் பழக்கிதான் கவிஞ்சர் கந்தப்பு

                                  " பல மேடைகளில் பிரகாசித்த, பிரமாண்டமான நடிகர்கள் நடிக்கும், இதுவரை யாருமே தொடாத எல்லைகளைத் தொடும் பிரமாண்டமான தயாரிப்பு "

                                         என்று விளம்பரம் போட்டுத்தான் நாடகம் மேடை ஏற்றுவார்.

                                   ஆனாலும் கவிஞ்சர் கந்தப்பு செய்த இதையும் சொல்லத்தான் வேண்டும் , கொஞ்சம் விளங்கிக் கொள்ள கஷ்டமான நவீன அங்கத ஸ்டைலில் பாதல் சர்க்காரால் வங்காள மொழியில் எழுதப்பட்ட ஏபங் இந்திரஜித் என்ற ஓரங்க நாடகத்தை பிறகொரு இந்திரஜித் என்ற மொழிபெயர்ப்பை தழுவி மேடை எல்லாம் இல்லாமல் வாசிக்கசாலை விளையாட்டு மைதானத்தில், அம்மசியா குளக்கட்டுடன் ஓரமாக நின்ற இலுப்பை மரத்துக்குக் கீழேயும், யதார்த்தமாக உங்களில் நாங்களும் ஒருவர் என்ற கொன்செப்டில் மேக் அப் போடாத நடிக்கர்கள் பார்வையாருக்கு இடையில் இருந்து எழுந்து வந்து நடித்து,மறுபடியும் பார்வையாளருக்குள் போய் இருக்கும் மொடேர்ன் அப்சற்ற்க் ஸ்டைலில் நாடகம் போட்டும் இருக்கிறார்.

                                               சீதாலட்சுமி சுயம்வரம் நாடகத்தில் ஸ்ரீராமனுக்கு நடித்தது எங்களின் ஊர்ப் பள்ளிக்கூடத்தில் ஸ்போர்ட்ஸ் மாஸ்டரா இருந்தவர். அவர் நல்ல உயரம், அவரோட இளவயதில் உயரம் பாய்தலில் வடமாகாண சம்பியன் . அவர் பாஞ்ச உயரத்தை பல வருடமா வேற யாருமே பாயவில்லை என்று சொல்லுவார்கள், அவர் குரல் அண்டங்காகம்  அடங்காமல்  சனிக்கிழமை கத்துவது போல இருக்கும், 


                                         ஆனாலும் அந்த நாடகத்தில் ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்  என்றால்   போலவே  ஸ்ரீராமச்சந்திரமூர்திக்கு பேச வசனம் இல்லை,அவரின் தம்பி லட்சுமணன் டப்பின் ஆர்டிஸ்ட் போல ஸ்ரீராமனுக்கு பக்கத்தில் நின்று சவுண்ட் கொடுப்பதால் நாடகம் முழுவதும் பிரச்சினை இருக்கவில்லை. ஆனால் அந்த ஸ்போர்ட்ஸ் மாஸ்டர் அம்மாவாசை இரவு போல நல்ல கறுப்பு, அவருக்கு நிறையப் பவுடர் அடிச்சுதான் அயோத்திக்கே கொண்டுபோய் கவிஞ்சர் கந்தப்பு அந்தாளை ஸ்ரீராமன் ஆக்கின மாதிரி இருந்தது.

                                      ஆனால் சீதைக்கு நடித்த அழகான இளம் பெண் மதியாபரணம் டீச்சரின் மகள் பவானி. அவள் மேக் அப் எந்த சோடனைகளும் இல்லாமலேயே கம்பன் வர்ணிச்ச " தே மலர் நிறைந்த கூந்தல்; தேவர்க்கும் அணங்கு ஆம் என்னத் தாமரை இருந்த தையல், சேடி ஆம் தரமும் அல்லள்; " மாதிரி இருந்தாள்.

                                        டவுன் இங்கிலிஸ் பள்ளிக்கூடத்தில கெமிஸ்ட்ரி படிப்பித்துக்கொண்டு இருந்த சயன்ஸ் பட்டதாரியான மதியாபரணம் டீச்சர் எப்பவுமே தமிழ்,சைவ சமயம்,இலக்கியம் இதுகளில் நிறைய ஆர்வம் உள்ளதாலும், கவிஞ்சர் கந்தப்பு மேலே மதிப்பு இருந்ததாலும் , தன்னோட ஒரே மகள் பவானியை சீதாலட்சுமி சுயம்வரம் நாடகத்தில் ஜெனகனின் மகளாக நடிக்க விட்டா.

                                   பவானி நடிப்பது கேள்விப்பட்ட , அவளுக்கு அந்த நேரம் நூல் விட்டுக்கொண்டு இருந்த எங்கள் குளத்தடி குழப்படிக் குருப்பில் இருந்த வாக்குக் கண்ணால பார்க்கும் சின்னக் கண்ணன் வந்து தானும் அந்த நாடகத்தில் நடிச்சே ஆகவேண்டும் என்று அடம்பிடிக்க கவிஞ்சர் கந்தப்பு

                                     " டேய் நீ நாடகம் பார்க்கிற சனம்களைப் நேராப் பார்த்தா, உண்ட மண்டை கோணாலா போகுமே, காண மயில் ஆட கண்டிருந்த வான்கோழி ,,,, "

                                          என்று என்னமோ சொல்லி அவனை அடிசுக் கலைச்சு நடிக்க விடவில்லை. ஆனால் பவானி ,சின்னக்கண்ணனை மட்டுமில்லை ,எங்கள் ஊருக்குள்ள எல்லா இளையவர்களின், கனவிலையும் கலர் கலரா வந்து நித்திரையைக் குழப்பிக்கொண்டு மிகப் பிரபலமான அழகில் எல்லாருமே கட்டினால் அவளைக் கட்ட வேண்டும் இல்லாட்டி மொட்டையைப் போட்டுக்கொண்டு சாமியாரப் போக வேண்டும் என்ற மாதிரி ஒரு அலை அந்த நேரம் அடிச்சுக்கொண்டு இருந்தது உண்மை.

                                           ராமாயணத்தில் உள்ள எல்லாருக்கும் தெரிந்த கதையான சீதாலட்சுமி சுயம்வரம் நாடகம் கோசலையின் மைந்தன் தசரதனின் தனயன் ஸ்ரீராமன் , மிதிலை மன்னன் ஜெனகமகாராஜாவின் வில்லை வளைத்துக் காட்ட,ஆயிரம் வருசமா அதே ராமன்,அதே சீதைக்கு மாலை போடும் அரைச்ச தோசை மாவை ஆடுக்கல்லுக்கு குஞ்சரம் கட்டி சோடனை போட்டு அரைக்கும் நிகழ்வு. 


                                              அது பார்க்க கலியான வீட்டில் மணவறையின் முன் நடக்கும் அமளி துமளி போலவே பிண்ணனி திரைச்சீலையில் அரண்மனை அலங்கார மண்டபங்களின் நடுவில் நடப்பது போன்ற நாடகம், அந்த வில்லை முறிக்கும் காட்சியில் ஒரு பெரிய மரத்தால செய்த வில் வைச்சு இருந்தார்கள்,அந்த மரவில்லை ஸ்ரீராமன் இல்லை யாருமே முறிக்க முடியாது அவளவு பாரமான வில்லு,

                                         பிறகு எப்படி நாடகத்தில் ராமன் சிவதனுசு வில்லை முருங்கைக்காயை முறிக்கிற மாதிரி முறிக்க முடியும் என்று சந்தேகம் உங்களைப்போலவே எனக்கும் பன்னிரண்டு தேசத்து ராசாக்களில் கலிங்கத்து ராஜா வேஷம் போடும் போது இருந்தது,


                                                       அந்த வில்லில் ஒரு கொழுக்கி நடுவில் இருக்கு ,அதை கை விரலால் சுண்ட வில்லு ரெண்டா உடையும், ஸ்ரீராமன் மட்டும் தான் அந்தக் கொழுக்கியை விரலால் சுண்டிவிட வில்லு உடைய சீதாப்பிராட்டி விரலால் கொழுக்கியைச் சுண்டிய ஸ்ரீராமனின் ஆண்மையில் சரணடைந்து மாலையை சுயம்வரமாக கழுத்தில் போடுவா,இதுதான் கவிஞ்சர் கந்தப்பு கம்ப இராமயணத்தில இல்லை வால்மீகி ராமாயனதிலையும் இல்லாத அந்த வில்லை உடைக்கிற ஸீனில செய்து வைத்திருந்த உத்தி.

                                   அந்த நாடகத்தில் பன்னிரண்டாவதா வரும் ஸ்ரீராமன் தான் ஜெனகனின் வில்லை உடைக்கவேண்டும். ஆனால் நாடகம் தொடங்க முதலே எனக்கு அந்த வில்லில இருக்கிற கொழுக்கியை நினைக்கவே கை குறு குறுக்கத் தொடங்கி விட்டது,அதைவிட அழகாக சோடிச்சு மேடையில் மாலையுடன் நிக்கும்  பாவானியைப்  பார்க்க,,அடச்  சீ .. சீதையைப் பார்க்க உடம்பெல்லாம் இன்னும் ஜெனரேற்றர் வைச்சு இழுத்த மாதிரி கரண்ட் பாயத் தொடங்க,எனக்கு முன்னால் நாலு ராஜாக்கள் போய் அந்த வில்லை தூக்கி வளைப்பது போல நடிச்சு, அது முறிக்க முடியாத மாதிரி கீழே போட்டு நடிச்சு கவலையுடன் சீதையை பார்த்துபோட்டு வர ,

                                        " வில் கை வீரன் ராமன் நாம் எல்லாம் வெறும் கை வீரர், இதோ இப்போது கலிங்கத்து மன்னன் தன்னுடைய ஆண்மையைக் காட்ட வருகிறார்,வாருங்கள் கலிங்கத்து மகாராஜா "

                                         என்று சொல்ல நான் அஞ்சாவதாக குத்துச் சண்டை வீரன் முகம்மது அலி மேடையில் பாயிற மாதிரி நடு மேடை அதிர வில்லுக்கு மேலேயே பாஞ்சேன். கவிஞ்சர் கந்தப்பு கொஞ்சம் சந்தேகமாத்தான் என்னைப் கடைக் கண்ணால பார்த்தார்,என்னவோ திருகுதாளம் செய்யப்போறான் எண்டுறதை போல,

                                                  அதில பேசுவதுக்கு ஒரு வசனமும் எனக்கு இல்லை,அதால வில்லை எடுத்து கவிஞ்சர் கந்தப்பு சொல்லித் தந்த மாதிரி முறிக்கிற நடிப்பு விட என்னோட நடிப்பு அதிகமானதால் ,சீதை என்னைப் பார்த்துச் சொண்டில சிரிக்க, " மங்கையின் புருவம் வில்லாகும் நோக்கிய பார்வை அம்பாகும் மாமலை ஓர் சிறு கடுகாகும்... " என்ற பாடல் நினைவுவர ,என் விரல் தவறுதால கொழுக்கியில் தட்டுப்பட்டு வில்லு ரெண்டா உடைஞ்சு போச்சு, 


                                        சீதை குழம்பி மாலையை எனக்குப் போடவா என்று கவிஞ்சர் கந்தப்புவைப் பார்க்க , கவிஞ்சர் கந்தப்பு தலையில ரெண்டு கையையும் வைச்சுகொண்டு நரி போல பல்லை நற நற என்று நெரிசுக்கொண்டு என்னைப் பார்க்க, பார்வையாளர்கள் என்ன நடக்குது என்று விளங்காமல், ஒருவேளை இராமயணத்தை இப்ப மாற்றி எழுதிப்போட்டான்களா என்று நினைச்சோ என்னவோ விசில் மட்டும் பறந்தது.

                               கவிஞ்சர் கந்தப்பு உடன ஓடி வந்து திரையை இழுத்து ,

                                   " அண்ணலும் மேல் நோக்க, அவளும் சற்று கீழ் நோக்கஎன்னதுவோ நடந்துவிட இருவருமே நிலை தவற ,வானமது பூச்சொரிய வையகத்தின் வாழ்த்தொலிக்க நங்கையவள் மண வைபோகம் மங்கலமாய் நடக்கும் , நாடகம் இடைவேளைக்கு பிறகு தொடரும் "

                                         என்று சொல்லி முழு மேடையையும் திரைச்சீலை யால இழுத்து மறைசுப்போட்டு என்னட்ட வந்தார்,வந்து என்னோட காதைப் பிடிச்சு திருகி,

                                    " செம்மறி ஏண்டா ,,வில்லை உடைச்சனி, 


                                "  தெரியாமல்  கை விரல்  எகிறிப் போட்ட்டுது  ஐயா "

                          "    அது ராமன் தாண்ட்டா உடைக்க வேண்டும் ," 

                             " அப்படியா  பவானியை  பார்க்க  அவளை  யாரோ கொத்திக்கொண்டு  போறது  போல பயம்  வந்திட்ட்டுது "

                     "  அவள்  பவானி  இல்லையடா  ,,அவள்  சீதை  ,,ஜெனகனின்  மகள்  டா,,வால்மிகியின்  இலக்கிய  வடிப்புடா  அவள்  "

                                  "   மன்னித்துக்கொள்ளுங்க  ஐயா !"

                                 " விழுவானே இப்ப நாடகத்தை இடையில நிப்பாட்டி இன்னொருக்க தொடக்கவைச்சுப் போட்டியே,"

                                     "  மன்னித்துக்கொள்ளுங்க  ஐயா ,,இனி  நான்  இப்படி வில்லை  உடைக்க  மாட்டேன்  ஐயா 
                              
                                           " எத்தினை சனம் நீ வில்லை உடைச்சதைப் பார்த்துதுகளோ தெரியாது,ஏண்டா கழுதை வில்லை உடைச்சனி " எண்டு திட்டினார்,

                               நான் சீதையைப் பார்த்துக்கொண்டே

                                          " அய்யா தெரியாமல்,விரல் அந்த கொழுக்கியில தட்டுப்பட ,வில் உடைஞ்சு போச்சு,என்னை மன்னிச்சுக்கொள்ளுங்க அய்யா,நீங்க தானே நானே நடிக்கத் தெரியாது எண் டு சொல்லவும்,என்னோட உடம்பு பொலிவைப் பார்த்து ராசாவுக்கு நடிக்க வற்புறுத்தி பழக்கிநீங்க " 


                                                  என்றேன் .கவிஞ்சர் கந்தப்புக்கு கோபம் வந்திட்டுது,

                                  " அடே விழுவானே நான் வில்லு உடைக்கிற மாதிரி நடிக்க எல்லாட பழகினன்னான் ,நீ ஏண்டா விழுவானே கொழுக்கியை இழுத்து சனத்துக்கு முன்னால பரிசு கெடுத்துப் போட்டியே, "

                                        என்று திட்டினார்,நான் சீதையைப் பார்த்துக்கொண்டு இருந்தேன், அவளும் மாலையை ஒரு ஓரமாக வைச்சுப்போட்டு கவலையோட இருக்கிற மாதிரிதான் இருந்தாள்.

                  அதுக்கு பிறகு,

                                       " ஆயிரத்தின் யானை பலம் படைத்த அசுரக் கோன் , அண்டை தூர தேசம் சேர்ந்த அமர்ந்த வீர மன்னர் வலிமை வீரம் தீரம் நிறைந்த புவியறிந்த வல்லவர் கலிங்கத்து ராஜா வில்லை உடைக்க முயற்சித்து முடியாமல், அந்த முயற்சியில் தன்னோட நாரியை முறிச்சுக்கொண்டு போய் விட்டார் "

                                என்ற கவிஞ்சர் கந்தப்புவின் அறிவிப்போடு, மேடையின் திரை விலக ஆறாவது ராஜா மேடையில் போய் வில்லை உடைக்க முயற்சிப்பதில் இருந்து நாடகம் தொடர்ந்து நடக்க ,நான் நல்லா நாரியை நிமிர்த்திக்கொண்டு, கலிங்கத்து ராஜா சோடனை எல்லாத்தையும் கழட்டி எறிஞ்சு போட்டு மேடையின் பின் பக்கத்தால குதிச்சு போக வெளிக்கிடும் போது,சீதையை பார்த்தேன் அவள் அப்பவும் கையில மாலையோடு கடைசியில் ஸ்ரீராமன் வந்து கொழுக்கியை சுண்டி வில்லை உடைப்பதுக்கு காத்துக்கொண்டு இருந்தாள்,நான் அவளுக்கு சிக்னலில்

                                  " உது சரி வராது பவானி , நான் வில்லை எப்படி ரெண்டா மடக்கி உடைச்சு முறிச்சேன் எண்டு பார்தனி தானே பவானி , பேசாம வா பவானி ஓடிப் போவம் பவானி "

                                    எண்டு கேட்டேன் ,அதை கவிஞ்சர் கந்தப்பு மேடையின் ஓரத்தில் இருந்து கண்ட்டுடு மறுபடியும் நரி போல பல்லை நற நற என்று நெரிசுக்கொண்டு என்னைப் பார்க்க தொடங்கவே நான் சத்தமில்லாமல் வீட்டை போட்டேன். எப்பவும் போல அந்த நாடகம் 


                                                 " பாவையின் பார்வையில் கூர்மையாய் ஒன்று வில்லது விழுந்தது துண்டுகளாய் இரண்டு எட்டடியில் எழில் சுமந்த அழகின் அவதாரம் சொட்டும் அழகில் நிறைந்த சீதையை மணந்தான் திக்கெட்டும் புகழ் நிறைந்த சக்ரவர்த்தி திருமகன் " 

                                                     என்று குடுத்துவைச்ச ஸ்ரீராமன் கொழுக்கியை விரலால் தட்டி சிவதனுசு வில்லை உடைச்சு சுயம்வரம் நடந்து முடியும். அது எல்லாருக்குமே தெரிந்த முடிவுதான்.

                                                   அதுக்குப் பிறகு நாடகம் நடிக்கிறது மட்டுமில்லை,,சும்மாவும் வாசிகசாலைக்கு வம்பளக்கவும் போறதில்லை,ஆனால் எப்படியோ மறுபடியும் கவிஞ்சர் கந்தப்பு போட்ட ஜுலிய சீசர் நாடகத்தில் கிளியோபற்றாவா பொம்பிளை வேஷம் போட்டு நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது,ஆனால் அந்த நாடகத்தில் பொம்பிளை வேஷம் போட்டுக்கொண்டு, மேடையை விட்டு இறங்கி ,,,,,போன நேரம் ஒரு ரோட் சைட் ரோமியாவால் கற்பழிக்கப்படுவதில் இருந்து மயிரிழையில் தப்பிய சம்பவத்தின் பின் நாடகம் நடிப்பதை அடியோடு விட்டேன், ஜுலிய சீசர் நாடகத்தில் எனக்கு நடந்த நாடகத்தைப் பிறகு எழுதுறேன் 


Thursday, 19 March 2015

நாட்டு நடப்புகளின் பேச்சுத்துணை..

அடம் பிடிக்கும்
அவலங்களைச்  
தள்ளி வைத்து விட்டு
நட்பாகச் 
சந்திக்கும் ஒரு 
ரகசிய புள்ளியில் 
கலவரமான 
நவீன கண்டு பிடிப்புக்களின் 
நடமாட்டமில்லாத 
ஊரின் 
பொழுது போக்கு 
நாட்டு நடப்புகளின் 
பேச்சுத்துணை..

எண்ணங்களை
எதிராகப்   பார்க்கும் 
கருத்துக்கள் 
வேண்டுமென்பதுதான் 
லட்சியமென்றாலும் 
குறைந்த பட்சம்
ம் ம் ம் என்று 
ஒத்துக் கொண்டே
பதிலைக் 
விட்டுக் கொடுத்துவிட்டு  
அமர்ந்து விடுகின்றனர்.....

அடிப்படையில்
இடிந்து போன 
அன்றாட வாழ்க்கையை 
தாயக்கட்டை உருட்டி 
விளையாடி 
ஆளுங்கட்சியும் 
எதிர்கட்சியும்
அவர்களின்     
அப்பாவித்தனத்தைத் 
வாக்குகளில் 
பங்கு போட்ட போதும் ....

செய்திகளில் 
எழுப்பப்படும் 
சில ஓங்கிய குரல்களுக்கு
வெள்ளாந்தியான 
மனிதர்களின் 
ஒற்றுமையைப் 
பதிலாக்க 
முடிந்ததென்று 
சந்தோஷப்பட்டுக்கொண்டே 
கிராமங்கள் 
சொர்க்கங்களை 
மறைத்து 
வைத்திருக்கிறது.
                                         
.நாவுக் அரசன்
ஒஸ்லோ 19.03.15

///இந்த வாட்டர் கலர் ஓவியம் ,,புகழ் பெற்ற ஓவியர் ராஜ்குமார் சேதுபதி துரிகையில் வரைந்த அன்றாட மனிதர்கள் என்ற தொகுப்பில் பார்த்த போது இப்படி வரிகளில் எழுதத் தோன்றியது///.

Wednesday, 18 March 2015

நெஞ்சோடு பதிவு செய்தாய்..

வாடைக் காற்றுக்கு
வாழ்க்கைப்பட்ட
மணக் கோலம்
முடிய முன்னமே
அடங்க மறுத்து 
புறப்பட்டுக்கொண்டிருந்த
அழுக்கான
செம்மண் புழுதியில்....
அவசரத்தில்க்
குறுக்க வந்த மாதிரி
மேகங்களின்
நிறைவேறாத
ஆசையின்
கோபம் போல
நேரம் கெட்ட நேரத்தில்
அழுதுகொண்டே
இறங்கியது
கோடை மழை,
ரசிக்கத் தெரியாமல்
சேற்றில் விளையாடி
வெள்ளம்
போட்டு முடியாத
நீர்க் குமிழிகளைத்
தேடித் தேடி
உடைத்தேன்
நான்.....
கைகளை
முடிந்தவரை
அகலமாக்கி
வான் நோக்கி
விரித்து
முகத்தில் விழுந்து
கன்னத்தில் வழிந்த
துளிகளை
துடைக்க மனமிலாமல்
நெஞ்சோடு
பதிவு செய்தாய்
நீ
பிற்காலத்திலும்
மழைக்கு
குடையாகவும்
வெயிலுக்கு
செருப்பாகவும்
நீ
காத்திருக்க
அலட்சியத்தோடு
அலைந்தே
புயல்களை விலைக்கு
வேண்டி
வீணாகிப் போனேன்
நான்.
நாவுக் அரசன்
ஒஸ்லோ 17.03.15

Tuesday, 17 March 2015

1940 ஆண்டு மொடல் ரேஸிங் சைக்கிளுடன்..

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவின் ,முக்கியமான வீதியான கால்ஜோஹான்ஸ் காத்தாவில் உள்ள இந்த சிலை ,1940 இல் இருந்து 1945 வரை தொடந்து ஐந்து வருடம் நோர்வே தழுவிய சைக்கிள் மிதிப்புப் போட்டியில் முதலாவதாக வந்த குன்னர் சொன்ஸ்டபிசன் என்ற இந்த வீரனின் சைக்கிகிள் சம்பியன் ஓடின 1940 ஆண்டு மொடல் ரேஸிங் சைக்கிளுடன் நிக்கும் வெண்கலச் சிலையைச் சென்ற கிழமை சாம்சுங் கலக்ஸ்ஸி என்ற என் மஹாலட்சுமி போன்ற மொபைல் போனில் எடுத்தேன்.
                                         நோர்வே அரைவாசி வருடம் குளிர் உயிரை எடுக்கும் நாடு,கோடைகாலத்தில் மட்டும் சைக்கில் ஓடலாம், அதைவிட ஒஸ்லோ நகரம் வாழ்க்கை போல மேடு பள்ளம் அதிகம் உள்ள பிரதேசம், ஆனாலும் என்னைபோல இங்கே சைக்கில் ஓடுவதில் மிகவும் ஆர்வம் உள்ளவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள்,கோடையில் வீதிகளில் வயது,பால் வேறுபாடு இன்றி இந்த இரண்டு சில்லு இரும்புக் குதிரைகள் பாய்ந்து போவது இயல்பான காட்சி.
                                          கழுத்தில கமராவைக் கொழுவிக்கொண்டு திரியும் " ப்ரோபோசனால் ஸ்டில் போட்டோ கிராபர் " போலப் பல படங்கள் சரிஞ்சு சுழண்டு, நெளிஞ்சு சுழண்டு ,உருண்டு பிரண்டு ,விழுந்து கிடந்தது பரதநாட்டியம் ஆடி இந்த ஒரு சிலையையே ஒரு மணித்தியாலம் பல கோணங்களில் ,முன்னால ,பின்னால ,பக்கவாட்டில் , என்று பாலு மகேந்திரா போலக் கனவு கண்டு கேவலம் என்னோட மொபைல் போன் கமராவில் எடுத்தேன். அதில வந்த ஒரு நல்ல " டைமென்சன் டீட்டேயில் ", " கொன்ச்பெட் டெப்த் " என்று " ப்ரோபோசனல் ஸ்டில் போட்டோ கிராபர் " சொல்லும் விசியங்கள் தற்செயலாகப் பின் பக்கமாக எடுத்த நிலையில் கமராவிற்குள் அகப்பட்ட படம் இது என்று நினைக்கிறேன்.
                                      நேற்று பெய்த இலற்றோனிக் தொழில் நுட்பம் மழையில் இன்று எங்கள் உள்ளங்கையில் உள்ள இன்றைய டிஜிட்டல் உலகத்தில், காளான்கள் போல முளைச்ச இன்பில்ட் கமரா உள்ள மொபைல் போன் வந்தபிறகு தவிச்ச முயல் அடிச்ச நிண்டவன் வந்தவன் போனவன் எல்லாரும் போட்டோக்கிராபர் போல படங்கள் தாறுமாறா கிளிக் கிளிக் என்று கிளிக்கோ கிளிக்கி , அதுகளை வளவுக்குள்ள ஆரும் வரலாம் ஆரும் போகலாம் என்று படலை திறந்து விட்டுக் கிடக்கும் சமூகம் வலை வீசிக்கொண்டிருக்கும் இன்டர்நெற்றில் எல்லாருக்கும் வேலிக்கு மேலால போட்டுக் காட்டி " பழைய பொஞ்சாதி கை வெல்லத்தைப் பார்க்கிலும் புதுக் காதலியின் கைத் தவிடு ருசிபோல " அமர்களமாக்கி அதிர வைக்கிறார்கள்.
                                       என்னதான் நாங்கள் படம் எடுத்தாலும் ,பல வருடமா புகைப்படக் கலையைப் படித்து, கைகளால் கமராவின் கழுத்து லென்ஸ்சைத் திருகித் தூரம் பார்த்து, தொட்டுத் தடவி எட்ட வைச்சுக் கிட்டப் பார்த்து பிரேம் பிடிச்சு ,உள் நுழையும் ஒளியின் அளவை அப்பாச்சரில் அளந்து விட்டு , கமரா கண்ணடிக்கும் சட்டர் பீட் வேக இமைகளைச் சரி செய்து, நிழல்களால் கமராவின் விழிகளுக்கு மஸ்காரா மை பூசி , நிறங்களைத் தேர்ந்தெடுத்து லிப்ஸ்டிக் தடவி, பளிச் பளிச் என்று பிளாஷ் மின்னல் அடிச்சு , மழை பெய்த மாதிரி விரல்களால் ரீலோட் செய்து " மனுவல் செட்டிங்கில் " உண்மையான கலை அம்சமுடன் ஸ்டில் படங்கள் எடுக்கும் " ப்ரோபோசனால் ஸ்டில் போட்டோ கிராபர்களின் " கலைப்படைப்புகள் செலுலோயிட் திரையில் இல் விழுவது போல தலைகீழாக நின்றாலும் நம்மைப் போன்ற அரை அவியல்களால் அவர்கள் போல சொல்லிவைச்சு எடுப்பது கஷ்டம்தான்.
,
.

Monday, 16 March 2015

ஸ்காபுரோ பெபையர் - ஆற்றம்கரையின் அலை

பருவ வயதில் அடக்கி வைக்க முடியாமல் பாலுணர்வு ஹோர்மோன்கள் தொடக்கிவைக்க மன்மதனின் ஐந்து பாணங்களும் பாயும் நேரம் உலகம் எங்கும் காதலர்கள், தங்கள் காதலை ஆண் பெண்ணிடமோ,அல்லது பெண் ஆணிடமோ சொல்லும் விதங்கள் ஏறக்குறைய நாடுகளின் எல்லைகளைத் தாண்டியும் ஒரே மாதிரி தான் ரொமாண்டிக் கலந்த எதிர்பார்ப்புகளுடன் இருக்குது,
                                           16 வயதினிலே படத்தில வரும்" செந்தூரப்பூவே செந்துரப்பூவே " பாடல் எவளவு காதல் விரகதாபத்துடன் தென்றலைத் தூது விட்டு ஒரு செய்திக்குக் காத்திருக்கும் ஒரு இளம் கிராமத்துப் பெண்ணின் ஏக்கத்தை சொல்லுதோ அதே போல, Scarborough Fair என்ற இந்த ஸ்கொட்லாந்து நாடுப்புற நாட்டார்பாடல் மத்தியகால ஆங்கிலத்தில சொல்லுது. அவளவுதான் வித்தியாசம்,
                                            மற்றப்படி ballad ஸ்டைலில் இருக்கும் இதன் தாளநடையை பலர் பலவிதத்தில பாடியுளார்கள் ,முக்கியமா இதன் வாசனங்கள் "typical of the middle English period " ஆங்கிலத்தில் இருக்கும் இந்தப் பாடலை செல்டிக் யாழ், செல்லோ வயலின் , தம்பரின் போன்ற வாத்தியங்களுடன் ஐரிஸ் மக்கள் பாடுகின்றார்கள். இந்தப் பாடலில் வரும் .Between the salt water and the sea strand என்ற வரியில் வரும் strand என்ற சொல்லு நோர்வே நாட்டு நோர்க்ஸ் மொழியில் உள்ளது அதுக்கு அர்த்தம் கடல்,ஆறு போன்றவற்றின் கரை 
                                    ஒரு கிராமப் பெண்ணின் மீது காதலில் விழுந்த ஒரு இளைஞன் ,அந்தப் பெண்னின் காதலை ஏற்றுக்கொள்ள கொஞ்சம் "நடைமுறைக்கு ஒத்துவராத " செயல் ஒன்று அந்தப் பெண் செய்து காட்ட வேண்டும் எண்டும் , "தனக்கு ஒரு ஹம்பரிக் ஷர்ட் தைத்து தரவேண்டும்,ஆனால் அதில துணிகள் வைத்து இனைக்கக்கூடது ,அப்புறம் அதை தண்ணி இல்லாத கிணத்தில தோய்த்து தரவேண்டும் எண்டு , வில்லங்கம் பிடிச்சு " கல்லில நார் உரிச்சுதா " அப்பத்தான் உன் காதலை ஏற்றுக்கொள்வேன் இளம் பெண்ணே என்பதுபோல சொல்லூறான்.
                                         சக்கரவள்ளிக் கிழங்குபோல சிகப்பாக இருக்கும் அந்தப் பாவப்பட்ட இளம்பெண்ணும், தான் அதுகள் எல்லாத்தையும் செய்துவிட்டேன், " Scarborough Fair, சந்தைக்குப் போகும் Parsley, sage, rosemary, thyme என்ற வாசைனை இலை,குழை ,தளைகளே, என் கண்ணாளன் சொன்ன எல்லாத்தையும் நான் செய்துவிட்டேன், என் கண்ணாளனை கண்டால் வீட்டுக்கு வீடுக்கு வந்து என்னை கலியாணம் செய்ய சொல்லுங்க " என்று," tell him to come and he'll have his shirt And he shall be a true love of mine " என்று மனம் உருகி, வஞ்சகம் இல்லாமல் கிராமியத்தனமாக ஆற்றம்கரையில் அலைபாய்ந்து தூது விடுகின்றாள ,
                                       அந்தக் கண்ணாளன் வந்து கலியாணம் காட்டினானா ,அல்லது திருநெல்வேலி இருட்டுக்கடை "அல்வா" கொடுத்திட்டுக் கம்பி நீட்டிணாணா எண்டு இந்தப் பாடலில் இல்லை. எனக்கும் ஐரிஸ் மொழி வரலாறு தெரியாது. ஆனால் இதுவும் காதவர்ராஜன்-ஆரியப்பூமாலை தமிழ் வரலாற்று காதல் நாடகம் போல, ஒரு தொடர் நாடகமாக middle English period இல் இருந்திருக்காம்.
                                            எனக்கு மிகவும் பிடித்தபாடல் "Scarborough Fair" என்பதால் மிகவும் மனதிருப்தியாக சில வருடங்களின் முன் " pan flute " என்ற லத்தின் அமரிக்க பழங்குடியினர் வாசிக்கும் புல்லான்குழல் போன்ற காற்று வாத்தியத்தில் அவர்கள் வாசித்த, CD ஒன்று வாங்கி இருந்தேன் ,அதில இந்த பாடலும் இருந்தது ,அதை எப்போதும் கேட்பேன் , பஸ்சில ,ட்ரெயினில் வேலைக்கு போகும்போதும் வரும்போதும் சக்கரவள்ளிக் கிழங்குபோல சிகப்பாக இருக்கும் இளம் பெண்களைக் கண்டாள் சத்தமில்லாமல் வாயிற்குள் " ஹம் " பண்ணிப் பாடுவேன்.
                                முக்கியமா உலகப் புகழ் பெற்ற பாடகர் டேவிட் வித்தாகர் என்ற ஜெர்மன் நாட்டு பாடகர் பாடிய வேர்சனும் என்னிடம் இருந்தது, அதில இருந்து கிளாசிக்கல் இசை நுணுக்க ஐடியாவை உருவி எடுத்து , இந்தப் பாடலை நானே பிண்ணனி ரிதம் கிட்டார் வாசித்து,சின்னமேளம் வாசித்து  கிளாசிகல் ஸ்டைலில் , அக்கொச்டிக் கிட்டாரில முடிந்தளவு ஒரு " கிளாசிகல் பிங்கர் பிளக்கிங் ஸ்டைல் " என்ற இசைக்கும் முறையில் விரல்களால் மீட்டி கிட்டாருக்கே நோகாமல் நானும் வாசித்துள்ளேன்
https://www.youtube.com/watch?v=TmBNkO4w2Ac

Sunday, 15 March 2015

விழுந்த பூக்களின் வாசம்..

புறக்கணிக்கப்பட்டிருக்கும்
வாசலெங்கும்
வெயில் விழுந்து
இன்னும்
ஈரம் உலராத 
புழுதியின் விரிப்பில்
மிச்சமாயிருக்கிறது
ஒரு
கவிதைத் தொகுதி.....
சுழல் காற்றின்
தாண்டவத்தில்
தவறி
விழுந்த பூக்களின்
வாசம்
அவைகளின்
நினைவுகளை
உயிர்வாழ வைக்க
மரத்துக்குத்
தேவையாக இருக்கிறது....
புயல்
வீசத் தொடங்கிய
பொழுதில்
பாதிக்கப்பட்டு
மலராமலே
சின்னாபின்னமாகி
விடுமோவென்று
அச்சப்படுவது
போலிருந்தது
மொடுக்களுக்கு .
உதிர்ந்து விழுந்த
இலைகளும்
மலர்களும்
உரையாடுவதைக்
கேட்காமல்
வேடிக்கை
பார்த்து விட்டுச் செல்லும்
திசைகளின் காற்று
இன்னுமொருமுறை
விருட்சத்தை
சுழற்றுகிறது..
மலர்களின்
அவல
ஓசைகள்
கேட்டிடக் கூடாதென
காதுகளை மீண்டும்
அடைத்து
கண்களை மூடிவிடுகிறது
அதிகாலைப்
பூச்சிகள்.
.

வர்ஜீனியா நிக்கலோய் நிங்கி ...புத்தம் புதுக் காலை!

இந்த ஹொலண்ட் நாட்டு வெள்ளைப் பெண்மணி நின்கி (வர்யீனியா நிக்கொலோய்(?) ) இளையராஜாவின் ஒர்க்ச்றாவில் என்பதுக்களில் இசை இயற்கையாய் இருந்த காலத்தில் இதயம் வரை இறங்கி இசை தந்த எங்கள் இளைய ராஜாவின் ரேக்கொர்டிங்கில் கிட்டதட்ட மிகப் பிரபலமான இருபது பாடல்களுக்கு புல்லாங்குழல் வாசித்தவா , 

வெஸ்டர்ன் கிளாசிகல் முறையில் புல்லாங்குழல், வெஸ்டேர்ன் கிளாசிகல் சிம்பொனி இசை, வெஸ்டர்ன் கிளாசிகல் பியானோ படித்த மேதையான நிங்கி ,இந்திய இசையில் மயங்கி இந்தியா வந்தவா , தமிழ் நாட்டு சுற்றிப் பார்த்து இளையராஜாவின் புல்லாங்குழல் தமிழ் சினிமா பாடல்களில் அதிசயிக்க வைத்தது கண்டு அவரிடம் போய் அவரின் இசை அமைப்பில் வாசிக்க வேண்டும் எண்டு கேட்டு இருக்கிறா.

அந்த நேரத்தில் சுதாகர் என்பவரும்,பின் நாட்களின் அருண்மொழி என்ற நெப்போலியன் செல்வராச் ராஜாவுக்கு ஒர்க்ச்றாவில் புல்லங்குழல் வாசிதவர்கள் இருந்தும் , இளைய ராஜா நின்கிக்கும் பல பாடல்கள் வாசிக்க கொடுத்தார் ,

அதில் "அலைகள் ஓய்வதில்லை " படத்தில் வரும் "புத்தம் புது காலை வரும் " பாடல், "மூன்றாம் பிறை" படத்தில் சுதாகருடன் சேர்ந்து " பூங்காற்று " என்ற பாடலும் வேறு பல பாடல்களுக்கும் வாசித்து இருக்கின்றா ." ஜானி " படத்தில வார ராஜாவின் "ஆசைய காதில தூதுவிட்டு " பாடலில் நின்கி ,ராஜா கொடுத்த நோட்ஸ் சோடா தன்னோட கொஞ்ச நோட்ஸ் இசையையும் இனைதாவாம், ராஜ சிரிச்சுப் போட்டு ,ஒண்டும் சொல்லவில்லையாம் .

ராஜாவின் ஆஸ்தான புலான்குழல் ஆர்டிஸ்ட் களில் ஒருவரான முதல் மரியாதை புகழ் சுதாகர் பல வெஸ்டர்ன் டெக்னிக்குகள் அவாவிடம் இருந்து கற்றதா ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்,

அந்த " நின்கி என்ற female classical flautists வெள்ளைக்கார அம்மணிக்கு எப்பவுமே நான் நன்றியுடையவன் " எண்டு ஒரு TV பட்டியில் சொன்னார் . நின்கி "one of the top 10 Flutists at that time" என்ற "லெவலில் " தமிழ் கலாசார அடையாள வாத்தியமான புலான்குழல் இல் தமிழ்நாடில கலக்கி இருக்குறா !

நின்கி மிகவும் திறமை சாலி , பாடல் இசை அமைத்து, ரெகார்டிங் தொடங்கமுன் ,மற்ற ஒர்கேச்டிரா வாத்தியகாரர்கள் இளையராஜா எழுதிக்கொடுத்த "நோட்ஸ்" களை வைத்து இசை அமைப்பில் நேரம் எடுத்து பிரக்டிஸ்ட் பண்ணிக்கொண்டு இருந்தபோது, நின்கி அவாவோட புலான்குழல் " ஸ்கோர் நோட்ஸ்" ஐ இளையராஜவுக்கு உடனையே,அழுத்தம் திருத்தமாக,வாசித்துக் காடிப்போட்டு பேசாம,ஒரு ஓரமாக இருந்து ஆங்கில நாவல் வாசிப்பாவாம், சிலநேரம்" ரெகார்டிங் ஸ்டுடியோ"வுக்கு வெளியபோய் ,சின்னப் பையன்களுடன் "பல்லாங்குழி" விலாயாடுவாவாம்.

நின்கி ஹொலண்ட் நாட்டுகாரகளுக்கே உரிய மெலிந்த தோற்றம் உடைய,உயரமான பெண்மணி, மசால் தோசை , சட்னி சாம்பாருடன் விரும்பி சாப்டுவாவாம் ,இந்திய தமிழ் கலாசாரப்படியே இளையராஜாவின் ரேகொர்டிங் ஸ்டுடியோவுக்கு சேலை கட்டி , சாந்துப் போட்டு வைத்து கொண்டுதான் ரேச்ர்டிங்குக்கு வருவாவாம் !

நின்கி "தான் போன பிறப்பில இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும் " எண்டு அவாவோட இளையராஜாவின் ஆர்கிஸ்ராவில் வாசித்த இசைகலைஞ்சர்களுக்கு சொல்லி சிரிபாவாம் ,

நின்கி ஒரு கட்டத்தில ராஜாவின் ஆர்கேச்ற்றாவில் இருந்து விலத்தி,பழையபடி ஹொலண்ட் போயிட்டா ,காரணம் ஒரு சக தமிழ் இசைகலைஞ்சரை காதலித்ததாகவும் , ஏற்கனவே திருமணமான அவர், நின்கிங்கு பொய் சொல்லி அவாவை "பயன்படுத்தியதாகவும்" சொல்லுறார்கள்(?), சரியா தெரியாது!

நின்கி என்ற வர்ஜினியா நிகொலோய் என்ற இந்த ஹோலந்த் ( நெதர்லாந்து ) நாட்டு வெள்ளைகாரி தமிழாநாடு வந்து ,தமிழ் சினிமாவில், இளையராவின் இசையிட்கு புல்லாங்குழல் வாசித்தது அந்த மூங்கில்கள் தவம் இருந்து செய்த புண்ணியதின் பலன் ,வேற என்ன?............

ஒரு கட்டத்தில் யாருக்குமே தன் அடையாளத்தை சொல்லாமல் ,தமிழ் சினிமா இசையில் தன் பங்களிப்பை பதிவு செய்த நின்கி என்ற வர்யீனியா நிக்கொலோய் ஒரு தடயமே இல்லாமல் ஐரோப்பா போய் ,தன் தாய் நாடு ஹொலண்டில் நோய் வாய்ப்பட்டு இறந்துபோய் விட்டதாகவும் சொல்லுறார்கள் !
.


நாவுக் அரசன்
ஒஸ்லோ.