Wednesday 14 October 2015

"பொம்மை வீடு " ஒரு சமூகப் பிறழ்வு

யாழ்பாணத்தில புத்தகங்கள் படித்த காலத்தில, நோர்வே நாட்டு ஹென்றிக் இப்சன் என்ற ஒரு நோர்வேயிய எழுத்தாளரின் நாடகத்தை, எளிய தமிழில் மொழிபெயர்த்து வந்த "பொம்மை வீடு " என்ற சுருக்கிய புத்தகத்தைப் படித்த நினைவு இருக்கு!
                               அந்தக் காலத்தில் அப்படி நிறைய வெளிநாட்டு எழுத்தாளரின் புத்தகங்கள் சுருக்கிய வடிவில் வந்திருக்கு! உள்ளூர் ஆட்கள் எழுதுதும் ஜீவாவின் " மல்லிகை" , ஜேசுராசாவின் "அலை", போன்ற இலக்கிய சஞ்சிகைகளிலும் வெளிநாட்டு எழுத்தாளர்களின் கதைகள், கவிதைகள் மொழிபெயர்த்து வந்திருக்கு !
                                ஹென்றிக் இப்சன், நோவேயில் 18ம் நுற்றாண்டில் வசித்த ஒரு நடக்க ஆசியர் ,அவரை ஆங்கில மேடை நாடக இலக்கியத்தின் தந்தை வில்லியம் சேக்ஸ்பியருக்கு அடுத்ததாகச் சொல்லுறார்கள் !
                          யாழ்பாணத்தில அவரின் "பொம்மை வீடு " படித்த போது உலக இலக்கியம் எல்லாம் பிரித்துமேயும் அளவுக்கு அறிவு இல்லை ,சும்மா வாசித்த நினைவு இருக்கு அதில வாற நோரா என்ற பெண்மணியின் வாழ்கை மட்டும் இன்றுவரை நினைவு இருக்கு !
                          சில வருடம் முன் நோர்வேயில் அவரின் "பொம்மை வீடு " நாடகத்தை தேட , அது மூன்று பெரிய புத்தகமாக இருக்க , அதை எப்படி யாழ்பாணத்தில சுருக்கிய புத்தகமாக ஒரு நெருப்புப் பெட்டி சைசுக்கு மொழிபெயர்த்தார்கள் எண்டு குழப்பமா இருந்தது !
                                       நோர்வே மொழியில் "பொம்மை வீட்டை " கொஞ்சம் நோன்டிபார்க்க , அது வேற மாதிரி அனுபவம் கொடுத்தது ! யாழ்பாணத்தில வாசித்து நோர்வேயிய மொழியில் இருந்து நேரடியாக மொளிபியர்ததா அல்லது மொழிபெயர்த்ததா என்பதிலேயே குழப்பம் வந்தது !

                            "பொம்மை வீடு " ஒரு சமூகப் பிறழ்வு நாடகம் ஹென்றிக் இப்சன் எழுதிய எல்லா நடகங் களும், அந்தக்கால , வறிய, ஆண் ஆதிக்க , நோர்வேயின் 18 ம் நுற்றாண்டு சமுக வாழ்கை அவலம் என்கிறார்கள் !
                                    பெண்கள் மீது இரக்கம் உடையவர் இப்பசன்.அதுக்கு காரணம் அவரின் சின்ன வயசில் பெற்றோர்கள் வறுமையில் வாடிய நேரம் ,உயர்குடிப் பிரபுக்களின் வைப்பாடிக்கள் வீட்டில் அவர் எடுபிடியாக வேலை செய்துதான் வளர்ந்தார்.
                                  அந்தப் பெண்கள் அவரோடு அன்போடும் கனிவோடும் அவரை தங்கள் பிள்ளைபோல வளர்த்ததால்,பின்நாட்களில் அவர் ஒரு சிறந்த நாடக ஆசிரியர் ஆனபின் முடிந்தவரை பெண்களின் அவலத்தை, அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளை எல்லாம் நாடகத்தில் எழுதினார்
                                   பெண்கள் பிறந்ததே கலியாணம் கட்டவும் ,பிள்ளை பெறவும் ,குடும்பத்தைக் காக்கவும் என்பதை உடைத்து நோரா என்ற பெண்மணி ஆண்களைப் போல உலக விசியன்களில் நாட்டம் கொள்ள , அதை சுற்றி நடக்கும் குடும்ப சமுதாய பிரிவினை தான் "பொம்மை வீடு " நாடகம் என்கிறாகள் !
                                         நோரா அப்படி குடும்ப சமூக எல்லைகளை உடைத்தபோது எவளவு விமர்சனம் யதார்த்த வாழ்கையில் வந்திருக்குமோ அவளவு விமர்சனம் ஹென்றிக் இப்சன் எழுதிய "பொம்மை வீடு " நாடகத்துக்கும் பிற்போக்கு , கட்டுப்பெட்டி 18ம் நுற்றாண்டு நோர்வேயில் வந்ததாம் !
                                       ஒரு மொழி என்பது கலாசாரம் ,சமூக ,வாழ்வியல் சம்பனதமானது ! ஒரு மொழியின் ஆளுமை அந்தத் தாய் மொழியில் எழுதிய இலக்கியங்களில் இருக்கு. பிற மொழியில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கும் பலர் வெறும் மொழி வல்லுணரா மட்டும் இருந்தால் பல விசியங்கள் மொளிபெயர்ப்பில் இருட்டு அடி வேண்டின மாதிரி இருக்கும் ,
                                சரி அப்ப வேறு எப்படி பிறமொழி இலக்கியத்தை தாய் மொழியில் மாற்றுவது என்றால் ? அவர்களே கொஞ்சம் இலக்கிய சம்பந்தப்பட்டவர்களாயின் ,உயிரோடு விளையாடியும் இதயம் கிழிபாடாமல் மூல செய்தி வந்துசேர வாய்ப்பு இருக்கு ! "பொம்மை வீட்டை " வாசிக்க அப்படி நல்லதும் ,கெட்டதும் நடந்திருக்க வாய்ப்பு இருக்குபோல இருக்கு !
                                        
                                         இந்தப் படத்தில் பின்னுக்கு உள்ள கட்டிடம் "நேஷனல் தியட்டர் " என்ற ஹென்றிக் இப்சன் நாடகங்கள் அரங்கேறிய இடம் ,இதற்கு அருகில் ,தங்களில் இலக்கியப் பிதா ஹென்றிக் இப்சன்சனுக்கு வெங்கலத்தில் சிலைவைத்து கவுரவிதுள்ளார்கள் நோர்வேயிய மக்கள். இப்சன் எழுதிய நாடகங்கள் இன்றைக்கும் இங்கே நடக்குது ! அவர் மீதும் அவரின் இலக்கியதின் மீதும் மதிப்புள்ள பல வெளிநாட்டினரே வந்து பார்க்கிறார்கள் !
                                           நான் ஒரு நாடகமும் இதுக்குள்ள போய் இன்னும் பார்க்கவில்லை ! ஒருவேளை எனக்கு இன்னும் அந்தளவு இலக்கிய முதிர்ச்சி வரவில்லையோ தெரியவில்லை .பொதுவாக எனக்கு 18ம் நுற்றாண்டு கிளாசிகல் முயூஸிக், ஓவிய ,இலக்கிய விசியங்கள் கேட்க ,படிக்க ,பார்க்கப் பொறுமை இல்லை , அந்த வரலாற்று முக்கிய இடங்களுக்கு முன்னால நிண்டு, எதோ பெரிய அறிவுக்கொழுந்து போலப் படம் எடுக்க மட்டும் நல்ல விருப்பம் !!!
.
.

No comments :

Post a Comment